Sunday 19 November 2017

Persona 1966

               


               எலெக்ட்ரா பட ஷூட்டிங்கின் போது  ஒரு நிமிடம் அமைதியாக இருக்கும் எலிசபெத் பிறகு வாய்விட்டு சிரிக்கிறார்.படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியேறுகிறாள். அடுத்தநாள் படக்குழு தொலைபேசியில் அழைக்கும்போது பணிப்பெண் அவள் அறைக்கு சென்று பார்த்தால் அவள் விழித்துக்கொண்டிருந்தாலும் பதிலளிக்க மறுக்கிறாள்.மூன்று மாதங்கள் எல்லாவித டெஸ்டுக்கு பிறகும் ஒன்றும் மாற்றமில்லை
She is perfectly healthy both psychically and mentally என்கிறார் டாக்டர்
மனதில் எந்த குறைபாடும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களை விட அதிக மனவலிமை கொண்டவராகவே அவர் உள்ளார்.அதனாலேயே அவரால் எந்தவித எதிர்வினையும் ஆற்ற மறுக்க முடிந்தது.
            நர்ஸ் ஆல்மா அவளை கவனித்துக்கொள்ள பணியமர்த்தப்படுகிறார்.எலிசபெத்தின் complexity ஐ எதிர்கொள்ள முடியாது என்று முதலில் தயங்கும் ஆல்மா பிறகு டாக்டரிடம் சம்மதம் தெரிவிக்கிறாள் . மனவலிமை கொண்ட  எலிசபெத்துக்கு நர்சின் சிக்கலற்ற மேம்போக்கான விளையாட்டுத்தனமான பல்வேறு கனவுகள்(கணவன் குழந்தை மகிழ்வான வாழ்க்கை) கொண்ட  வாழ்வியல் பார்வை ரசிக்க வைப்பதாக இருக்கிறது.அவளுக்கு அந்த எளிமை தேவைப்படுகிறது
நர்சுக்கு பலப்பல கனவுகள்!வேளையில் இருக்கோம்.Security உண்டு.கணவன் குழந்தை பிள்ளைகளை நன்றாக வளர்ப்பேன்  ...எல்லாம் நன்றாக இருக்கும்! என்று கனவுகள்.
Alma


கணவனின் கடிதத்தை எலிசபெத்திடம் படித்துக்காட்டுகிறாள் நர்ஸ்.திருமணம் பற்றி எலிசா சொன்னதை மேற்கோள் காட்டிவிட்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் நடந்துபோகும் போது எனது பெல்ட்டை  பிடித்து இழுத்தாயே!..... என்ற வாசகம்  வாசிக்கப்படும்போது தனது பெல்ட்  இழுபட்டதுபோல நடுங்குகிறார் எலிசா.
the hopeless dream of being.not seeming to be,but being
                   

 எலிசபெத் இப்போது ஏற்றிருப்பது ஒரு வேடம்!வாழ்வின் அனைத்தும் மீதும் விருப்பம் அற்றுப்போன ஒரு வேடம்!வாழ்விற்கு எதிர்வினை ஆற்ற மறுக்கும் வேடம்!வாழ்வின் பிற அம்சங்கள் எப்படி இவளுக்கு சலித்துப்போனதோ அதுபோல இந்த வேடமும் ஒருநாள் சலித்துப்போகும்!அப்போது அவள் வெளியே வந்துதான் ஆக வேண்டும்!
life oozes in from all sides....you are forced to react.உனது எதிர்வினைகள் உண்மையா பொய்யா நீ சொல்வது உண்மையா பொய்யா என்பது பற்றியெல்லாம் எவருக்கும் கவலையில்லை!

