Monday 1 April 2013

எலங்கையை கண்டித்து தமிழ் நடிகர்கள் உண்ணாவிரதம் (ஒரு கற்பனை)

  இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே..நகைச்சுவைக்காகவே கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.எந்த மனிதரையோ, வாழும் உயிரினங்களையோ, ஹிக்ஸ் போஸான்களையோ  தனிப்பட்ட விதத்தில்  புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.
************************************************************************************

கஜீத் வருகிறார்.மேடை ஏறுகிறார்.அப்போது ககாநதி பங்கர் வந்து கல நீ ஆடு கல என்கிறார்
கவுண்டர்: டேய் கிட்டத்தட்ட ஆறடி ஒசரத்தில் ஒரு மனுசன் நிக்குறாரு..நீ என்னடான்னா நக்கலா அவர ஆடுன்னு சொல்ற..மாத்தி சொல்டா
ககாநதி டெரர் ஆகி  : கல நீ மனுசன் கல
கவுண்டர்: இது...
 கஜீத் : அய்யா மெரட்றாங்கய்யா...
கவுண்டர்: அண்ணா  ஆட்சி மாறி ரெண்டு வருஷம் ஆகுதுங்ணா ..
கஜீத் : அண்ணே சாரிண்ணே...போன தடவ ஒரு டமில் டீச்சர்கிட்ட எளுதி வாங்கி வந்ததை அப்படியே படிச்சிட்டேன்..

(திருத்திக்கொண்டு பேசுகிறார்)
 அம்மா மெரட்றாங்கம்மா As I am suffering from fever அப்படின்னு லெட்டர் எழுதி கொடுத்தாலும்  மெரட்றாங்கம்மா.எனக்கு யாரை பற்றியும் கவலை இல்லைம்மா...என்னோட லட்சியமே  ஒரு டூபர் ஷ்டார் நாக்காலி வாங்கணும்..அவ்வளவுதான்.
 கவுண்டர்: யப்பா யாருப்பா அங்க?அண்ணனுக்கு ஒரு டூப்பர் ஸ்டார் நாற்காலி பார்சல் பண்ணுங்க அப்புறமாவது படங்களில் நடையா நடப்பதை நிறுத்துறாரான்னு பார்ப்போம்.
 கஜீத்: அண்ணே கிண்டல் பண்ணாதீங்கண்ணே
கவுண்டர்: சரி சுண்டல் பண்ணிடுவோம்..என சொல்ல கோதாரவி வந்து முறைத்துவிட்டு போகிறார்.
கஜீத்:(திடீரென்று பேட்டி கொடுப்பதன் நினைவில்  இங்குலீசில் பேசுகிறார்) ஹியர் ஆப்டர் சிக்ஸ் மந்த்ஸ் ரேஸ். சிக்ஸ் மந்த்ஸ் ஷூட்டிங்...ஐ ஹாவ் ஸ்டார்டட் எ வெப்சைட் இட்ஸ் கால்ட் ப்ளையிங் காடை..இட் வில் பி அப்டேட்டட் எவ்ரி ஹவர்.
கவுண்டர்: என்ன பேசுராருன்னே புரியல..யப்பா யாருன்னா பக்கத்துல நின்னு மொழிபெயர்ப்பு செய்ங்க
கஜீத்: அண்ணே பல தவுசண்ட்ஸ்  ஸ்பென்ட் பண்ணி கபிடெக்ஸ் கோர்ஸ் முடிச்சிருக்கேன்.எங்கையாவது அதை பில்டப்பா காட்டாட்டி எப்டிண்ணே?
கவுண்டர்: அது சரிங்ண்ணா நீங் தமிழே ஒழுங்கா பேசாம பல படங்களில் திண்டாடுறீங்களே? தமிழ் கோச்சிங் போய் அதை ஒழுங்கா ஏன் கத்துக்கல?
கஜீத்: அண்ணே கமிழ் நாட்டு பீப்பிள்சே டமில் பேசுறதில்ல..தென் வொய் ஆர் யூ ஆஸ்கிங் மீ?டமில் தப்பா பேசுனா புத்திசாலின்னு சொல்வாங்க. இங்க்லீஷ் தப்பா பேசுனா சிரிப்பாங்கண்ணே.
