Wednesday 9 May 2012

Kahaani -டோன்ட் மிஸ் இட்

                 பொதுவாகவே த்ரில்லர் என்றால் நல்லவன்-கெட்டவன் அப்பால கெட்டவனை ஹீரோ சென்று அழிப்பது(சைக்கிள கேப்பில் தனது கர்ப்பிணி மனைவிக்கு வில்லனால் வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது) ஆகாயத்தில் கம்பி கட்டி சுழல்வது ந்யூட்டன் விதிகளுக்கு மாறாக சேட்டைகளை ஆகாயத்தில் செய்வது அதற்கு ஹோ ஹோ ஹோ என்று காதை செவிடாக்கும் இசை கொடுப்பது போன்ற அபத்தங்களையே பார்த்து புளித்து போன எனக்கு(நமக்கு என்றும் கூட சொல்வது பொருந்தும்) இந்த படம் உண்மையிலேயே ஆறுதலாக இருந்தது.
         இந்த படத்தின் காட்சிகளையோ அல்லது முக்கிய திருப்பங்கலையோ சொல்லிவிட்டால் படம் பார்ப்பதே வேஸ்ட்!குறைகள் படத்தில் இருந்தாலும் நாம் அதை மனதில் கொண்டு செல்லாதவாறு திரைக்கதை சில்லிட வைக்கிறது.

         வித்யா பாலன் Dirty picture படத்துக்கு தேசிய விருது பெற்றது சரியா தவறா என்ற விவாதம் முடியும் முன்பே நான் அதற்கு தகுதியான ஆள்தான் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்(க்ளைமாக்சில் அவர் பேசும் அந்த காட்சி ஒரு சிறந்த உதாரணம்) கர்ப்பிணி பெண்களுக்கே உரிய கால்களை சற்று அகட்டி வைத்து நடப்பது காலை ஆட்டிக்கொண்டே இருப்பது போன்ற மிக சிறு உடல்மொழிகளை கூட சரியாகவே செய்துள்ளார்!
        இந்த படைத்திருக்கும் அவர் தேசிய விருது பெறுவார் என சொல்லப்படுகிறது.அதோடு பேசப்படும் இன்னொரு தேசிய விருது நாமினி உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் Nawazuddin Siddiqui .எனக்கு உயிரே படத்தில் அபாரமாக நடித்த ஒரு சிபிஐ (பிரகாஷ் ராஜ டப்பிங் பேசியிருப்பார்) அதிகாரியாக  நடித்த அந்த நபரை நியாபகபடுத்தியது! "அடுத்த இர்பான்கான்" என சொல்லப்படும் இவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.மற்றபடி ஒவ்வொருவருமே தங்களது பணியை செவ்வனே செய்துள்ளனர்!சிறுவர்கள் கூட அருமையாக கதைக்கு ஒன்றி நடிக்க வைத்தது இயக்குனரின் திறமையை காட்டுகிறது.
         பின்னணி இசை படத்தில் வரும் முதுகு தண்டு சில்லிடும் காட்சிகளை மேலும் சில்லிட வைப்பதாக உள்ளது  
        மற்றொரு அபார பலம் கொல்கத்தா பின்னணி.மிகவும் அருமையாக அந்த பின்னணி கதையோடு ஒன்றி பயனித்துள்ளது.
       நூறு இரநூறு கோடி செலவில் க்ராபிக்சே சரணம் என எடுக்கப்பட்டு தோல்வி அடைந்த படங்களுக்கு மத்தியில் எட்டு கோடி செலவில் மிக அருமையான ஒரு படம்(கிராபிக்ஸ் மற்றும் நான் மேலே முதல் பாராவில் சொன்ன க்லீஷேக்கள் இல்லாமல்)எடுத்திருப்பது மிக நல்ல விஷயம்.இடைவேளை காட்சி நிஜமாலுமே திகிலூட்டியது. திரைஅரங்கில் பார்த்தோர் எப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சிக்குஉள்ளாகி இருப்பர் என நினைத்தேன்.நமக்கு அந்த வாய்ப்பு இல்லை!சப் டைட்டில் இல்லாமல் பார்க்க முடியாதே!
அடுத்து  நான் பார்க்கநினைத்திருக்கும் படமும் லோ பட்ஜெட் அதே நேரம் நல்ல திரைப்படம்.அது- Paan Singh Tomar.பார்த்துவிட்டு சொல்கிறேன்


3 comments:

Geetha said...

படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியிருக்கிறது உங்கள் வர்ணனை! நன்றி! :)

MGK said...

அருமையான படைப்பு...கஹானி

Vadakkupatti Raamsami said...

@G-RAM!
டோன்ட் மிஸ் இட்
*
@MGK
முற்றிலும் உண்மை

Post a Comment