      முதலில் ஆல்மா நர்ஸ் என்ற professional ரீதியிலேயே எலிசபெத்தை அணுகுகிறாள்.அது தோற்றதும் பெரிய நடிகை என்ற அண்ணாந்து பார்க்கும் அணுகுமுறைக்கு மாறுகிறாள்..அதுவும் தோற்றதும்  தனது பெரும்பாலும் சலனமற்ற வாழ்வில் மிக அதிகபட்ச அதிர்வை உண்டாக்கிய ஒரு அனுபவத்தை எலிசபெத்திடம் சொல்கிறாள் ஆல்மா.மிக அந்தரங்கமான அந்த அனுபவம்.கடற்கரையில் முகம் தெரியாத பதின்ம வயது சிறுவனோடு உடலுறவு கொண்ட தருணம்!அதனால் கர்ப்பமானது;பிறகு தனது பாய் பிரென்ட் மூலம் கருக்கலைப்பு செய்த அனுபவத்தை பகிர்கிறாள்.
         இப்படியொரு அந்தரங்கமான பகிர்வின் மூலம் எலிசபெத்தை கொஞ்சம் அவளால் நெருங்கவும் முடிகிறது.
         



 நீங்கள் நானாக நொடிப்பொழுதில் மாறிவிடலாம்!என்ன உங்கள் ஆன்மா மிகப்பெரியது! எங்கும் நிரம்பி வழியும்  என்கிறாள் ஆல்மா.இதை சொல்லி முடித்ததும் படுக்கைக்கு போ!இல்லாவிட்டால் இங்கேயே தூங்கி விடுவாய் என்று  அசரீரி போல ஒரு குரல் கேட்கிறது!அது யார் பேசியது என்பது காட்டப்படுவதில்லை அதே வசனத்தையே நர்ஸ் திரும்ப தனக்குத்தானே சொல்கிறாள்!
நர்ஸ் உரையாடல்களை விரும்புபவள்.எதிரில்  இருப்பவர் எதிர்வினை ஆற்றினாலும் ஆற்றாவிட்டாலும் அதை கேட்டால் போதும் என விரும்புபவள்.She needs someone to listen to her.தனது குறைபட்ட; அனுபவ முதிர்ச்சியற்ற ஆளுமையின் சிறு சிறு மனவெழுச்சிகளால்கூட பெரிதாக பாதிக்கப்படுபவள்.அந்த பாதிப்புகளை உரையாடல்கள் மூலம் பிறருக்கு உணர்த்த நினைப்பவர்!பார் என் வாழ்வும் எவ்வளவு சிக்கலுள்ளதாக இருக்கிறது என்ற எண்ணத்தை  தோற்றுவிக்கும் முயற்சி.

          டாக்டருக்கு  எலிசபெத் எழுதிய கடிதத்தை போஸ்ட் செய்யப்போகும் ஆல்மா ஆர்வம் தாங்காமல் அதை பிரித்துப்படிக்கிறார் .ஆல்மா பற்றித்தான் எலிசபெத் எழுதியிருக்கிறார்.Its a lot of fun studying her!அந்த கடற்கரையில் நடந்த அந்தரங்க அனுபவத்தையும் கடிதத்தில் எழுதி இருக்கிறாள் எலிசபெத்.

  எலிசபெத் வரும் பாதையில் வேண்டுமென்றே உடைந்த கண்ணாடி துண்டுகளை போட்டு வைக்கிறாள் ஆல்மா.தனது மிக அந்தரங்கமான ஒரு அனுபவத்தை வேறொரு நபரிடம் எலிசபெத் பகிர்ந்து கொண்டதற்கான கோபமா? அல்லது உடல்ரீதியான வாதைக்கு எலிசபெத் எப்படி எதிர்வினையாற்றுகிறாள் என்று பார்க்க விருப்பமோ? அல்லது இரண்டுமா?
          கண்ணாடித்துண்டை மிதிக்கிறாள் எலிசா.வலியில் சிணுங்கி ஆல்மாவை பார்க்கிறார்!எலிசாவின் பார்வை இப்போது நிர்சலனமற்ற ஊடுருவும் பார்வையல்ல!எரிச்சல் கலந்த பார்வை!ஆல்மாவின் பார்வை இப்போது ஆழமற்ற,வாழ்க்கை குறித்த பல்வேறு கனவுகளுடனான பார்வையல்ல!எலிசாவின் வெற்றுப்பார்வை!! படத்தின் துவக்கத்தில் சினிமா துவங்கிய காலம் முதலான பல்வேறு சிறு காட்சி துணுக்குகள் காட்டப்படும்.இப்போது மீண்டும் அந்த துவக்கம்!உடைதல்!ஆளுமை மாற்றம்!இதை விளக்குதல் மிக சிக்கலானது.அந்த காட்சி உண்டாக்கும் பாதிப்பை வார்த்தைகளில் வடிக்கவே முடியாது  