கவுண்டர்: ரொம்ப வெவரமாத்தான் பேசுறாரு...ஹ்ம்ம்...சரி நீங்க கண்டின்யூ பண்ணுங்க..
கஜீத்: இத்துடன் ஐ கம்ப்ளீட் மை ஸ்பீச்.தாங்க்ஸ்.
கவுண்டர்: சரி சரி பேசிட்டீங்க இல்ல?அடுத்தது யாருப்பா?
*********************************************************************************
 நடுவில் கசன்னா பினேகா வந்து  "உண்ணாவிரத போராட்டத்தின் இந்த பகுதியை வழங்குவோர் குரங்கு மார்க் லுங்கிகள்" அணிந்தால் சுகம் தருமே தினம்.....டிங் டிங் டிங்....என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.
கவுண்டர்: ஐயோ பாவம் யார் பெத்த புள்ளைங்களோ இப்படி விளம்பர உலகுக்கே ஒட்டு மொத்தமா தங்களை நேர்ந்து விட்டுட்டு சுத்துதுங்க.சரி அடுத்து யாருப்பா?
**********************************************************************************

கஜினிகாந்த் வருகிறார்....உய்..உய்...உய்...விசில் சத்தம் வானை பிளக்கிறது.கஜினி கையை தூக்கி வணக்கம் சொல்கிறார்.
கவுண்டர்: அட என்னப்பா நீ... கைய வேற கால வேற தனி தனியா தூக்கிட்டு இருப்பியா?
கஜினி : இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை தர மாட்டாங்கன்னு சொன்னா....(நீண்ண்ண்ட இடைவெளி விடுகிறார்)
கவுண்டர்: சொன்னா என்ன? அதான் சொல்லிகிட்டே இருக்காங்களே?
(கோதா ரவி சும்மா இருக்கும்படி சைகை செய்கிறார்)
கஜினி பேசாமல்  திடீரென்று ஏதோ ஒரு வெற்று வெளியை தொடர்ந்து பார்த்துகொண்டிருக்கிறார்.
கவுண்டர்: இவுரு என்ன ராம்கோபால் வர்மா படத்துல வர்ற  சிறுமி பேயை பாத்தா மாதிரி எங்கையோ பாக்குறாரு.அண்ணா பேசுங்க்ணா
கஜினி: ஆ!....எங்க விட்டேன்?ஆ! சம உரிமை தரமாட்டோம்னு சொன்னா..ஒர்ரே நாள்ல....நம்ம ராணுவம் அவுங்கள விரட்டி அடிக்கும்... அடிக்கணும்
கவுண்டர்: அண்ணா இது உங்க பட திரைக்கதை விவாதம் இல்லீங்க்ணா
       கன்சூர் கலி கான் அருகில் வந்து  தலையை சாய்த்து முறைக்கிறார்..
கவுண்டர்: டேய் இந்த வியாதிக்கெல்லாம் மருந்து எப்பவோ கண்டு பிடிச்சிட்டாங்கைய்யா. இன்னும் தொங்கிப்போன தலையோட சுத்துற என கன்சூரை திருப்பி அனுப்பி வைக்கிறார்.

கவுண்டர்: அட  என்னடா இது... கோதாரவி  ஒரு பக்கம் கடுவன் பூனை மாதிரி..இன்னொரு பக்கம் கன்சூர்  வேற..இம்சையா போச்சு..
கஜினி: நான் வந்து .....(யோசிக்கிறார்)...நான் வந்து.....
கவுண்டர் : அதான் வந்துட்டீங்களே..
கஜினி: நா வந்து பம்பாய் போனா கன்னடன்னு சொல்றாங்க..பெங்களூரு போனா 'தமிழன் இங்க உனக்கென்ன வேலைன்னு சொல்றாங்க... தமிழ்நாட்டுக்கு வந்தா நீ கன்னடன் இங்க என்ன பண்ற?'ன்னு கேக்குறாங்க..இப்படி எல்லாருமே கேட்டா நா எங்க போவேன்?
கவுண்டர்: காஞ்ச் போன பூமியெல்லாம் வற்றாத நதிய பாத்து ஆறுதல்படும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா??..இஹு இஹு இஹு (அழுவது போல பாவ்லா செய்கிறார்)
கோதாரவி வந்து கவுண்டர் காதில் கிசுகிசுக்கிறார்...
