Saturday 9 December 2023

குரோதம் & நான் சிகப்பு மனிதன்

 

இரண்டு படங்களுமே டெத் விஷ் படத்தின் காப்பி தான்.சமீபத்தில் டெத் விஷ் ஐந்து பாகங்களும் ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக பார்த்தபோது குரோதம் படம் நினைவுக்கு வந்தது.அதை மீண்டும் பார்த்தோம்.நான் சிகப்பு மனிதன் எப்போது பார்த்தோம் என்று நினைவிலில்லை.


 

       ஒருவகையில் மூலப்படத்திற்கு நெருக்கமாக இருப்பது குரோதம் படம் தான்.டெத் விஷ் போலவே இதிலும் நாயகன் ஒரு ஆர்க்கிடெக்ட்.டெத் விஷ் படத்தில்  பாலியல் பலாத்காரத்தில்  மனைவி இறந்துவிட,பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மகளை  தனது மருமகனுடன் மன சிதைவுக்கான சிகிச்சைக்கு வேறொரு ஊருக்கு அனுப்பி வைப்பார்.


 

     குரோதம் மற்றும் நான் சிகப்பு மனிதன் படங்களில் இளம் நாயகன் என்பதால் தங்கை கதாபாத்திரம் மட்டும்.

குரோதம் படத்தில் தங்கை நல்லெண்ணெய் சித்ரா மற்றும் மச்சான் (மாஸ்டர்) ஶ்ரீதர் ஆகியோரை வேறொரு ஊருக்கு அனுப்பி வைக்கிறார் பிரேம்.

     அதன் பிறகு தனது உறவினர் தங்கவேலுவை வேலை சம்மந்தமாக பார்க்க செல்கிறார்.அவர் ஒரு துப்பாக்கியை பரிசாக கொடுக்க அதை வைத்து சமூக விரோதிகளை காலி செய்கிறார்.இந்த வகையில் இது டெத் விஷ் படத்தை ஒட்டியே நகர்கிறது.நான் சிகப்பு மனிதனில் இப்படி வந்தது போல தெரியவில்லை.


 

     மேலும் தங்கவேலு& லூஸ் மோகன் கூட்டணி வித்தியாசமாக இருந்தது.”சிரிப்ப சலிச்சு சலிச்சு அவனே முழுங்குறான் “ என்று லூஸ் மோகனை பார்த்து தங்கவேலு அடிக்கும் கமன்ட் அட்டகாசம் :D

        தங்கை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சியை படம் நெடுக காட்டுவார் எஸ்.ஏ.சி.ஆனால் குரோதம் படத்தில் மூலப்படம் போலவே புகைப்படத்தை மட்டும் பார்த்து வருத்தமடைவதாக காட்டி இருப்பார்கள்.

     பாக்யராஜ் கதாபாத்திரம் என்ற எக்ஸ்டிரா ஃபிட்டிங் குரோதமில் இல்லை.

“காந்தி தேசமே காவல் இல்லையா?” என்று பொது மேடையில் ஆவேசமாக பாடி தன்னைத்தானே காட்டிக்கொடுக்கும் அளவுக்கு பிரேம் செல்வதில்லை.ரொம்பவும் கமுக்கமாகவே சமூக விரோதிகளை தீர்த்து கட்டுகிறார்.

      அந்த வகையில் குரோதம் ஒரு subtle ஆன பிரதி.நான் சிகப்பு மனிதன் மசாலா கொஞ்சம் தூக்கலாக எடுக்கப்பட்ட பிரதி.

    Posh ஆன நாயகன் கதாபாத்திரத்தில் பிரேம் சரியாக பொருந்துகிறார்.அவரின் நடை உடை பாவனை பேசும் விதம் எல்லாமே அதை பிரதிபலிக்கிறது.இந்தப்படத்தில் மட்டுமல்ல குரோதம் 2 அசோகா படங்களிலும் அதை காணலாம்.குரோதம் 2 படமும் இதே போல தங்கையை கொன்றவர்களை ஹை டெக்காக போட்டு தள்ளுவது தான் கதை.அதில் கொஞ்சம் டூயட் பாடல்கள்,கதையோடு பொருந்தாத செந்தில் காமெடி என்று  ஊளை சதை அதிகம். குரோதமில் அது இல்லை.

 

குரோதம் படத்தில் கொடுமையான ஒரே விஷயம் என்றால் அது பிரேமின்  மீசை.சார்ல்ஸ் பிரான்சன் மீசை கொஞ்சம் சீனத்தனமாக இருக்கும்.அதுபோலவே இருக்க வேண்டும் என்று பிரேமின் மூக்குக்கு கீழான மீசையை வழித்து விட்டுள்ளார்கள். பாக்க கொடுமையா இருக்கு..

     மேலும் இன்றைய woke கும்பல் இந்த கதையின் நாயகன் செய்தது தவறு அது இதுவென்று பொங்கி எழுவார்கள்! படத்தை நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம் என்பதற்கான அடையாள குறியீடு அதுவே!

      

Friday 1 December 2023

Leo மற்றும் A History of Violence

 

சமகால தமிழ்ப்படங்களில் லோகேஷ் படங்களை பார்ப்பதுண்டு.காரணம் அவர் படங்களில் wokism,புது மோஸ்தர் பெண்ணியம், நசுக்கி



ட்டான் கதை, மாவோயிஸ பஜனை,பொதுவுடைமை பிதற்றல்,ஏழ்மையை விதந்தோதுதல் ஓவர் சென்டிமென்ட் போன்ற டார்ச்சர் வஸ்துக்கள் இருக்காது.போதை வஸ்துக்கள் இருப்பது பற்றி நமக்கு கவலையில்லை.படத்தை முழுமையாக பார்க்க முடிகிறதா?இல்லையா? என்பதே ஒரு வணிக சினிமாவுக்கான நமது வரைமுறை.அதில் அவர் படங்கள் தேறுகின்றன !

 

        இந்தப்படம் LCU வை சார்ந்த படமாக சொல்லப்படுகிறது.ஆனால் கைதி மற்றும் விக்ரம் படங்களோடு இணைக்கும் வகையிலான வலுவான காட்சிகள் எதுவுமில்லை.அந்த போலீசு+ ஆ …ஊ… மாயா ஆகியோர் தான் இணைப்பு சங்கிலிகள் .கடைசியில் காசர் நா தழுதழுக்க குரல் கொடுக்கிறார்!அவ்வளவே.

மாஸ்டர் படத்தை பொறுத்தளவில் பெரும் குழப்பம்.விஜய் சென்னை கல்லூரியில் டப்பாங்குத்த்து ஆடுகிறார்.விஜய் சேதுபதி தென் மாவட்டத்தில் கொலைகள் செய்கிறார்.பிறகு எங்கு இருக்கிறது என்றே தெரியாத ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு விஜயை ஏன் அனுப்புகிறார்கள்?ஒரே குழப்பமோ குழப்பம்.

        கைதி படம் நன்றாக இருந்தாலும் அந்த மகள் சென்டிமென்ட் ரொம்ப ஓவராக போனது+ அந்த லாரி கிளீனர் பையன் பனை மட்டையில் எதோ பெய்த  மாதிரி ஓயாமல் பேசிக்கொண்டே வந்தது(குறிப்பாக சமகால அரசியல் விஷயங்களை கமன்ட் அடிக்கிறேன் பேர்வழி என்று அடித்த மொக்கை கமண்டுகள்) எரிச்சலை உண்டாக்கியது.விக்ரம் படத்தில் திடீரென்று காசர் சமூகத்துக்கே தான் தான் பேராசிரியர் எனும் தொனியில் லெக்சர் அடிச்ச காட்சிகள் எரிச்சலை உண்டு பண்ணியது+கடைசியில் முகத்தை “நடிக்கிறேன் பாருடா” என்ற பாவனையில் கூலிங்கிலாஸ் அணிந்த வண்ணம் விட்ட லுக்கு (இந்த மிகையான முக பாவனையை வைத்தே ரோலக்ஸ் கூட்டத்தில் ஒரு கருப்பாடு இருப்பதை உடனே  கண்டுபிடித்து இருக்கலாம்!பயிற்சி பத்தாது).