இந்த காட்சியில் ஆல்மாவின்  பிம்பம் உடைந்து மீண்டும் ரீல் முதலிலிருந்து ஓடத்துவங்குகிறது.இப்போது ஆல்மாவின் மூலமாய்!


          தனது மிக மிக அந்தரங்கமான ஒரு அனுபவத்தை டாக்டரிடம் கடிதத்தில் தெரிவித்ததை சொல்லி கோபத்தின் உச்சத்தில் கொதிக்கும் வெந்நீரை எலிசபெத்  மீது கொட்டப்போகிறாள் ஆல்மா! No Dont! என்று பதறுகிறாள் எலிசா.அவளது முதல் எதிர்வினை!தன்னை சுற்றி எழுப்பப்பட்ட கோட்டையில் விரிசல்!ஆல்மா அதை மகிழ்வோடு ஒருவித திமிரோடு பார்க்கிறாள்!உன்னை உடைத்துவிட்டேன் பார்த்தாயா? -பார்வை!
         அந்த கண்ணாடியை எலிசா மிதித்ததன்  பிறகு ஆல்மா மாறி மாறி காட்டப்படுகிறாள்.அதற்கு முன்வரை அவள் submissive ஆக ஒரு நடிகையை மேல்நோக்கி பார்க்கும் தொணியில்,சகோதரிகள் இல்லாமல் வளர்ந்ததால்  எலிசாவை சகோதரியாக அன்போடு பார்க்கும் தொணியில்; தன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளுதல் மூலம் எலிசாவிடம் ஒரு மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை தொணியில்தான் இருந்தது.அந்த கடித்தத்தை ஆல்மா படித்ததன் பிறகு apprehensive ஆக எலிசாவை பார்ப்பது,ஒருகட்டத்தில் dominating ஆக எலிசாவை உடைத்துப்பார்ப்பது, அடுத்த நிமிடம் குளியலறையில்  உடைந்து அழுவது என்று பெரும் பாறையை உடைக்க மாறி  மாறி அறையும் கடலலை போல காட்டப்படுகிறாள்.


          எலிசாவின் கணவன் அழைக்கிறான்.ஆல்மா பதில் சொல்ல செல்கிறாள்.எலிசா என்று நினைத்து "மகனிடம் எதை சொல்லியும் புரிய வைக்க முடியவில்லை" என்று பேசிக்கொண்டே போகிறான்."நான் எலிசா இல்லை" என்கிறாள்.அவன் கண்டுகொள்ளவில்லை.அவள் பின்னாடி எலிசா வந்து நிற்கிறாள் அப்போதும் கணவன் ஆல்மாவையே எளிசாவாக கண்டு பேசிக்கொண்டே போகிறான்

its all sham and lies –alma
"மகன் பிறந்த கதையை சொல்" என்கிறாள் ஆல்மா!முடியாது என்கிறாள் எலிசா.நானே சொல்கீறேன் என்று சொல்லத்தொடங்குகிறாள்.ஒரு பார்ட்டியில்  ஒருவர் எலிசாவிடம் "உங்களிடம் பணம் பேர் புகழ் எல்லாம் இருந்தும் தாய்மை இல்லையே?" என்று கேட்க அப்போது சிரிக்கும்  எலிசா பிறகு அதை தீவிரமாக உணர்ந்து தாய்மை அடைகிறாள்.பிறகு பயம்!பொறுப்புகள் கைகளை கட்டிப்போடும்; கடமைகள் தியேட்டரை விட்டு விலக நேரிடும்; மரணத்தின் மீது; உடலின் மீது; வயோதிகம் மீது பயம்!