யோவ் உனக்கு பேச நேரம் வரும்போது பேசலாம் அதுவரைக்கும் சும்மா இருய்யா
கவுண்டர்: என்னது என்ன பேச சொல்வீங்களா?இந்த டகால்டி வேலை எல்லாம் என்கிட்டே நடக்காது..நா பேசுனா எல்லார் வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடும்னு உங்களுக்கு தெரியாதா என்ன?
கோதாரவி: உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?கொஞ்சம் சும்மா இருய்யா
கஜினி : நா வந்து தலைப்புக்கு சம்மந்தம் இல்லாம பேசுறேன்னு நினைக்கிறேன்
கவுண்டர்: யப்பா உண்மைய ஒப்புகிட்டீங்களே..
கஜினி: கஞ்சை கத் என்ற அப்பாவியை ஆறு வருஷம் சிறையில் அடைக்க போறாங்கன்னு சொன்னா...அது வந்து...நா வந்து...எப்டி சொல்றது..அது ..சரியில்ல..தப்பு..கஞ்சை கத் வாய்ல வெரல வச்சாலும் கடிக்க தெரியாத புள்ள..அவர வந்து இப்டி உள்ள தள்றது நல்லதா இல்ல.
கவுண்டர்: அண்ணா அதுக்கும் இந்த கூட்டத்துக்கும் என்னங்கணா சம்மந்தம்?
கஜினி: கண்ணா சம்மந்தம் இல்லாம பேசி குட்டையை கொழப்புறதுதான் என் வழி குழப்பும் வழி.இஹா ஹா ஹா ...
கவுண்டர்: யப்பா ஒருவழியா வாயை தொறந்து உண்மையை ஒப்புகிட்டாரு.
**********************************************************************************
அடுத்து விமலஹாசன் வருகிறார்.அவர் வரும் போதே சிலர் குறுக்கே படுத்துக்கொண்டு பேச விடாமல் தடை செய்கிறார்கள்.அவர்களைத்தாண்டி லாங் ஜம்ப் செய்து  வந்து பேச துவங்குகிறார்
கவுண்டர்: பாவம் மனுசன நடக்க கூட விடாம அதுக்கும் தடை போடுறாங்க.
விமல: வெல் ஆ....பஸ்வரூபம் பற்றி பேச கூடாதுன்னு நெனச்சேன்.இங்க குறுக்கே படுத்துக்கொண்டு செய்த ஆர்ப்பாட்டம் மீண்டும் அதையே பேச வைக்கிறது.ஏற்கெனவே எனது ஹே பாம் படத்தை சிலபேர் வெட்டணும் ஓட்டணும்னு பாத்தாங்க.நடக்கல
கவுண்டர்: நீங்க அவங்களுக்கு எடிட்டர் வேலை கொடுத்திருந்தா சும்மா போய் இருந்திருப்பாங்க.
விமல்: வெல் ஆ....ஒரு லட்சம் தமிழர்களை கொன்றுள்ளது இலங்கை.இதே  அமெரிக்கா என்றால் குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.....
கவுண்டர்: அண்ணா என்ன சுந்தர ராமசாமி புத்தக தலைப்பெல்லாம் சொல்றீங்க?
விமல்: ஓ சாரி..குழந்தைகள் பெண்களை கொல்லாது  அமெரிக்க drones.
கவுண்டர்: சரி சரி அடிச்சி விடுங்க..உங்களுக்கும் ஹாலிவுட் சான்ஸ் நெருங்கி வரும் வேளையில் இப்படி எதையாவது சொன்னாதான் உண்டு 
விமல் : இலங்கை புத்த மதம் சார்ந்த நாடு.ஆர்னால்ட் ஷ்வாஸநெக்கர் சொன்னதைத்தான் கவுதம புத்தர் சொன்னார்.If you accept pain life becomes easier.so accept pain.
கவுண்டர்: இப்போ என்ன சொல்ல வரீங்க?
விமல : ஆகாஸம்பட்டு சேஷாச்சலமும் இதையேதான் சொல்றார்.
கவுண்டர்: என்ன பேரெல்லாம் ஒரே டகால்டியா இருக்கே..