         இந்த படத்தை பொறுத்தளவில் முதல் பாதி பார்க்கும்படியாக இருந்தது.முக்கிய காரணம் அந்த லொக்கேஷன் .ஹிமாச்சல் பிரதேச அழகை படத்துக்கு தேவைப்படுகிறார் போல பயன்படுத்தியது பாராட்டுக்கு உரியது.ஆனால் இதே டேராடூன்/டார்ஜீலிங் ஆகிய லொக்கேஷன் அற்புதங்களை பேட்ட & கெத்து படத்தில் மகா மொக்கையாக வீணடித்து இருந்தார்கள்.

         A History of Violence படத்தின் பிரதி தான் இந்தப்படம்.அதில் சந்தேகம் வேண்டாம்.ஆனால் அதில் சில பட்டி டின்கரிங் செய்துள்ளார்கள் . சிலது நன்றாக வந்துள்ளது.சிலது சரியில்லை.

      உதாரணமாக அந்த காபி ஷாப் சண்டைக்காட்சி நன்றாக உள்ளது.தனியாக பி ஜி எம் பயன்படுத்தாமல் ஏற்கெனவே ஓரளவுக்கு பிரபலமான பாடல்களை பயன்படுத்தும் யுக்தி சாமர்த்தியமான முடிவு.விக்ரம் படத்தில் அய்யய்யோ யம்மா யம்மா பாடல் நமக்கு அந்தளவு மனதில் பதியவில்லை.ஆனால் இந்தப்படத்தில் பசும்பொன் பாடல் குறிப்பாக அந்த இடைநிரவலில் வரும் புல்லாங்குழல்& ஷெனாய்(??) இசை அப்படியே காட்சியோடு(மிஷ்கின் நடு மண்டையில் குண்டு :D) பதிந்து விட்டது.இதுவே ஆங்கில மூலத்தில் அதே காட்சி சப்பேன்று இருந்தது!

          பிற சண்டைக்காட்சிகள் அந்தளவு இல்லை .லியோ காற்றில் பறக்கும் காட்சிகளில் அழிக்கப்பட்ட ரோப் நம் கண்ணுக்கு வழக்கம் போல தெரிந்தது.பைக்கில் விஜய் செல்லும் காட்சி முழுக்க கிரீன் மேட் தான் தெரிந்தது.அவ்வளவு போலி!இரட்டையர்கள் அன்பறிவ் இது மாதிரியான ரோப்& கிரீன் மேட் சண்டைக்காட்சிகள் அமைப்பதை குறைத்துக்கொண்டால் நலம்!

         படத்தின் பலகீனம் இரண்டாம் பாதி.திடீரென்று எதோ இந்திரா சௌந்தரராஜன் எழுதிய கதையை படிக்கும் உணர்வு!

     மேலும் “நீதான் லியோன்னு ஒத்துக்கோ” என்று தொடர்ந்து சஞ்சு பாபா தொடங்கி கடைமட்ட அடியாட்கள் வரை மிரட்டுவது எதற்கு என்றே புரியவில்லை! லியோவை கொல்லவா?அப்படி என்றால் லியோ குடும்பத்தை தாக்க வந்த ஒருவனை கடை வாசலில் சஞ்சு தூக்கில் தொங்கி விடுவது ஏன்?

     ஒருவேளை எதோ ஒரு விலைமதிப்புள்ள பொக்கிஷம் ஒரு ரகசிய இடத்தில் உள்ளது.அது லியோவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதாக இருந்தால் கூட இவர்கள் லியோவை தேடுவதிலும் லியோ என்று ஒத்துக்கொள் என்று மிரட்டுவதில் ஒரு நம்பகத்தன்மை இருந்திருக்க கூடும்.

மேலும் ஆங்கில படத்தில் ஜோயி அண்ணன் கோஷ்டிக்கு பெரும் சேதாரத்தை உண்டாக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறான்.ஆனால் தங்கையை பறிகொடுத்த லியோ அதற்கு பழி வாங்காமல் அமைதி காத்தது ஏன் என்ற குழப்பமும் இருக்கு!

    அசல் ஆங்கில படத்தில் அண்ணன் ரிச்சி தம்பி ஜோயிய போட்டு தள்ளத்தான் அழைக்கிறான் என்பது பார்த்த மாத்திரத்தில் புரிய வைத்து விடுகிறார்கள்.ஆனால் இதில் எதற்கு லியோவை தேடுகிறார்கள்? என்றே புரியவில்லை.சஞ்சு லியோ குடும்பத்தை பார்த்து கண் கலங்கிய காட்சி மேலும் குழப்பத்தை தான் உண்டாக்குகிறது.

     விஜய் கெட்டப் பற்றி சொல்ல வேண்டும்.மெய் சிலிர்த்த சேவல் போல ஒரு ஹேர்ஸ்டைல் .பெயிண்ட் அடிக்கும் பிரஷ் போல தாடி.இந்த கெட்டப்பை பிளாஷ் பேக் லியோவுக்கு வைத்து அந்த திருத்தமான லுக்கை கொஞ்சம் வெள்ளை அடித்து பார்த்திபனுக்கு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.குடும்பஸ்தன் லுக் இது அல்ல!வியாதியஸ்தன் மாதிரி இருக்கு! 

      விஜய்க்கு மகள் என்றதும் நமக்கு அடிவயிறு கலங்கியது.தெறி என்ற படத்தை பார்க்காவிட்டாலும் அதில் உள்ள ஓவர் மகள் சென்டிமென்ட் பற்றி தெரியும் என்பதால் இந்த பீதி!ஆனால் இதில் சென்டிமென்ட் அளவாக பயன்படுத்திய விதத்தில் லோகேஷ் பாராட்டை பெறுகிறார் .மகனை பார்த்து “நீ நல்லா ஆப்படிச்சு…சாரி…நல்லா படிச்சு பெரிய டாக்குடர் ஆகோனும் “ என்பது மாதிரியான காட்சிகள் இல்லாதது பெரும் ஆறுதல்.கிங்ஸ் லெவன் சம்மந்தமாக மகன் சத்தியம் வாங்கும் காட்சி நன்றாக இருந்தது. : D (அதான!நல்ல விஷயம் எதுவும் புடிக்காது.ஆனா இது மட்டும்….- கும்மாங்கோ)

        ஆங்கில படத்தில் ஜோயி தான் டாம் என்பது குடும்பத்திற்கு தெரியும்.ஆனால் இதில் மகனுக்கு மட்டும் தெரியும் என்பதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.மேலும் இங்கே ஆக்ஷன் படத்தின் மூலப்படமும் அப்படியே இருக்கும் என்று நினைத்தது தவறு.அது ஒரு slow burner படம்.ஆக்ஷன் காட்சிகள் அவ்வளவு கிடையாது.மேலும் அது ஒரு லோ பட்ஜெட் படமும் கூட.

    மேலும் விஜய் சமூக அக்கறை வசனங்கள்,கம்யூனிசம்,ஜி எஸ் டி அது இதுவென்று அறுக்காமல் இருந்ததே பெரிய ஆறுதல்!மேலும் விஜய் தன்னை தரை லோக்கலாக காட்டிக்கொள்ளும் காட்சிகள் இதில் இல்லை.சிறுவர்& பதின்ம வயது ரசிகர்களை உற்சாகப்படுத்த அங்க சேஷ்டைகள் எதுவும் செய்யவில்லை.யப்பாடா!

 

லோகேஷ் இதேபோல எந்த புதை மணலிலும் சிக்காமல் காட்சிகள் வசனங்கள் இருப்பதை பார்த்துக்கொள்ளுதல் நன்று.

     மேலும் லோகேஷ் எல்லா படத்திலும் போதைப்பொருட்களை மையமாக வைத்து கதையை நகர்த்துகிறார் என்பதொரு குற்றசாட்டு.எடுக்கும் எல்லா படத்திலும் நசுக்கிட்டான் என்று கதையை நகர்த்தும் இயக்குனர்களை  விமர்சிக்க தவறியவர்கள் இதை மட்டும் விமர்சிப்பது ஏன்? 