     எந்தளவு பயம் என்றால் பிள்ளை வேண்டாமென்று பலமுறை அபார்ஷன்  செய்ய முயலும் அளவு;பிள்ளை இறந்தே பிறக்காதா என்று ஏங்கும் அளவு;பிள்ளை பிறந்தபின் அதை வெறுக்கும் அளவு!ஆனாலும் யார் யாராலோ வளர்க்கப்பட்டும் மகன் எலிசா மீது பாசமாக இருக்கிறான்.இவளுக்கு மீண்டும் பயம்!அந்தளவு பாசத்தை தன்னால் திருப்ப செலுத்த இயலாது என்ற பயம்!Cold and indifferent ஆக இருக்கும் எலிசாவுக்கு மகனின் தூய அன்பை எதிர்கொள்ளவே முடியவில்லை!அன்பிற்காக ஏங்குவோர் உலகில் இருந்தாலும் அவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தப்படும்போது அதை கையாளத்தெரியாமல் போட்டு உடைத்துவிடுவார்கள்!!இந்த இயலாமைக்கு பயந்தே பலர் எந்த வகையிலும் அன்பு தன்னை அணுகிவிடாதபடி ஒரு அரணை எழுப்பி வைத்திருப்பார்கள்.அன்பைப்பெறுதல் என்பதைவிடவும் மிக மிக கடினமானது அந்த அன்பை திரும்ப செலுத்துதல்!
தனது தாயை திரை மூலமாகத்தான் பார்க்கிறான் அந்த சிறுவன்.பிம்பங்களாக மட்டும்!



        எலிசாவின் ஆளுமை;தனது சொந்த ஆளுமை என்று மாறி மாறி உணர்வதின் வாதை ஆல்மாவை பிய்த்து எரிகிறது!You cant get to me என்று துணிச்சல் தொணியில் எலிசாவிடம் சொல்கிறாள் ஆல்மா!அது உண்மையில் துணிச்சலில் சொல்லப்பட்டதல்ல!கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயத்தை இழந்து கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் போகிறதே என்ற இயலாமையின் வெளிப்பாடு.எலிசா என்ற மாபெரும் ஆன்மாவின் வீச்சை எதிர்கொள்ள முடியாததன் அச்சம்.விடாது எலிசாவை அறைகிறாள்.முழுமையாக ஆட்கொள்ளப்படுகிறாள்! எலிசாவின் வேடத்தை ஏற்கிறாள் ஆல்மா!
                  படம் நெடுக மிக வலிமையான காட்சிகள்.அதற்கு பெர்க்மனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Sven Nykvist ன் ஒளிப்பதிவு உயிர்மூச்சாய் உள்ளது.கதாபாத்திரங்களின் தகிப்பை பார்வையாளன் உணர மிகப்பெரும் கருவியாய் அவரது ஒளிப்பதிவு உள்ளது.குறிப்பிட்டு சொல்லவேண்டிய மூன்று வலிமையான காட்சிகள் ஆல்மாவின் தலையை எலிசபெத் கோதும் காட்சி;கண்ணாடியை மிதித்ததும் ஆல்மாவின் முகத்திற்கு வரும் க்ளோசப்;இறுதியில் ஆல்மாவின் முகம் பாதி எலிசபெத்தின் முகம் பாதியாக மிரள வைக்கும் காட்சிகளை சொல்லலாம்!

