Friday 23 December 2011

கடவுள் ஆஸ்கர் எல்லாம் கொடுக்குறாரா என்ன?"உண்மை" தமிழன் பாரீர்!!!!!

ஏ.ஆர் ரகுமான் பிரபலமானது ரோஜா என்னும் தமிழ் படத்தின் மூலம்!மேலும் அவர் ஆஸ்கர் வாங்கியபோது தமிழில் பேசுனதுக்கு எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சிலாகித்தனர்!இவரல்லவோ உண்மை தமிழன் என்று சொன்னார்கள்!தமிழனுக்கு பெருமை தமிழ்நாட்டுக்கு பெருமை அப்படின்னு மக்கள் எங்கும் திரண்டு கொண்டாடினர்!
ஆனால்  இத்தகைய ஒரு மனிதர் எத்தகைய பேச்சை இப்போது பேசியுள்ளார்ன்னு   பாருங்க!தமிழனுக்கு துரோகம் இழைப்பதர்காகவே கேரளத்தவன்  காசு கொடுத்து எடுக்க சொன்ன படம் Dam999.

          கூடங்குளம் பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரமது!பல லட்சம்மக்கள் பசி தூக்கம் எல்லாவற்றையும் மறந்து போராடி கொண்டிருந்தனர்!மத்திய அரசுக்கு இது பெரும் சிக்கலானது!இந்த நேரத்தில் எரிகிற குடிசையில் பீடி பற்றவைப்பது போல வந்தது Dam999 படம்!இது முல்லை பெரியாறு அணை உடைந்து அதனால் பலகிராமங்கள் மூழ்குவது பற்றிய ஒரு படம்!அதனால் இது தமிழகத்தில் தடை செய்யப்பட்டது!
           ஆனால் இது தொடக்கமே!இதன் தொடர்ச்சியாக அணை பற்றிய  பல போலியான தகவல்களை பரப்பி விட்டது கேரளம்!இதனால் அங்குள்ள தமிழர்கள் மற்றும் சபரிமலைக்கு செல்வோர் அடித்து நொறுக்கப்பட்டது என இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்!
          இத்தகைய தமிழக மக்களுக்கு துரோகம்இழைக்கும் ஒரு படத்தை பற்றி சிலாகித்து சொல்வதன் மூலம் ரகுமான் தனது "தமிழ் விசுவாசத்தை" காட்டியுள்ளார்!
      இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.(ஆமா கடவுள் ஆஸ்கர் பரிந்துரை குழுவில் இருப்பதை சொல்லவே இல்ல!)
     "உண்மை" தமிழனின் பேச்சு!

ஆக  எவனையாவது நம்பி ஏமாறுவது தமிழனின் பிறவி குணம்!முன்பு ரஜினிகாந்தை நம்பி ஏமாந்தனர்!இப்போ ஏமாறுவதுக்கு ஆள் தேடி கொண்டிருந்தனர்!நல்லா கிடைச்சாரு  மாயமான்!சாரி ரகுமான்!
சோறு போட்ட கையை வெட்டுவது போல இவர் சொல்லியுள்ள கருத்து எவ்வளவு அசிங்கத்தை இவர் மனதில் வைத்துள்ளார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் மீது இவர் வைத்த்துள்ள "பாசத்தையும்" இது தெளிவாக காட்டுது!இரைச்சல் நாயகனின் மேலும் ஒரு இரைச்சல் இது!
 


No comments:

Post a Comment