    

     

      

         

Friday 27 May 2022

விஜயகாந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும்

                     தலைப்பை படித்ததுமே நமுட்டு சிரிப்பு/அட ஆமால்ல! என்ற எண்ணம் வந்தால் நாம் வியப்படைய மாட்டோம்! காரணம் மீடியா மற்றும் தமிழ் சினிமாவை சார்ந்த சில நடிகர்களே. மறைந்த பத்திரிக்கையாளர் ஞாநி ஒருமுறை "அரசியல்ல punching bag ஆக விஜயகாந்த்தை திட்டமிட்டே மாற்றிவிட்டனர்" என்றார்.ஒருவகையில் சினிமாவிலுமே அது நடந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

                  என்னமோ விஜயகாந்த் நடித்த நூற்று அறுபத்து சொச்சம் படங்களிலுமே கையில் துப்பாக்கியுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழித்துக்கொண்டிருந்தார் என்பதுமாதிரியான ஒரு பிம்பம் உண்மையா என்று பார்ப்போம்! விஜயகாந்த் நாயகனாக நடித்த சட்டம் ஒரு இருட்டறை  துவங்கி இறுதியாக அவர் நடித்த விருதகிரி வரையில் கிட்டத்தட்ட 90% படங்களை திரையரங்கில் பார்த்த வகையில் நம்மால் சில விஷயங்களை உறுதியாக கூற முடியும். பாகிஸ்தான் தீவிரவாதிகளை விஜயகாந்த் அழிக்கும் வகையிலான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

                                -தாயகம் படம்தான் அதற்கு ஆரம்பம்.அதில் மன்சூர் அலிகான் கேரக்டர் (வினோதமான மேக்கப்பில்) காஷ்மீரை தனியாக பிரிக்க சில சதிவேலைகள் செய்வார்.அதை கேப்புடன் தடுப்பதாக கதை செல்லும். 

-பிறகு எல்லாரும் troll செய்யும் முதல் படமான வல்லரசு.வாசிம் கானை பிடிக்க கேப்புடன் மேற்கொள்ளும் முயற்சிகள் பிடித்த பின்னர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உள்நாட்டிலேயே இருக்கும் துரோகிகள் என்பதாக கதை செல்லும்.

-அடுத்தது மிக அதிகமாக troll செய்யப்பட்ட கேப்புடன் படம் என்ற பெயரை பெற்ற நரசிம்மா.அதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்தபடி இங்கே சதிவேலை செய்வோரை கண்டுபிடித்து அழிப்பதாக கதை செல்லும்.இதில் வரும் சில சாகச காட்சிகள்(கரண்ட் ஷாக் கொடுக்கும் காட்சி) சமூக வலைதளங்கள் வளர ஆரம்பித்தபோது அதிகமாக troll செய்ய பயன்பட்டன.இதைவிட பல சாகச காட்சிகளில் ரஜினி(ஊர்க்காவலன் காலில் கயிறு கட்டி எதிர்முனையில் ஜீப் நகர மறுக்கும் காட்சி சிறு உதாரணம்) கமல்(விக்ரம் படத்தில் ஆகாயத்தில் இருந்து விழும் கமல் டிம்பிள் கபாடியாவை லாவகமாக பிடித்து தரை இறங்கும் காட்சி) போன்றோர் நடித்திருந்தாலும் ஏதோ விஜயகாந்த் மட்டுமே இப்படியெல்லாம் செய்வதாக ஒரு பொய் பிம்பம் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டது.

நமக்கு கேப்புடன் பட சண்டைக்காட்சிகளின் தரம் வீழ்ந்தது பற்றி கடும் விமர்சனங்கள் உண்டு.புலன் விசாரணை, மாநகர காவல், கேப்டன் பிரபாகரன், கருப்பு நிலா, ஆனஸ்ட்ராஜ் ,சத்ரியன்...etc..etc.., என்று அற்புதமான- யதார்த்தமான- உக்கிரமான சண்டைக்காட்சிகள் கொண்ட கேப்புடன் படங்கள் எத்தனையோ உண்டு.

 


               ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் (அலெக்சாண்டருக்கு பிறகு) அதிகமாக ரோப் ஷாட்களை வைக்க ஆரம்பித்தார் கேப்புடன். சமந்தமே இல்லாமல் காற்றில் பறப்பது(ராஜ்ஜியம் பட கிளைமேக்ஸ்) மீசையை சுண்டி விட்டதும் எதிரிகள் பறந்து போய் தூர விழுவது மாதிரியான காட்சிகள் இடம்பெற்றதை மறுக்கவில்லை.ஆனால் அதே காலகட்டத்தில் வந்த மற்ற ஹீரோக்கள் படங்களிலும் அதே அளவு சாகசங்கள் இருந்தன.அஜீத் விஜய் போன்றோர் படங்களிலும் இன்றுவரையில் அதுபோன்ற காட்சிகள் உண்டு.ஆனால் அவர்கள் என்றும் கேப்புடன் ஆரம்ப காலங்களில் நடித்த அளவுக்கு உக்கிரமான சண்டை காட்சிகளில் நடித்தவர்களில்லை! 

                                 இன்று விஷால் சண்டைக்காட்சியில் நடித்தபோது "முழங்கையில் லேசான கீறல்" என்பதையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்  அங்கலாய்த்து பேசும் நிலைதான் உள்ளது.கேப்டன் பிரபாகரன் சண்டைக்காட்சி படமாக்கலின் போது கை மூட்டு கழண்டு போன கேப்புடன் பற்றியோ கருப்பு நிலா படத்தில் ரோப் எதுவும் இல்லாமலே பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கியபடி நடித்ததையோ எவரும் பேசியதில்லை. 

                                          ஒரு பழைய ஸ்டன்ட் மாஸ்டரை பேட்டி எடுத்தாலும் "நீங்க ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் ,கமலுடன் பணியாற்றிய அனுபவம்" என்றுதான் கேட்பார்களே தவிர கேப்புடனுடன் பணியாற்றிய அனுபவங்கள் அவர் எதிர்கொண்ட விபத்துகள் எலும்பு முறிவுகள் பற்றியெல்லாம் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அதற்கு ஏற்கெனவே உண்டாக்கி வைத்த ஒரு பொதுபிம்பம் தடையாக உள்ளதை மறுக்க முடியாது. இதில் அபத்தத்தின் உச்சம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தனது படத்தில் தொடர்ந்து தீவிரவாதியாக காட்டியதால் அந்த சாபத்தால் இன்று கேப்புடன் உடல் நலிந்து போய்விட்டாராம்.என்ன அபத்தம் இது?ஒரு பொய்யான பொதுபிம்பம் கட்டமைப்பதால் எந்தளவு வக்கிரமான கருத்துக்கள் வருகிறது என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

                                                 இதில் மற்றொரு குற்றவாளி சினிமா துறை சார்ந்த சில நடிகர்களே!! விவேக் காமெடிகளில் தொடர்ந்து கேப்புடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிப்பதையே வேலையாக கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தனது வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பதிய வைத்தார்(விஸ்வநாதன் ராமமூர்த்தி,அலை போன்று பல படக்காட்சிகளை சொல்லலாம்). 

                         சத்யராஜ் மகாநடிகன் படத்திலும் "ஆத்தா ஆடு வளர்த்துச்சு கோழி வளர்த்துச்சு நாய் வளர்க்கல.ஏன்னா அதை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுடுவாங்க" என்று கேப்புடனை மிமிக்ரி செய்து பேசி இருப்பார். 

                            தமிழ் படம் 2 இல் வாசிம் கான் என்ற பேருக்கு வக்காலத்து வாங்கும் காட்சி வைக்கப்பட்டது. 

 மேலும் சினிமா துறையில் பல பத்தாண்டுகள் பழம் தின்று கொட்டை போட்டதாக சொல்லப்படும் தமிழ் டாக்கீஸ் மாறன் போன்றவர்களும் தீவிரவாதிகள் வரும் தற்கால தமிழ் சினிமா விமர்சனம் செய்யும்போது போகிற போக்கில் "இதெல்லாம் ஏற்கெனவே விஜயகாந்த் அர்ஜுன் அடிச்சு துவைச்ச கதை தான்" என்று அடிச்சு விடுவதும் நடந்து வருகிறது .