Wednesday 1 November 2017

காக்கா காக்கா

                         ஒப்பனிங் காட்சியில்  அன்பு செல்வன்  கூவக்கரையில் மல்லாந்து கிடக்கிறார்...
voice over : தல சுத்துது மேல இவனுங்க வேற சுத்திகினு இருக்கானுவ...Vertigo!வெர்டின் மாத்திரை போட மறந்துட்டேன்.மருந்து கடைக்காரன்கிட்ட "டேய் நா போலீஸ்டா"னு ஓசில வாங்கியிருக்கணும்.இப்ப ரெண்டு மைல் நடந்து போனாத்தான் மெடிக்கல் ஷாப்.எந்திரி அன்பு செல்வன்..எந்திரி.....

.
பேக்ரவுண்ட் சாங் ஒலிக்க ஆரம்பிக்குது.
                                ஓமக சீயா ஒகயாலா சீச எவசாரா...
அன்பு செல்வன் டென்சனாகி டைரக்டரை நோக்கி :யோவ் நானே வெர்டிகோல மயங்கி கிடக்குறேன்.இப்ப போய் பத்து மைல் இந்த பாட்டுக்காக நிக்காம ஓட சொல்றியா?அதெல்லாம் முடியாது.அசிஸ்டெண்டை உட்டு வெர்டின் வாங்கிவர சொல்லு.அப்புறம்தான் சாங்....
.
ஒருவழியா மருந்து சாப்பிட்டு கைத்தாங்கலா எந்திரிச்சி நிக்குறாரு அன்பு.
பவுதம் பேனன்: ஓகே...நவ் யு ஸ்டார்ட் சேஸிங் மாயா...
அன்பு: யோவ் அதெல்லாம் இன்னிக்கி முடியாது.நாளக்கி மார்னிங் ஜாக்கிங் போவேன்.அப்போ அதையே சாங்கா ஷூட் பண்ணிக்க .
.
அடுத்தநாள் காலை ஐந்து மணி.சாங் ஷூட்டிங்..
அன்பு: யோவ் ஒட்டு மீசைக்கு நிறைய பெவிகால் போடு!ஏன்னா இந்த பாட்டுக்கு பத்து மைல் ஓடனும்......ஒகயாலா சீச எவசாரா...
.
பிளேஸ்பேக்.
நாங்க நாலு பேர்.எங்களுக்கு பயமே இல்ல...ஏன்னா நாங்க சஸ்பென்ஷன்ல இருக்கோம்..ஏன் சஸ்பென்ஷன்?வாங்க சொல்றேன்.....
.
அன்புசெல்வன்: நா மொதல்ல மாயாவ சந்திச்சது ஒரு விபத்து.அன்னிக்கித்தான் முக்கியமான பிளாட்பாரத்துல மாமூல் வாங்கிட்டு இருந்தேன்.அப்போ ஒரு கேடி எங்கிட்டியே பிக்பாக்கெட் அடிச்சிட்டான்.அவனை சேஸ் பண்ணி போகும்போதா ஒட்டு மீசை கழண்டு விழனும்....
மாயா தன் தோழியிடம்:ஹே! லுக் தேர் யார்!ஃபேக் முஷ்டாக்.எல்லாரும் சிரிக்கிறார்கள்.
 அன்பு செல்வன் வாய்ஸ் ஓவர் :அசிங்கப்பட்டேன்.அன்னிக்கி அசிங்கப்பட்டளவு என்னிக்குமே அசிங்கப்படல...கோபம்.அந்த இடத்துல மாயாகிட்ட என்னோட கெத்து என்னன்னு காட்ட நெனச்சேன்.அப்படியே பக்கத்துல நின்னுட்டு இருந்த ஆளை புடிச்சி "அடிங்..நா போலீஸ்டா" என்று அறஞ்சேன்.அப்புறம் பாத்தாதான் தெரியுது அவர் டிஎஸ்பின்னு.இருக்கேன், சஸ்பென்ஷன்ல இருக்கேன்.இல்ல.பயமில்ல.சும்மா வீட்ல சாப்ப்ட்டு சாப்ப்ட்டு தூங்குறதால எங்க நாலு பேருக்குமே பயமில்ல!
.
ரெண்டு மாசத்துக்கு முன்னர்.
டிஜிபி:(ஹே காய்ஸ்....நான்தான் பவுதம் பேனன்.நான்தான் டிஜிபி ரோல் பண்றேன்) பாய்ஸ்....இந்த மாச என்கவுண்டர் கோட்டா வந்திருக்கு.பெட்ரோல் பங்க் சேகர்,கொக்கி குமார்,கொருக்குபேட்டை ரவி,அகரம் சேது.
உதயா: ஏண்டா அதென்ன ரவுடின்னாலே அது நார்த் மெட்ராஸ் ஆளாத்தான் இருப்பானா?என்னிக்காவது நீ நார்த் மெட்ராஸ் போயிருக்கியா?அப்டியே கைத்தாமட்ல உட்டா தெரியும்.
பவுதம்: ஹே கூல் டூட்!! ஐ கோ பை தி கன்வென்ஷன்ஸ்.
உதயா: க்கும்.எதுவுமே தெரியாம படமெடுக்க வந்துட்டு கன்வெஷன் மண்ணுன்னு அள!
.
பாண்ட்யா ரிலீஸ்.