விமல்: வெல்! ஆ! நான் என்ன சொன்னாலும் அதை புரியல திருத்தணும்; தடை போடணும்னு துடிப்பது தெரியுது.அவர்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
விமல்: வெல்! எனக்கு அமெரிக்க ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு.அதனால் இத்துடன் முடித்து கொள்கிறேன்
கவுண்டர்: யப்பா இவுரு பேசுனதுல இது ஒண்ணுதான் ஒழுங்கா புரியுது.
அடுத்து யாருப்பா?
*********************************************************************************
நடுவில் கூர்யா போதிகா வந்து மூக்கு  பொடி விளம்பரம் செய்துவிட்டு போகிறார்கள்.பன்ரைஸ்  மூக்கு பொடி தருமே சுகம்! அதுவே நிஜம்..
கவுண்டர்: ஆமா கசன்னா பினேகாக்கு போட்டியா இந்த ஜோடியா?அட்ரா அட்ரா...விளம்பர கம்பெனிக்கு அதிர்ஷ்டம்தான்.
**********************************************************************************
கரத் குமார் வருகிறார் பச்சை வேட்டி பச்சை சட்டை  அணிந்து தலையில் பன் ரைசர்ஸ் தொப்பி போட்டுகொண்டு 
கவுண்டர்: செம கில்லாடிதான் இவுரு..ஒரு பக்கம் ஆளும்கட்சிக்கு கொ.ப.செ வேலை. இன்னொரு பக்கம் பன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம்,மனைவி பன் டிவியில் தொடர்ந்து சீரியல் தயாரிப்பு.பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
கரத்குமார்: வாட்டாள் பாகராஜ்... வற்றல் பாகராஜ்
கவுண்டர்: அண்ணா அது காவேரி பிரச்சனையில் பேச வேண்டிய டயலாக்கு.அண்ணனுக்கு பசி போல..எலே அண்ணனுக்கு ஒரு புல் மீல்ஸ் பார்சல்.பேச வேண்டிய பேப்பரை மாற்றி எடுத்து வந்ததை உணரும் கரத் ஜூட் விடுகிறார்.
**********************************************************************************
 கசன்னா பினேகா மீண்டும் வந்து உண்ணாவிரதத்தின் இந்த பகுதியை ஸ்பான்சர் செய்வோர்  உடும்பு மார்க் கைக்குட்டைகள்.உச்ச வெயிலிலும் தருமே ஏசி சில்லிப்பு...உடும்பு மார்க் கைக்குட்டைகள்...டொன்டொன்டொய்ங்...
**********************************************************************************

அடுத்து குஜயகாந்த் கூட்டத்தை விலக்கி கொண்டு மேடை நோக்கி வருகிறார்.குறுக்கே சிலர் வழிவிடாமல் நிற்க அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார்.மேடை ஏறி பேச துவங்கும் வேளையில்...கீ...ஈ.ஈ...ஈ ...(மைக்கில் எக்கோ கேட்கிறது)
கண்கள் சிவக்க மேடையை விட்டு இரங்கி மைக்செட் பொறுப்பாளரை அடித்து வெளுக்கிறார்.
கவுண்டர்: யப்பா இந்த உண்ணாநிலை போராட்டம் கொஞ்சம் தொய்வடைந்தது போல இருந்த நேரத்தில் ஆக்ஷன் ப்ளாக் கொடுத்தது நல்லாதான் இருந்திச்சு.
**********************************************************************************
அடுத்து குஜை ...நெற்றி பொட்டில் ஒரு விரலை வைத்துகொண்டு தலையை சாய்த்துக்கொண்டு வருகிறார்.
கவுண்டர்: அண்ணா என்னங்கணா  தலைவலியா?
குஜை: "தலையும்" இல்ல வலியும் இல்லை
கவுண்டர்: பஞ்ச டயலாக் பேசிட்டாராம்மா...முடியலீங்ணா..

குஜை : ண்ணா! என்கட்சி ஜெயிக்கணும்..ஆ...என் தங்கச்சி ஜெயிக்கணும்னு சொல்றேன்
கவுண்டர்: எலெக்ஷன் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுது.இன்னும் சூலாயுதம் வசனத்தை பேசிகிட்டு அலையுறாரு.
குஜை : அண்ணா..ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா...
கவுண்டர்: எல்லாரையும் வாட்டி எடுக்காம விட மாட்டீரு..அப்படிதானே?