                          உண்மையில் இம்மாதிரியான அபத்த காட்சியமைப்புகள் வசனங்கள் குற்றச்சாட்டுக்கள் போன்றவைகளுக்கு கேப்புடனோ அல்லது அவர் சார்ந்தவர்களோ என்றுமே மறுத்து அறிக்கையோ பேட்டியோ கொடுக்கவே இல்லை என்பது இந்த வதந்தி மன்னர்களுக்கு வசதியாக போய்விட்டது! இதேபோன்று ஊடகங்களால் ஒரு பொதுபிம்பம் மேலே திணிக்கப்பட்ட மற்றொரு நடிகர் ராமராஜன்.அவர் பற்றி முன்பு எழுதிய பதிவு இதோ

 

                இறுதியாகதிரையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டினால் இங்கு கொந்தளிக்கும் சிலரின் கவனத்திற்காக ஒரு கொசுறு தகவல்:

          பாகிஸ்தானில் அப்துஸ் ஸலாம் என்ற பேரில் ஒரு இயற்பியல் விஞ்ஞானி இருந்தார்.அவரின் பெரும் பங்களிப்பிற்காக அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.1996 இல் அவர் இறந்தபிறகு அவரது கல்லறையில் "the first Muslim Nobel laureate"என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.ஆனால் அவர் அஹமதியா பிரிவை சார்ந்தவர் என்பதால் அவரை இசுலாமியர் என்று ஏற்றுக்கொள்ளாத   மாற்றுப்பிரிவை சார்ந்தவர்கள் கல்லறையில்  இருந்த 'முஸ்லிம்' என்ற வார்த்தையை அழித்துவிட கல்லறையில் மிஞ்சிய வாசகம் "the first  Nobel laureate" என்பதே!

        

Sunday 22 May 2022

The Batman (2022)

                          தற்கால படங்களை ,அது எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் சரி பெரும் எச்சரிக்கை உணர்வுடனேயே பார்ப்பதா வேண்டாமா? என்ற முடிவை எடுக்க வேண்டியுள்ளது.பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக நாம் கருதுவது Woke narrative . இந்த woke narrative நேரடியாக படம் முழுக்க விரவிக்கிடப்பதும் உண்டு.இவை எவ்வளவோ மேல்.நாம் ஒதுங்கி செல்ல முடியும்.ஆனால் ஒரு சாதாரண கதை சொல்லல் என்பதாக ஆரம்பித்து மிக லாவகமாக woke சமாச்சாரங்களை காட்சிகள்- காட்சியின் பின்னணி அமைப்புகள் (தமிழ் சினிமா இதற்கு மிக பிரசித்தம்!)-பாடல் வரிகள்-கதாபாத்திர வடிவமைப்பு என்று பலவிதங்களில் நைச்சியமாக வோக்கிசமை உள்ளே திணிப்பார்கள். ஆனால் இப்படத்தில் அப்படி எந்த woke narrative ம் இல்லை என்பதே பெரும் ஆறுதல்.அதைத்தாண்டி இப்படம் ஒருவகையில் old school வகையறா என்று ஒலக விமர்சகர்கள் சொல்லக்கூடும்.ஆனால் இதுபோன்ற சூப்பர் ஹீரோ படங்கள் அவ்வகையில் அமைவதே சாதாரண ரசிகனுக்கு திருப்தி அளிப்பதாய் அமையும்.
                           உதாரணமாக Wolverine வரிசையில் கடைசியில் வந்த படமான Logan படத்தை சொல்லலாம்!ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக ஒலக சினிமா மாதிரி எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டரை கிழடுதட்டி- தடி ஊனாத குறையாக காட்டி கடுப்பேற்றி இருந்தார்கள்.சூப்பர் ஹீரோ படங்கள் பார்ப்பதன் அடிப்படையே சாமானிய வாழ்வில் சாத்தியமில்லாத ஒரு செயலை ஹீரோ செய்யும் போது ஏற்படும் அந்த சிலிர்ப்பு/துள்ளல்/திருப்தி....etc.... உணர்வுகளுக்காக தான்!

அந்த வகையில் இப்படம் சூப்பர்ஹீரோ லாஜிக்கில் இருந்து பெரிதாக விலகாமல் எடுக்கப்பட்டுள்ளது.கொஞ்சம் விலகி இருக்கிறார்கள்.நோலன் பேட்மேன் சீரிஸ் எடுக்க ஆரம்பித்த போது பேட்மேன்- உணர்வு சிக்கல்களுக்கு ஆட்பட்ட- சாமானிய மனித பலகீனங்களுக்கு உட்பட்ட- ஒரு சாதாரண மனிதன் போலத்தான் என்று மெலிதாக போட்ட கோட்டை இதில் கொஞ்சம் பெரிதாக போட்டுள்ளார்கள். 

                                     உதாரணமாக பேட்மேன் மிக உயர கட்டிட உச்சியில் இருந்து குதிக்கும்போது batsuit ஒரு சிறு பாலத்தின் அடியில் சிக்கி ரோட்டில் தடுமாறி விழுவதாக ஒரு காட்சி வரும்.அதேபோல பட துவக்கத்தில் கொலையாகி இருக்கும் மேயரின் பிரேதத்தை ஆய்வு செய்ய பேட்மேன் வருவதற்கு அங்குள்ள காவல் அதிகாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.பிறகு ஜேம்ஸ் கோர்டன் சொல்கேட்டு அவர்கள் அமைதியாகிறார்கள்.ஆனால் இந்த விதிமீறல் காட்சிகள் இவ்வளவே!மற்றபடி ஒரு சூப்பர் ஹீரோ படத்தை போலவே செல்கிறது.

                                இதில் மற்றொரு மிக சிக்கலான விஷயம் ப்ரூஸ் வெய்னின் பெற்றோர்களை கொன்றது யார்?என்ற கேள்வி!ஒவ்வொரு படத்திலும்- சமீபத்தில் வந்த Gotham தொடரிலும் ஒவ்வொரு மாதிரி கொலையாளியை காட்டிக்கொள்கிறார்கள்.Batman Begins இல் ஒரு சாதாரண வழிப்பறி திருடன்,சில கதைகளில் அது ஜோக்கர்(பேட்மேன் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான Bob Kane இதைத்தான் விரும்புகிறார்) என்றும் இந்த படத்தில் வேறொரு மாதிரியும் காட்டி உள்ளார்கள். இப்படத்தில் ப்ரூஸ் வேய்னின் பெற்றோர்களான தாமஸ் வெய்ன்-மார்த்தா வெய்ன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பிற சினிமா/சீரிஸ்களை விடவும் முற்றிலும் வேறுமாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒருவித இருண்மையான வடிவமைப்பு. 

                                            Gotham தொடர் பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இடையில் இப்படத்தை பார்க்கும் போது சில குழப்பங்கள் எதிர்பார்த்தபடி வந்தன.Riddler கேரக்டர், ப்ரூஸ் வெய்ன் வயதை ஒத்த ஆளாக இதில் காட்டப்பட்டுள்ளார்.காதம் தொடரில் ப்ரூஸ் வெய்ன் சிறுவனாக இருந்த போது காதம் காவல் நிலையத்தில் தடயவியல் துறையில் பணியாற்றுபவராக ரிட்லர் காட்டப்பட்டிருப்பார்.இப்படத்தில் பெங்குயின் கதாபாத்திரத்துக்கு காதம் தொடரளவு முக்கியத்துவமான காட்சிகள் நிறைய இல்லை.ஆனால் படத்தில் முக்கிய திருப்பம் பெங்குயினால்தான் வருகிறது.

                           வெப்சீரிஸ் சினிமா இரண்டும் வெவ்வேறு அவகாசத்தில் பயணிக்கும் என்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.சீரிஸில் கொஞ்சம் நிதானமாக கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து அவரவர் பின்னணிகளை தனித்தனி எபிசோடுகளாக காட்டலாம்.சினிமாவில் அதை செய்ய முடியாது. 

                                   படத்தில் அட்டகாசமான இரண்டு அம்சங்கள் இசை மற்றும் ஒளிப்பதிவு.படத்தை பார்ப்பதற்கு முன்பிலிருந்தே படத்தின் பின்னணி இசையை கேட்டு பழகியதால் படத்தின் தொனி இன்னதாக இருக்கும் என்பதை உணர்ந்து உடனே கதைக்குள் பயணிக்க முடிந்தது.குறிப்பாக Riddler கதாபாத்திரத்துக்கான தீம் . ஒளிப்பதிவு என்பது Arkham Asylum &Arkham City ஆகிய வீடியோ கேம்களை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது.படத்தில் ஒருவித பழுப்பு tone கதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. 