சேது: வா பாண்ட்யா.நீ இல்லாம அந்த ஒட்டுமீச அன்பு செல்வன் ரொம்ப துள்றான்.
பாண்ட்யா: அண்ணே நா வந்துட்டன்ல.இனி அவன் எப்படி பிளாட்பார கடைல மாமூல் வாங்குறான்னு பாக்குறேன்.
மனோகர்: பாண்டியா நீ ஜெயில்லேர்ந்து எஸ்கேப் ஆனத பேனர்,போஸ்டர்   அட்ச்சி வச்சிக்கிறேன்.ஊரு பூரா ஒட்டிடவா.
பாண்ட்: அடேய் இதுக்கு நீ நேரா கமிஷனர் ஆபீசுக்கு போய் நா இங்கதான்னு இருக்கேன்னு சொல்லிடேன்!
மனோகர்: அதான் நல்ல ஐடியா நா போய் சொல்ட்டு வரேன்
சேது மனோகரை புடித்து நாலு அப்பு அப்பிட்டு :போடா போய் ஓரமா ஒக்காரு.
மனோகர்: நாறிடும் பரவால்லையா?
சேது: ஐயோ!முடியலடா!
மனோகர்: நா வேண்ணா ரெண்டு குளுகோஸ் டப்பா வாங்கியாரட்டா?
பாண்ட்யா: ங்கோ...அவன் வாய்ல பிளாஸ்திரிய ஒட்டுங்கடா.