குஜை: அண்ணா எகத்தாளம் பேசாதீங்ணா
கவுண்டர்: சரி நீயே பேசு
குஜை: சத்தத்தின் சத்தமே என் சனியன் குடன்பிறப்பே...
கவுண்டர்: ஐயோ முடியலடா சாமீ
குஜை : என் கட்சி ஆட்சிக்கு வர அணிலாக உதவினோம்.
கவுண்டர்: அணிலா? பெருச்சாளியா? என போக போகத்தான் தெரியும்.
குஜை: அம்மா கோபாகிட்ட பேசிகிட்டிருந்தேன்.ஒரு கொழந்த என்கிட்டே வந்து விளையாடிச்சு.அதன் தாய் அந்த குழந்தைக்கு பேரு வெக்க சொன்னாங்கமா..
கவுண்டர்: காது குத்துன புள்ளைக்கு இன்னும் பேரு வெக்கலியாம்..இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்டே நடக்காது மகனே
குஜை மைன்ட் வாய்சில் :என்ன பேசுனாலும் ரவுண்ட் கட்டுறாரே...
குஜை: இப்படிதான் பண்ணா பசாரே உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகிட்டேன்.
கவுண்டர்: ஆமா பார்லிமென்ட் எலெக்ஷன் வருதில்ல?எதையாவது செஞ்சாதானே..சரி வேணாம் நா ஏதாவது சொல்ல போய் ரகளையாகிடும்.
குஜை: போர் உச்சத்தில் இருந்தப்போ ராஜபக்சேவ கண்டிச்சு ஒரு லட்சம் தந்தி அனுப்பினார்கள்  என் ரசிகர்கள்.மத்திய அரசு மிரண்டது.
கவுண்டர்: போதும் நிறுத்திகிங்க.இனிமேலும் தந்தி அடிக்க பேப்பர் இல்லைன்னு சொல்லிட்டாங்களா?
குஜை: அண்ணா நக்கல் பண்ணாதீங்க்னா..இப்படிதான் எறா படத்தில் தமிழக் மீனவன் பத்தி ஒரு மெசேஜ் வச்சிருந்தேன்.படம்தான் ஓடாம போய்டுச்சு.
கவுண்டர்: மக்கள் உஷாராகிட்டாங்க...அதான்
குஜை: அடுத்து கலைவா படத்திலும் இப்படி ஒரு மெசேஜ் வைக்கலாமான்னு இயக்குனர் குஜை, பஸ்.ஏ.பந்த்ரசேகர் ஆகியோரிடம் விவாதித்து கொண்டிருந்தேன்.
கவுண்டர்: நடுவுல கரண்ட் போனதால இங்க வந்துட்டீங்களா?
ஆளை விடுங்க என எஸ்கேப் ஆகிறார் குஜை.
********************************************************************************
அடுத்து கார்யா வருகிறார்
கார்யா: அன்னா(என்னா) மச்சி அல்லாரும் நல்லா இர்கீங்களா?
கவுண்டர்: டேய் நீ என்ன பாஷை பேசுற?அத சொல்லு மொதல்ல..
கார்யா: அன்னா(என்னா) கவுண்டர்ணே நா டமில் தான் பேசுறேன்.
கவுண்டர்: நல்ல வேலை இதையெல்லாம் கேட்க பாரதி உயிரோட இல்ல
கார்யா: பாரதியா?அண்ணே யார்னேஅந்த பிகரு?என்னோட அடுத்த படத்தில் அந்த பிகரை வச்சு லிப்லாக் சீன் எடுத்துடலாம்
கவுண்டர்: ஒனக்கு சுட்டு போட்டாலும் நடிக்க வராது.தமிழும் பேச வரல.அதை பத்தியெல்லாம் ஒனக்கு கவலை இல்ல.எந்த பிகருக்கு லிப் லாக் கொடுக்கலாம்.யாரோட கடலை போடலாம் இதான் உனக்கு முக்கியம்.வெளங்கிடும் தமிழ் சினிமா
கார்யா: நாம பன் போற போரட்டம் ஒல்கத்தையே ஒலுக்கும்.
கவுண்டர்: அய்யய்யோ ரீல் அந்து போச்சுடா சாமீ ஆளை விடுங்க என தலை தெறிக்க  ஓடுகிறார்.