                                  பேட்மேனின் உளவியல் சிக்கல்களை குழப்பங்களை மனப்பாரங்களை நோலன் ஏற்கெனவே ஓரளவு தொட்டிருந்தாலும் இதில் அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக இருண்மையான தொனியில் எடுக்கப்பட்டது சிறப்பு. 

                                  இதில் பிடித்த விஷயங்கள் மேலும் சில. சாதரணமாக தற்கால படங்களில் கணினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் கணினியின் மானிட்டர் திரையில் க்ரீன் மேட் போட்டு பிறகு அதில் சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ கிராபிக்ஸ் சுழன்று கொண்டிருப்பதாக காட்டும் அபத்தம்(விவேகம் படத்தில் ஸ்பைடர் படத்தில் பார்த்தால் உங்களுக்கு புரியும்) இதில் இல்லை.மினிமலிஸ்ட்டிக் ஆக சாதாரண Line user interface மட்டுமே ரிட்லர் உடனான பேட்மேனின் கணினி உரையாடல் நிகழ்கிறது.ஏற்கெனவே ஜான் விக் படத்தில் அத்தகைய யுக்தி பிரமாதமாக இருந்தது.Keep it simple! 

                                   தவிர ப்ரூஸ் வெய்ன் பயன்படுத்தும் கார் ஒருவித எண்பதுகளின் எபெக்டை தருவது ;நோலன் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட Batpod வடிவமைப்பு அதன் செயல்பாடுகள் இவை எல்லாம் படத்தில் ரொம்ப நுட்பமாக பார்த்து செய்திருந்ததால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் ஆகியுள்ளது.படத்தின் டைட்டில் டிசைன் நன்றாக இருந்தது.

                            ராபர்ட் பேட்டின்சன் டுவைலைட் என்ற படுசுமாரான படங்களின் நிழலில் இருந்து வெளியே வர கடுமையாக போராட வேண்டியிருந்தது.இப்போதும் அவரை ஒரு நல்ல நடிகர் என்று உலக விமர்சகர்கள் பலர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அதில் அவரின் கதாபாத்திரம் எல்லாமே இதுவரை நன்றாக அமைந்து வந்துள்ளது.ஹாரி பாட்டர் மாயவலையில் இருந்து வெளியே வரமுடியாமல் இன்றுவரை தவிக்கும் டேனியல் ரேட்கிளிப் மாதிரியல்லாமல் இவர் டுவைலைட் மாய பிம்பத்தில் இருந்து எப்போதோ வெளியே வந்துவிட்டார்.

                                     காதம் என்பது ஒரு கற்பனை நகரம் என்று சொன்னாலும் இன்றைய உலகம் என்பதே ஒரு மாபெரும் காதம் போலத்தான் இருக்கிறது.படத்தில் மேயர் ,District Attorney காவல் ஆணையர் தொடங்கி அத்தனை அதிகார மட்டமும் புழுத்து நாறிக்கொண்டிருக்கிறது.அந்த அழிவை, பொய்களை, சீர்கேட்டை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தும் வேலையைத்தான் ரிட்லர் செய்வதாக கதை செல்கிறது.அதைத்தாண்டி அடுத்த மேயராக வரப்போகும் பெண் நல்லவராக காட்டப்படுகிறார்.சினிமாவிலாவது இப்படியான நல்ல அதிகார வட்டத்தை பார்க்க முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்! :D 

                                       நோலன் படங்களில் ஜேம்ஸ் கார்டன் கமிஷனர் ஆக இருப்பார்.இதில் லெப்டினென்ட் ஆக வருகிறார்.ஒருவகையில் இது காதம் தொடரின் கதைக்கும் நோலன் காட்டிய கதையின் காலகட்டத்திற்கும் இடைப்பட்டதாக நாம் காண்கிறோம்!காதம் தொடரில் கார்டன் ஒரு சாதாரண டிடெக்டிவ்.அப்போது ப்ரூஸ் வெய்ன் சிறுவனாக இருப்பான்.பட்லர் ஆக இருக்கும் அல்ப்ரெட் கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் பெரிய வேலையில்லை என்றாலும் செலினா கய்ல் எனும் கேட் வுமனுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

                                       இப்படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது.இதையே பல விமர்சகர்கள் மிக நீளம் என்று அங்கலாய்த்திருப்பதை கண்டேன்.நம்மை பொறுத்தளவில் மூன்று மணி நேர படமோ அல்லது மூன்னூறு மணி நேர வெப் சீரிஸோ நீளம் முக்கியமல்ல!படம்/சீரிஸ் பார்க்கும்போது "என்னடா இது!இன்னும் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கு?" என்று பார்க்க வைக்காமல் இருப்பதே ஒரு இயக்குனருக்கு வெற்றி என்று கருதுகிறேன்.அவ்வகையில் நமக்கு இப்படம் நீளமாக தெரியவில்லை! 

                                        படம் முடியும் தருவாயில் ஆர்க்கம் அசைலமில் இருக்கும் ரிட்லர் உடன் இன்னொரு மிகப்பெரிய பேட்மேன் வில்லன் கதாபாத்திரமொன்றை காட்டுகிறார்கள்.அந்த கதாபாத்திரத்தை எப்படி வடிவமைக்க போகிறார்கள்.அதை வைத்துக்கொண்டு இரண்டாம் பாகத்தை எப்படி கொண்டுபோக போகிறார்கள் என்பதில்தான் இயக்குனர் மேட் ரீவ்ஸ்க்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