.
சேது: பாண்ட்யா வாசு சேட்னு ஒத்தன் கீறான்.அவன் புள்ளைய கடத்துறோம்.
பாண்ட்யா: ஆமாண்ணே நாம யாருன்னு இந்த ஊருக்கு இல்லாட்டியும் சவுக்கார்பேட்காவது தெரியனும்.செய்யுறோம்!
.
கடத்தல் ஓவர்!சாக்கு மூட்டைல!
பாண்ட்யா மொபைலில்: டே வாசூ சேட்
வாசு சேட்: அரே ஆமா
பாண்ட்: உம்புள்ளைய கடத்திட்டேன்
வாசூ வெடிச்சிரிப்பு சிரிக்கிறார் 
பாண்ட்: டேய் வாசூ சேட் த்தா புள்ள கழுத்துல மார்க் போடணுமா?
வாசூ: அரே நம்மல் பீவி பச்சா அல்லாம் ராஜஸ்தான்ல இருக்குது.இந்தமாதிரி எவனாவது கிட்னா பண்ணுவீங்கோன்னு தெரிஞ்சிதான் நம்மல் பரிவாரை அங்கே வச்சிருக்குது.
பாண்ட்: டேய்ய்ய் ....ங்கோ அப்போ இது யாருடா?
வாசூ: அரே நம்மல்கிட்ட கேட்டா எப்டி தெரியும்.. பேவகூப் போனை வய்யி!
பாண்ட் சேதுவிடம் : அண்ணே அவம்புள்ள இல்லங்குறான்...
சேது: அப்போ யார்தாண்டா இது?
.
மூட்டையை பிரிச்சா உள்ள அன்பு செல்வன்.
.
சேது மனோகரிடம் : ஏண்டா வாசு சேட் புள்ளைய தூக்கியாற சொன்னா நீ அன்பு செல்வன  தூக்கியாந்துக்கிற?
மனோகர்: இந்தாளுதான் இஸ்கூலு வாசலாண்ட டவுசர் போட்டுகினு நின்னுகினு இருந்தாரு.அத்தான் இவன தூக்கியாந்தேன்.
அன்பு செல்வன்: ஏண்டா சஸ்பென்ஷன்ல இருக்கேன்னு ஒட்டு மீச ஒட்டாம இருந்தா இப்படி கேவலப்படுத்துறீங்களேடா!
பாண்ட்யா: உன் ஹைட்டுக்கெல்லாம் எவன்டா போலீஸ் வேல கொடுத்தான்?
அன்பு :டேய்ய்ய் அடுத்த வாரம் சஸ்பென்ஷன் முடியுது.அப்போ உங்க எல்லாரையும் தூக்குறண்டா!
மனோ: ஜேசிபி வாடகக்கி எட்த்தாந்து தூக்கப்போரியா?
அன்பு: த்தா மொதல்ல உனக்குதாண்டா ஸ்கெட்ச்சு போடப்போறேன்.!
மனோகர்: ரொம்ம்மம்ப்ப தேங்க்ஸுப்பா!எம்புள்ள ஸ்கெட்ச் வாங்கியாரப்போறியா இல்லையான்னு ஒரே கொடச்சல் குடுக்குறான்.போடுறதுதான் போடுற நல்ல காஸ்ட்லி ஸ்கெட்ச் பாக்கெட்டா போடு!
அன்பு: டேய்ய்ய் டேய்ய்ய் டேய் நா போலீஸ்டா!
மனோகரு: நீதான் இப்ப சஸ்பென்சன்லகீறியே உன்னால இன்னா பண்ண முடியும்?
பாண்ட்யா: டேய் மனோகரு விட்றா.இதுக்குமேல கலாய்ச்சா இவன் தாங்க மாட்டான்!இவன சைதாபேட்ட கூவத்தாண்டதூக்கி போட்டுட்டு வந்துடுங்க.....
.
கூவக்கரைல அன்பு .......
தல சுத்துது மேல......(முதல் பேரா)
...


