Thursday 11 October 2012

தொடர் மின்வெட்டு நடிகர்களின் ரியாக்சன்(ஒரு கற்பனை)-பாகம் 2

நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க விடுபட்ட நடிகர்கள்இரண்டாம் பாகத்தில்.
முதலில் விஜய்:
நமது நிருபர் அவரை சந்திக்க செல்லும்போது ஐரோப்பாவில்  ஷூட்டிங்கில் இருக்கிறார்'நீ அடிச்சா அடி விழும் நான் அடிச்சா இடி விழும் என்று யாரையோ மிரட்டி கொண்டிருந்தார்...அருகில் சென்றோம்


"அண்ணா என்னங்க்னா?"
இந்த  மின்வெட்டு பத்தி உங்கள் கருத்து?
அண்ணா வேனாக்னா பன் பிக்சர்ஸ் மிரட்டியதால் சென்ற ஆட்சியில் எதிர் கட்சிக்காக சூலாயுதம் படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசிட்டேனுங்க்னா...இப்போ இவுன்களை எதிர்த்து பேச என்னால முடியாயதுங்கா நீங்க கெளம்புங்க...
என்று சொல்ல நமது நிருபரே எழுதிய வசனம் " மின்சாரத்தை நிருத்தனும்னு ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அவுங்க பேச்சை அவுங்களே கேக்க மாட்டாங்க"

விஜயகாந்த்:
இருளில் அவரது திருமண மண்டபம்.கேப்டன் பிரபாகரன் க்ளைமாக்ஸ் போல எல்லாரும் தலையில் ஒரு பிளாஷ் லைட் கட்டி கொண்டு நிற்க தனது உதவியாளர் ஒருவரை வெளுத்து கொண்டிருந்தார் "டேய்...ஒன்ன உள்ள தூக்கி போட்டு அடிச்சா  உடுமலைபேட்டைல இருந்து கூட போன் வராதுடா...ஆங்"
நமது நிருபர் உள்ளே நுழைய "டேய் யாருடா நீ?உளவு பாக்க வந்தியா" என நாக்கை மடித்து முஷ்டியை உயர்த்துகிறார்.
ஐயோ இல்ல சார் நான் நிருபர்
ம்...அதை மொதல்லையே சொல்ல கூடாதா அடி வாங்கியிருப்ப நீ...
சரி என்ன விஷயம்?
இந்த மின்வெட்டு பத்தி உங்கள் கருத்து?

டேய்...தமிழ்நாட்டுல மொத்தம் 39 மின் உற்பத்தி நிலையம் இருக்குடா அதில் 38 பல வருசமா பாழடைஞ்சு போய் சினிமா க்ளைமாக்ஸ் எடுத்துகினு இருக்காங்க.மீதி இருக்கும் ஒரு மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவாட் உற்பத்தி பண்ணுது.அதில் 299 மெகாவாட் சென்னைக்கு மீதி ஒரு மெகாவாட் பிற மாவட்டங்களுக்கு...தமிழ்நாட்டில் மொத்தம் 12587 டிரான்ஸ்பாமர் இருக்குடா அப்புறம் 65377 மின் கம்பங்கள் இருக்குடா அதில்...
நிருபர் தொடர் எண்ணிக்கை புள்ளி விவரங்களால் குழம்பி வெளியேறுகிறார்.

சரத்குமார்:
"டேய் என்றா பம்முற?விசயத்த சொல்லு"
அய்யா நிலத்துக்கு தண்ணி பாய்ச்ச பம்புசெட்டுக்கு கரண்டு வரலீங்கையா...
"என்றா அதுக்கு என்னடா பண்ண சொல்ற?ஒம்பாட்டன் முப்பாட்டன் எல்லாம் எந்த பம்பு செட்டடா நம்புனான்?எகத்தாளம் வேறையா?"


திடீரென்று செல்போன் ஒலிக்க பேசுகிறார்...
ஹலோ ஜீ நீங்களா?(இடுப்பில் துண்டை கட்டி கொண்டு பவ்யமாக பேச தொடர்கிறார்)
ஆமா ஜி சிலர் கேள்வி கேக்குறாங்க 
ஓகே ஜி 
இல்லை ஜி நானே சமாளிச்சுகுவேன்.முடியலைன்னா சொல்றேன் ஜி..
ஓகே ஜி 
என்றா எகத்தாளம் பேசுன அத்தன போரையும் ஊரை விட்டு தள்ளி வைக்குரேன் அவனுங்களுக்கு ஆரும் தண்ணி குடுக்க கூடாது ஆரும் செல்போன் சார்ஜ் பண்ணி தர கூடாது ஆரும் மின்சாரம் தர கூடாது
(மக்கள் முனுமுனுத்துகொண்டே இப்போ மட்டும் என்ன வாழுதாம்? என்று கலைகின்றனர்).

சந்தானம்:
ஊருக்குள்ள பத்து பதினஞ்சு இன்வர்டர் வச்சிருக்குறவனெல்லாம் நல்லா இருக்கான் ஆனா   ஒரே ஒரு இன்வர்டரை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே...அய்யூ...அய்யூ...அயூ


வடிவேல்:
பாவம்யா தமிழ்நாட்டு மக்க
எம்புட்டுஅடிச்சாலும் தான்குராய்ங்க இவிங்க ரொம்ப நல்லவங்கே...
ஆனா  என்னால எம்புட்டு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியுது?
என்ன உட்டுடுங்க சாமீ...என்று மூத்திர சந்துக்கு ஓடுகிறார்
ஹலோ போன வாரம் அடிக்க வரதா சொன்னீங்க...




1 comment:

Unknown said...

நல்லா இருக்கு நகைசுவை..

அன்புடன்,
அமர்க்களம்,
தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்,
www.amarkkalam.net

Post a Comment