Sunday 9 January 2022

கோலிவுட் ரவுண்டப்-6.0

பிவகுமார் வீட்டுக்கு முன்ஜாக்கிரதையாக ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சென்றோம்!வழக்கம்போல "செல்போனை குடுத்துட்டு போ ராஜா..ஆ." ஒரு குரல் கேட்க பம்மியபடி அவர் கையில் மொபைலை கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாதை மூன்றாக பிரிய எந்த வழியில் போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது கிலோ கணக்கில் பழைய பேப்பர்களை சுமந்தபடி பத்து பணியாட்கள் செல்ல நாமும் ஆர்வத்தோடு அவர்களை பின்தொடர்ந்தோம். "...ம்ம்...ஹூம்..வேணாம்!..இன்னும் நல்ல ஹெவி சம்பவமா எடு!" "ஐயோ!அவங்க பீரியட்ல நடந்ததா?அப்போ வேணாம்...இவிங்க பீரியடை மட்டும் தேடுங்க போதும்" என்று குரலை பின்தொடர்ந்தால் அங்கே கூர்யா நின்றபடி தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்! "ண்ணா வணக்கமுங்க" என்று பம்மியபடி வணங்கி ஒரு மூலையில் சென்று நின்றோம். "நல்லா முற்போக்கு புரட்சி பொதுவுடைமைன்னு கேமராவ பாத்து ஆவேசமா பேசுறாப்ல சப்ஜக்ட் இருக்கணும்!அதுக்கு தகுந்தமாதிரி செய்தியை தேடி எடுங்க"
நாம் அமைதிகாக்க கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா ஒரு சந்தேகம்" "ம்.நானே பிஸியா இருக்கேன்.சரி கேளுங்க" "படத்துல பொதுவுடமை கார்ப்பரேட் ஒழிப்புன்னு பேசுறீங்க.ஆனா அந்த படத்தையே நீங்க பொதிகை டிவிக்கு குடுக்காம எதுக்கு தனியார் சேனலுக்கும் தனியார் பெருநிறுவனத்துக்கும் கொடுக்குறீங்க?" "இவனுங்க இம்சை தாங்கல" என்ற மைன்ட் வாய்ஸ் நமக்கு சத்தமாகவே கேட்டாலும் ஒன்றும் கேட்காதபடி முகத்தை வைத்துக்கொண்டு அவரையே பார்க்க "து....வந்து.....அது .....நிச்சயமா....சத்தியமா..." "அண்ணா கேள்விக்கு பதிலை சொல்லுங்கன்னா உங்க டிரேட்மார்க் வசனத்தை சொல்லி பம்முரீங்களே!" "வந்துடுச்சு" இது உதவியாளர் "டேய் வந்துடுச்சுன்னா வெளிய போயிட்டு வா.பழைய பேப்பர் நினைப்புல இங்கையே ....கூர்யா கவுண்டரை பார்த்து முறைக்க .......இல்ல..இங்கையே படிச்சத சொல்லுன்னு சொல்ல வந்தேன்" "***2 ல ஒரு சம்பவம் நடந்திருக்கு...என்று பேப்பரை காட்ட "ம் என்றபடி கூர்யா அதை படித்துக்கொண்டிருக்க கவுண்டர் சும்மா இல்லாமல் மீண்டும் "அண்ணா இன்னொரு சந்தேகம்" "படத்துக்கு துளு மொழில தலைப்பு வக்குறீங்க.ஆனா படத்துல யாராவது துளு மொழில பேசுனா பளார்னு அறை உடுறீங்க!இது எப்படிங் " "அதுவா! அவன்கிட்ட ஏன் கேக்குற?என்னை கேளு" என்றபடி பிவகுமார் வேகமாக வர "ஐயோ சாமீ!எஸ்கேப்" என்றபடி கவுண்டர் ஜூட் விட நாமும் பின்னாலேயே அப்பீட் ஆனோம்! ******************************************************************************* அடுத்து அஜய் கேதுபதி!அவர் ஒரே நாளில் நூறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதை அறிந்து எங்கு சென்று அவரை சந்திப்பது என்ற குழப்பத்தில் நடந்துகொண்டிருந்தபோது "ஐயோ!" "கலத்கா மத் கர்" "சம்பேஸ்தானு" "எள்ளி நோடுத்தர" என்ற அதட்டல் குரல்கள் கேட்க செட்டுக்குள் நுழைந்தால் நெற்றிமாறன் இயக்கம் கிடுதலை ஸ்பாட்.வழக்கம்போல நாலு ஜிம்பாய்ஸ் நடுவில் ஜட்டியுடன் தலைகீழாக தொங்கி கொடிருக்கும் ஆசாமியை வெளுத்துக்கொண்டிருக்க பக்கத்தில் கூரி "Dhis ish dhe dreatmend par nad delling dhe drudh" என்று பேசியபடி நடுநாயகமாக தடியுடன் அஜய் கேதுபதியை வெளுக்க
நெற்றிமாறன் வழக்கம்போல "அப்படித்தான்!நெஞ்சுல மிதிலே!விலாவுல குத்துலே!போன தடவையும் ஆஸ்கர் மிஸ்ஸாகிட்டு!இந்த தபா உடமாட்டேன்" என்று கத்த நடுவில் யார் தொங்குவது என்று கூர்ந்து நோக்கினால் அஜய் கேதுபதி!ப்பா!என்றபடி நாம் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்! ******************************************************************************** நூறு பைக்குகள் குறுக்கும் மறுக்குமாக போய்க்கொண்டிருக்க நடுநாயகமாக "படம் ரிலீஸாகும் வரை ஒற்றை டயரில் பைக்கை இடைவிடாமல் ஓட்டி பெட்ரோலை காலி செய்யும் போராட்டம்" என்று சிலர் கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்!புரிந்தபடி நாம் வெளியேறினோம்!( கவுந்தியடிகள் மேற்கோள் எதுவும் அங்கே இல்லையா?- கும்மாங்கோ) ******************************************************************************** அடுத்து குஜை நடிக்கும் "ஃபீஸ்ட்". டேபிள் நிறைய சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்க அதை தொடாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்தபடி அரை இட்லியை மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார் குஜை.பக்கத்தில் இயக்குனர் பல்சன்."அண்ணா ஒப்பனிங் சீனே நீங்க அப்படியே பத்து ஃபுல் அடிச்சிட்டு டேபிள் முழுக்க இருந்த ஐட்டங்களை முழுங்கிட்டு அப்படியே காஜ்பிரண் கணக்கா ரத்தம் சொட்டும் ஆட்டுத்தொடை எலும்பை வாயில் கவ்வியபடி ஆவேசமாக கேமராவை பாக்குறீங்க.பக்கத்தில் நூறு அடியாளுங்க அடிவாங்கி மயக்கத்தில் இருக்க "ஐ ஆம் கமிங்" என்று ஃபேஸ்டைமில் வில்லனுக்கு சவால் விடுறீங்க.அங்க டைட்டில் போடுறோம்! "ஃபீஸ்ட்"... ..."ம்ம்....சூப்பர்!அப்படியே டாப் கியர்ல போட்டு தூக்கு" "வில்லன் க்ரூப் காலேஜ் பசங்களுக்கு ட்ரக் சப்ளை பண்ணுது.நீங்கள் காலேஜ் ப்ரொபசர்.ஆனா லுங்கி கட் பனியனோடுதான் காலேஜ் போறீங்க!" "யோவ் போன படத்தையே திரும்ப சொல்லாத!வேற வேற!" "வில்லன் க்ரூப் ஒரு மெடிக்கல் மாபியா...நீங்க ஒரு..." "கம்பவுண்டரா??யோவ் முன்னாடி என்னோட முந்தைய படத்த சொன்ன!இப்ப உன்னோட முந்தைய படமா?...வேற..வேற..."