அன்பு செல்வன்: மாயாவ திரும்ப பார்த்தேன்.பிளாட்பார கடைல ஹேர்பின் வாங்கிட்டு இருந்தா...பத்து ரூபா அநியாய விலை சொன்னான் வியாபாரி."டேய் நா போலீஸ்டா"ன்னு சொல்லி அஞ்சு அம்பதுக்கு வாங்கி குடுத்தேன்.
மாயா: ஐ ஆம் தேங்க்புல்.
அன்பு: மச் வர்ட்ஸ்.பொலிஸ்னாலே தனி மரியாத, கெத்து இருக்குல்ல?
அப்போ ஒரு சிறுவன் ஓடிவந்து 
அண்ணாத்த டேஷன் சீல் வச்ச லெட்ர எய்த்த ஓட்டல்ல குடுத்து ஓசி பூரி செட்டு வாகியார சொன்னியே..இந்தா புடி..
மாயா: வாட்ஸ் திஸ்?யு ஆர் சச் எ டிஸ்க்ரேஸ்!
அன்பு: மாயா ஐ கேன் எக்ஸ்ப்லெய்ன்.
மாயா: இனஃப்.
சென்று விடுகிறாள்.
அன்புவின் போன் அடிக்க பேசினால் பாண்ட்யா 
பாண்ட்: டேய் அன்பு எப்படி ஒரு பூரி பொட்டலத்த வச்சி உன்னோட காதலுக்கு ரிவிட் அடிச்சேன் பாத்தியா?
அன்பு: பாண்ட்யாஆஆஆஆஆஆஆ!த்தா உனக்கு இருக்குடா என்கவுண்டர்.
பாண்ட்: க்கும்.உன்னோட கவுண்டர நீயே வச்சிக்கடா.நா ப்ளாக்ல டிக்கட் வாங்கிக்கிறேன்.
அன்பு: டாய்ய்ய்யி .....(போன் கட் ஆவுது).
சேஷு: அன்பு என்னாத்துக்கு கூவிகினுகிற?மாயா போனா இன்னொரு சாயா
அன்பு சேஷுவின் சட்டையை பிடித்து உலுக்கி: டேய்ய்ய்ய் பிகரு தேத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாடா?காலைல கை நெறிய கொண்டக்கடல தின்னுட்டு பத்து மைல் ஓடி,ஜிம்ல ரெண்டு மணி நேரம் முக்கிட்டு,கிளீன் ஷேவ் பண்ணி ஒட்டு மீசைய வக்கனையா ஓட்டிகிட்டு யூனிபார்முக்கு போடுற கஞ்சிய கொஞ்சம் உள்ளுக்கும் உட்டுகினு அக்குள்ள கட்டி வந்தாமேறியே 24x7 போஸ் மெயின்டெயின் பண்ணுறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமாடா?
சேஷு: க்கும்.அல்லா வீரத்தையும் என்னாண்டையே காட்டு!பாண்ட்யா உன்ன வச்சி காட்டு காட்டுன்னு காட்னானே அவன இன்னா பண்ண போறே?
அன்பு: என்கவுண்டர்தான்.அம்பது ரூபா செலவு.ஒரு புல்லட்.நா ரொம்ப சந்தோசப்படுவேன்ல!
சேஷு: ஏண்டா நீ சந்தோஷமா இருக்கத்தான் போற வாறவனெல்லாம் சுட்டுகினு இர்க்கியா?
அன்பு: ஆமா!பின்ன நாட்டுக்காவா இதெல்லாம் செய்யுறேன்.
..


சேஷு

.
ஒரு அட்டைப்பெட்டி அன்பு வீட்டு வாசல்ல வைக்கப்படுகிறது.
சேஷு அதைப்போய் பார்த்துவிட்டு...ஐயோ....ஐயோ....ஐயோ...
அன்பு: என்னடா அது?ஐயோ......
ஐயோ ஐயோ.....இருந்த ஒரு ஒட்டு மீசையையும் எரிச்சி அந்த சாமபல அனுப்பியிருக்கான் பாண்ட்யா.இனி நா என்னடா பண்ணுவேன்?அவனவன் ஸ்கூல் பையன்னு கேலி பண்ணுவானே!
சேஷு: கவலைப்படாத அன்பு! மை பென்ஸில் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்...
.
பண்ணோம் அட்ஜஸ்ட் பண்ணோம்.போலீசா இருக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல.அட்ஜஸ்ட் பண்ணோம்,ஒட்டு மீசக்கி பதில் மை பென்ஸில்!மாயா அப்புறம் வரவேயில்லை!இப்படியெல்லாம் தியாகம் பண்ணிதான் நாங்க வாழுறோம்......