Monday 7 November 2016

அப்பா(2016) மற்றும் மரியாதை (2008)

                          தமிழ்சினிமாவில்  அப்பா  கேரக்டர்னாலே முறுக்கு மீசை,  டிராக்டர்  செருப்பு, கைல  பெரிய்ய்ய  காப்பு  போட்டுக்கிட்டு  "எலே  பசுபதி"ன்னு  கர்ஜித்தவுடன் கக்கத்தில்  கையை அதக்கியபடி "சொல்லுங்கைய்யா" என்று  மகன்  வந்து  நிற்பது பலகாலமா  இருந்தது.நேரடியா  தந்தையிடம்  பேச  பயந்துகொண்டு  தாயோடுதான்  எல்லா பேச்சுவார்த்தை ,காதலிக்கும்  பெண்  பற்றிய  பகிர்வுகள் எல்லாம்.
             அவ்வப்போது  சில  விதிவிலக்குகள் இருந்தாலும்  தந்தை  கேரக்டரை சாதாரணமாக மென்மையாக  காட்டியது  விக்ரமன்(சேரன்  என்று  சொல்வேன்  என  நினைத்தீர்களா?அது  அப்புறம்).எதையுமே  நேர்மறையாக  அணுகும்  விக்ரமன்  படங்களில்    தந்தை மட்டுமல்லாமல்  பொதுவாக  ஆண்களே  மென்மையானவர்களாக  காட்டபட்டனர்.வானத்தைப்போல படத்தில்  "சாதா  சிகரெட்டு  குடிச்சா  உடம்புக்கு  ஆவாது.பஞ்சு  வெச்ச  சிகரெட்டு  குடிக்கசொல்லு" என  அண்ணன்(கேப்புடன்) மீனாவிடம்  பேசும்  காட்சி  பிரபலமானது.  சேரன்  ஆட்டோகிராப்  படத்தில்  பிள்ளையை  நண்பனாக  பார்க்கும்  தந்தை(ராஜேஷ்)காட்டினார்.பிறகு  தவமாய்  தவமிருந்து.போச்சு!அதன்பின்  பலநூறு படங்கள் தந்தை  கேரக்டரை மகன்/ளின் நண்பராய்   சித்தரித்து  பல  படங்கள்  வந்துவிட்டது.அது  ஒரு  டெம்ப்ளேட்ஆகவே  மாறிப்போனது!

அந்த  வரிசையில்  விக்ரமன்  இயக்கி 2008 ல்  வந்த  மரியாதை  படத்தின்  கதையை  பார்ப்போம்:

             கேப்புடனுக்கொரு  மகன்.அவர் நண்பர்  தலைவாசல்  விஜய்க்கு  ஒரு  மகன்.கேப்புடன்  ரொம்ப  லீனியன்ட்.நாளைக்கு  பரிட்சை.இன்னிக்கி  மகன்  படிக்காமல்  இன்றே  கடைசி சினிமாவை  நினைத்து படிக்காமல்  சும்மா  படிப்பது  போல  பாவ்லா  செய்கிறான்.காசு  குடுத்து  சினிமா  பார்த்துட்டு  வா  என  அனுப்புகிறார்.மனைவி(அம்பிகா)கடிந்துகொள்ள   "  சினிமா  பார்த்துட்டு  வரட்டும்.பார்த்துட்டோம்கிற திருப்தியில்  நல்லா படிப்பான்"  என்று  சொல்பவர்.மகனும்  அவ்வாறே படிக்கிறான்.                

                                தலைவாசல்  விஜய் நேர்மார்.புள்ள
எங்க  படிக்கணும்
எப்படி  படிக்கணும்..
படிச்சிட்டு  வேலைக்கு  எந்த நாட்டுக்கு  போகனும்
யாரை  கட்டிக்கணும் 
                                                  என்பதுவரை ப்ளான் செய்தவர். பிள்ளைகள்  வளர்கிறார்கள்.கேப்புடன்  மகன் (அதுவும்  கேப்புடன்) அக்ரி படிப்பில் கோல்ட் மெடல்.ஏதோ  பூக்கள்  ஆராய்ச்சி மையம் வைத்து  உலகப்புகழ் விருது பெறுகிறார்.தலைவாசல் விஜய் மகன் ஃபாரீன்  போறான்.ஆனா  தாய்  தந்தையைரை துரத்திவிட்டுடுறான்.

                    "நீ  புள்ளைய  சரியா வளக்கல..நான்தான்  புள்ளைய  நல்லா  வளக்குறேன்னு  கர்வமா  இருந்தேன்.ஆனா  இப்பத்தாம்பா  தெரியுது.நீதான் புள்ளைய  நல்லவனா  மனுசனா  வளர்த்திருக்க!"என்று  கண்ணீருடன்  சொல்கிறார்.


                      இதைத்தான்  சமுத்திரக்கனி  அப்பாவாக ரீமேக்  செய்துள்ளார்.
இதில்  வித்தியாசம்  என்னன்னா  தலைவாசல்  விஜய்  மகன்-  தம்பி  ராமைய்யா  மகன்  போல  சாவதில்லை.விக்ரமன்   சமுத்திரக்கனியைவிட டபுள்  பாஸிட்டிவ்வாக  சிந்திப்பவர்  என்பதால் அப்படி!(ஓவர் செண்டிமெண்ட்  உடும்புக்கு  ஆவது  உதயா-கும்மாங்கோ)

     
சமுத்திரக்கனியை   குறைசொல்ல  மாட்டேன்.அவர்  சூழ்நிலைக்கைதி.சமுத்திரக்கனி  என்றாலே சாக்பீஸ்  டஸ்டர்  சகிதம் நின்னாத்தான்  நம்மாளு  ஒத்துக்கிறான்.அவுரு  என்ன  பண்ணுவாரு!

No comments:

Post a Comment