"வில்லன் க்ரூப் விக்குக்குள்ள போதைப்பொருள் வச்சி கடத்துறாங்க...நீங்க ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்!ஒரு நாளைக்கு ஒரு விஐபி கஸ்டமருக்கு ஹேர் ஸ்டைலிங் பண்றப்போ அந்த விக்குல கொஞ்சம் போதைப்பொருள் இருப்பதை ஸ்மெல் பண்றீங்க.அப்படியே அதோட பின்னணியை ஆராய ஒரு விக் விக்கும் கடைக்கு போறீங்க.அங்க உள்ள தடியனுங்க எக்குதப்பா பதில் சொல்ல வில்லன் க்ரூப்புக்கும் உங்களுக்கும் மோதல்.அப்புறம் நான் சொன்ன அந்த ஒப்பனிங் ஸீன்.." "ம்ம்...ஓகே.மேல போ" ******************************************************************************** அடுத்து கோயஸ் பார்டன் சென்றோம்!மகா அமைதி நிலவ கேட்டை திறந்து உள்ளே சென்றால் நான்கு இயக்குனர்கள், ஒரு போஸ்ட்மேன், ஒரு வாட்ச்மேன் கதை சொல்ல வரிசையில் காத்திருந்தனர்."ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆவாது" என்றபடி நாமும் சோபாவில் ஒரு ஓரத்தில் அமர்ந்தோம்! கஜினி வந்தார்."அட என்னப்பா நீ?கைய வேற கால வேற தனித்தனியா தூக்கிட்டு இருப்பியா?" என்று கவுன்டர் அடிக்க கஜினி அவரை கண்டுகொள்ளாமல் "ம்ம்....கடைசி .....ம்ம்...எத்தனை படமோ!எல்லாம் பப்படம்!கதை சும்மா நச்சுன்னு இருக்கணும்.நீ சொல்லு" இயக்குனர் பிவா " ஸார் ஓப்பன் பண்ணா கொல்கத்தா!அங்க நீங்க கையில வெட்டருவாவோட ஆவேசமா நிக்குறீங்க!பக்கத்துல உங்க தங்காச்சி" கஜினி பெரிய கும்பிடு போட்டபடி "நீ கிளம்பு ராசா" என்று அடுத்து போஸ்ட்மேனை அழைக்க... "தலைவா ஓப்பன் பண்ணா நீங்க ஸ்கூல் வாசல்ல நிக்குறீங்க .அப்படியே உங்க மகள் கேரக்டர் ஓடிவந்து "டாடீ" என்று கட்டியணைக்க வர உங்கள் மனைவி கேரக்டரான டென்தாரா மகளை புடிச்சி இழுத்துட்டு போக நீங்க கண்ணீர் தளும்ப உங்க மகளை பாக்க ...." "இது அந்த பிவா உன்னை சொல்ல சொல்லி குடுத்த கதைதான?" என்று கஜினி கேட்க... "து....அது...வந்து.." "கிளம்புங்க!நெக்ஸ்ட்"
"ஓப்பன் பண்ணா உங்களுக்கு ஒரு பேத்தி...அவ மேல உயிரா இருக்கீங்க.." "அவுட்!பொண்டாட்டி தங்காச்சி பொண்ணு பேத்தின்னு யாராவது சொல்றதா இருந்தா இப்பவே கிளம்புங்க" என்று கும்பிட அனைவரும் அப்ஸ்காண்ட்! கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா! அல்லக்கைங்கல நாலு அப்பு அப்புங்க!எப்ப பாத்தாலும் "'எங்கேயோ கேட்ட ஓலம் ,கள்ளும் மலரும்' படங்கள்ல ஒரு மகாநடிகன் தெரியுறான்"னு உசுப்பிவிட்டத நம்பி நீங்களும் செண்டிமெண்ட் படமா நடிச்சி தள்ளுறீங்க!இதுல சில ஒலக விமர்சகனுங்க சமிதாப் ரேஞ்சுக்கு நீங்களும் நடிக்கணும்னு சொல்லிட்டு திரியுறான்!அப்படி சொல்றவன் ஒருத்தனை புடிச்சி படம் எடுக்க சொன்னீங்கன்னா அதுக்கப்புறம் ஒருபய இப்படி உசுப்பேத்த மாட்டான்!வரட்டுங்களா!" என்றபடி வெளியேற நாமும் வெளியேறினோம்! ************************************************************************** அடுத்து லோகநாயக்கடு நடிக்கும் பிக்ரம் பட ஸ்பாட்.கும்மிருட்டில் கம்பேனி ஆர்டிஸ்ட் சூழ லோகநாயக்கடு நின்று கொண்டிருக்க அருகில் போகேஷ்."ஆண்டவரே அப்படியே டபார் டபார்னு எதிரி க்ரூப் ஷூட் பண்ணிகிட்டே முன்னேறி வரான்.உங்க சைடு ஆளுங்களால கண்ட்ரோல் பண்ண முடியல!என்னடா பண்ண போறோம் என்று அங்கலாய்க்க அப்படியே நீங்க என்ட்ரி குடுக்குறீங்க.கைல வெறும் தகடை புடிச்சிகிட்டு முன்னேற எதிரிகள் சுட குண்டுகள் அப்படியே தெறிச்சி விழ...பிக்ராம் என்று உங்களின் பின்னணி குரலில் அப்படியே என்ட்ரி குடுத்து தகட்டை தூக்கி போட்டுட்டு எதிரிகளை நோக்கி சுடுறீங்க. கவுண்டர் வழக்கம்போல "அண்ணா ஒரு சந்தேகம்" "வெல் இவுரா?யாருப்பா உள்ள உட்டது" என்ற முகபாவத்தை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் செய்துகொண்டு "ம்ம்..கேளுங்க" "சுடுறவன் தகட்டு மேலேயேதான் சுடுவானா?ரெண்டு இன்ச் கீழ சுட்டா முட்டிக்கால் தெரிச்சிடுமே.அப்புறம் கபாலம்!" "அதெல்லாம் தெரிஞ்சவன எங்க படத்துல வில்லனா இருக்க உட மாட்டோமில்ல" என்றால் பிமல். "ஆமா!படம் முழுக்க உங்க புகழ் பாடுறா மாதிரி தான கேரக்டரை செட் பண்ணுவீங்க!" "அப்புறம் அந்த கிண்டியன் படம் என்னங்க ஆச்சு?" "வெல்!ஆ!கிண்டியன் வருமா வராதா?என்ற கேள்விக்கு வரும் வராது என்று பைனரியில் சொல்ல இயலாது.வரலாம்!வந்தும் வராமல் போகலாம்!வராமலும் வரலாம்!அப்படியே வந்தாலும்..." "பப்படம் ஆகலாம்!" என்று கவுன்டர் அடிக்க பிமல் முறைக்க நாம் எஸ்கேப்!

Saturday 27 February 2021

கொலைவெறி குறுங்கதைகள்-சுராத்து

இடி மின்னல் கடும் மழை.......... கும்மிருட்டு.....பல்வேறு தெருக்களில் இருந்து தினுசு தினுசாக எழும் நாய் குரைப்புகள்-ஓலங்கள்...... ......... அந்த இருட்டில் சாலையோரத்தில் ஒரு சில்லவுட்......தலையில் சாக்கு மாட்டியபடி குத்தவச்சி உக்காந்திருக்கு..... தமிழ் சினிமாவில் கிராமத்து ஏழ்மையை பறைசாற்றும் அந்த பின்னணி இசை ஒலிக்கிறது... ஏ.....ஆயி....ஈ...ஈ....என்ற கிழவியின் குரல்.... . அந்த வார்த்தைகள் உண்டாக்கியோ எபெக்டோ என்னவோ....சுராத்துக்கு அடிவயிற்றில் ஒரு கடமுடா...... .....நல்லவேளையாக எதிரிலேயே கட்டண கழிப்பிடம்.... ....அவசரமாக உள்ளே ஓட முயற்சித்த சுராத்தை ஒரு முரட்டுக்கரம் தடுத்து நிறுத்தி....காசு.....
எவ்வளவு?
எதுக்கு?
***ரெண்டு விரல்***சிக்னல் காட்ட...
பத்து ரூவா....
பாக்கெட்டில் இருப்பதோ ஐநூறு ரூபாய் மட்டும்...அதை தயக்கத்தோடு நீட்ட..
சில்ற இல்ல என்றது முரட்டுக்குரல்...
என்கிட்டயும் இல்ல.ஆனா அவசரமா வருதே...
பரவால்ல!மிச்சம் நானூத்தி தொண்ணூறுக்கும் போய்க்கோ....
***மண்டைக்குள் இடிச்சத்தம்****** .......டக்...டக்....டக்....மிழ்நாடே......டக்...டக்...வதை ....டக்....டக்...முகாம்....போல....டக்க்க்....உள்ளது... கேரளாவில்....சுண்டு..விரல்....தட்டினால்...சொர்க்கம்....க்ரக்க்....கக்கக்......கக்க....டக்....நிசப்தம்.... ...ஏய்ய்ய் என் தலைவன் லுமும்பா நாட்லேர்ந்து அனுப்புற தந்தி ஏண்டா பாதில நின்னு போச்சு?சொல்றா என்று சுராத்து தந்தி ஆபிசரின் சட்டையை உலுக்க.....யோவ்...இன்னிக்கி நைட் பன்னெண்டு மணியோட தந்தி சேவைக்கு மொத்தமா மங்கலம் பாடுறாங்க.இது தெரியாம வந்துட்ட...ஓடிடு...என்று மிரட்ட வெளியே தெறித்து ஓடுகிறான்.... ********************************************************************** *********
*தில்லி சர்வதேச எழுத்தாளர் மாநாடு
... . சூர்யாவுக்கு யாரும் அழைப்பிதழ் கொடுக்காவிட்டாலும் சுராத்து சூர்யா ஓணான்டிப்புலவர் மற்றும் உத்தமமேகன் நால்வரும் வாண்டனா டில்லிக்கு ரயில் பிடித்து சென்று எப்படியோ அங்கே நுழைந்துவிட்டனர்.(நான்கு நாள் மாநாடு என்பதால் அங்கேயே தங்கும் வசதி உணவு ஏற்பாடு வாட்டர் சர்வீஸ்... எல்லாம் உண்டு என்பதை கேள்விப்பட்டுத்தான் அவர்கள் அங்கே சென்றார்கள் என்பதை தனியா வேற சொல்லணுமா?-கும்மாங்கோ)... . ஈகிள் டிவியின் அசல் தொகுப்பாளர் மாணிக் தனது தம்பியின் காதில் மாட்டிய இயர்பீஸ் மூலம் சூர்யாவை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்து ஒருவரமே ஆகியிருந்த நேரம்.... . இது குறித்து சூர்யாவுக்கு தன்னையறியாமல் கடும் கோபம் ஏற்பட்டு அவ்வப்போது கை முஷ்டியை முறுக்குதல்,டேய்ய்ய்ய் என்று தன்னையறியாமல் கத்துதல்(ஒருமுறை சினிமா தேட்டரில் படத்துக்கு நடுவே சூர்யா ஆவேசமாக டேய்ய்ய் என்று கத்தியதும் அதே தருணத்தில் ஹீரோவை வில்லன் திட்டியதால் ஹீரோவின் ரசிகர்கள் தேட்டரில் பதிலுக்கு கத்தியதும் சின்க் ஆக தப்பித்தான் சூர்யா-கும்மாங்கோ) என்று நிகழ்ந்து வருவதையும் பொருட்படுத்தாமல்(உண்மையில் இப்படியெல்லாம் நிகழ்வது சூர்யாவுக்கே தெரியாது என்பது மற்றொரு காமெடி) தில்லிக்கு சப்ஜாடா கிளம்பி சென்றுவிட்டனர்.எப்படியோ அழைப்பிதழ் இல்லாமலேயே உள்ளே புகுந்து ஒரு டார்மெட்டரியில் இடமும் பிடித்துவிட்டனர். இவர்கள் நான்கு பேர்.அந்தப்பக்கம் ஒரு மலையாள சாகித்யக்காரன்,அவர் பக்கத்தில் ஒரு பஞ்சாபி எழுத்தாளர்.இந்தப்பக்கம் ஒரு ஹிந்தி எழுத்தாளரும் ஒரு எஸ்பன்யோல் எழுத்தாளரும் தங்கியிருந்தனர். . நள்ளிரவு நேரம்...எல்லாரும் மட்டையாகிக்கிடக்க.... ஆரம்பித்தது கூத்து..... ஆழ்ந்த உறக்கத்தில்(உபயம்:கெமி மார்டின்+சுண்டக்கஞ்சி ) இருந்த சூர்யாவின் மண்டைக்குள் சிரிப்பு சத்தங்களும் கிண்டல் குரல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக "மன்னிப்பு கேள்" என்ற குரலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது..... . மன்னிப்பு கேள்ள்...
அந்த மண்டைக்குரலுக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா பாயிலிருந்து எழுந்தமர்ந்து கேக்க முடியாதுடா....என்று எதிரில் யாருமே இல்லாவிட்டாலும் ஆள்காட்டி விரல்காட்டி ஆவேசமாக கத்தினான்... . பிறகு தூக்கம்.... . அரைமணிநேரம் கழித்து..... மன்னிப்பு கேள்ள்..... கைகளை பவ்யமாக கட்டியபடி "கேக்குறேன் கேக்குறேன் கேக்குறேன்"....என்று தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சூர்யா தூங்கிவிட... .
ஒருமணிநேரம் கழித்து மீண்டும்.....மன்னிப்பு கேள்.... டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று ஆவேசமாக சூர்யா கத்த சுற்றி இருந்தவர்கள் எழுந்தமர்ந்து இதை தமாஷாக கவனிக்க ஆரம்பித்தனர்...பகூத் மஜா ஆ ரஹா ஹே..என்றபடி ஹிந்தி எழுத்தாளர் ரசிக்க ஆரம்பித்தார்... . மன்னிப்பு கேள்.... .போடாங்...... . மன்னிப்பு கேள்..... கேட்டுடுடுறேன்..... . மன்னிப்பு கேள்...... பூத்தா மா** என்று சூர்யாவுக்கு தெரிந்த ஒரே எஸ்பன்யோல் வசைமொழியில் திட்ட எஸ்பன்யோல் எழுத்தாளர் சூர்யாவை ஆச்சரியமாக பார்க்கிறார். . சுராத்து வழக்கம்போல இரவு நேரங்களில் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன் மாட்டியபடி கில்மா படங்களில் வரும் பின்னணி ஒலிகளை மட்டும் தனி ஆடியோவாக மொபைலில் போட்டு கேட்டபடி ரசித்து மகிழ்ந்தபடியே உன்மத்த நிலையில் தூங்குவது வழக்கமென்பதால் வெகுநேரம் சுற்றி நடப்பவை குறித்து தெரியாமல் இருந்தவன் திடீரென்று இருட்டில் ஒரு உருவம் காற்றில் பாக்ஸிங் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்து விழிக்கிறான்.
சூர்யாவின் மன்னிப்பு கேட்கும் படலத்தை கண்டவன் உடனே போன் செய்து "ஆங்.....ஒரு லொபோடமி கேஸ் இருக்கு.சீக்கிரம் வாங்க" என்று துண்டிக்கிறான். இதைக்கேட்ட சூர்யா "எனக்கா லொபோட்டமி?இருடி!உனக்கு வாசெக்டமிக்கு ஏற்பாடு பண்றேன்" என்று யோசித்தபடி போன் செய்து "ஆங்.....ஒரு அரிசி ஆப்பரேஷன் பார்ஸல்.ஆமா!தில்லி எழுத்தாளர் மாநாடு.டார்மிட்டரி நாலு..வாசப்படிலேர்ந்து நாலாவது ஆசாமி.அள்ளிட்டு போங்க" என்று துண்டித்துவிட்டு சுற்றி இருந்தவர்களை பார்த்து "நத்திங்...நத்திங்" என்றபடி படுக்கையில் பம்முகிறான். ****************************************************************************** இன்றைக்கு ஈகிள் டிவியில் நரியா?நாயா? நிகழ்ச்சியில் அடியேன் கலந்துகொள்ள உள்ளேன்.டிவி ஸ்டேஷனுக்கு செல்லும் ஆட்டோ செலவு ரிட்டர்ன் செலவு+சோலா ஷெரட்டன் டின்னர் செலவு என்று வாசகர்கள் எனக்கு தாரளமாக அனுப்பலாம்.குறைந்தபட்ச தொகையாக நூறு டாலர் அனுப்பவும். ****************************************************************************** சுராத்து எழுதிய ஸ்டெப்னி நாவல் சேல்ஸ் பிய்த்துக்கொண்டு போக அதன் தொடர்ச்சியாக "தொப்புளில் ஊசி போடுவது எப்படி?" என்ற மகாமகோ காவியமும் விற்றுத்தீர(எதுதான் விக்குமென்று எவனுக்கு தெரியுது!-கும்மாங்கோ) சூர்யா கடும் வயிற்றெரிச்சலில் இருந்தான்.அவனுக்கு ஆப்படிக்கனுமே!என்றபடி க்விட்டரை ஒப்பன் செய்து "சுராத்து லமுதிகவில் சேரப்போகிறாராம்!கேள்விப்பட்டேன்" என்று ஒரு கீச்சை தட்டிவிட்டுவிட்டு..."இருடி இன்னக்கி நைட்டு உனக்கிருக்கு பூஜை!" என்று அகமகிழ்ந்து தூங்க சென்றான். ****************************************************************************** இருட்டுல யாரு அரிசி ஆப்பரேஷன் ஆசாமின்னு தெரியலையேடா!என்று இரு ஊழியர்கள் குழம்பியபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சூர்யா சுராத்து இருவரும் உச்சா போய்விட்டு மப்பில் வந்து படுக்கும்போது இடம்மாறிவிட்டதால் இந்த குழப்பம்.சரி ரெண்டையும் அள்ளிப்போடு!நமக்கும் எக்ஸ்ட்ரா இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்று சு,சூ ரெண்டையும் மயக்க மருந்து உதவியுடன் ஆப்பரேஷன் தியேட்டரில் வைத்து முடித்தார்கள்.அரிசி ஹார்லிக்ஸ் சாத்துக்குடி சுபம். நோ....ஓ...ஓ....ஓ......என்று சூர்யா கதற சுராத்தோ சேதுவாகி விட்டத்தை வெறித்து பார்த்தபடி படுத்திருந்தான். ************************************************************************* நாயர் கட இட்லி மட்டும்தான் சென்னைல சிறந்தது என்று தப்பா சொன்னதுக்கு மன்னிப்பு கேள்!
...இது மாணிக் தம்பி பாபி. .................................ஈகிள் டிவி ஸ்டுடியோ........................................... . ஆடியன்ஸ் புடைசூழ. ..நாயா?நரியா? ப்ரோக்ராம். . . . . . சார்...அதுவந்து.... . வந்து போயிலாம் அப்புறம்!மொதல்ல பொய் சொன்னதுக்கும் உங்களோட வாசகர்களை ஏமாத்துனதுக்கும் மன்னிப்பு கேள்.... . என்ன நடந்ததுன்னா... . மன்னிப்பு கேள்...அப்புறம்தான் எல்லாம்... . டேய்ய்ய்ய்...என்று கூட்டத்தில் இருந்து சுராத்து பொங்கி எழ..உடனே இரண்டு பவுன்சர்களின் கவனிப்பில் கப்சிப் ஆகிறான்... . சரி....ன்னிச்சிடுங்க... . இல்லையே...சரியா கேக்கல!சத்தமா என்று தும்பி பட ஆதவன் போல பாபி கேட்க..
மன்னிச்சிடுங்க!மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க!
...சரி...சரி....போதும்.இத்துடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் பாபி சூர்யாவுக்கு கொடுத்த விருந்தை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவன் பிறகுதான் தன்னை பாபியும் மாணிக்கும் வச்சி செஞ்சது மண்டையில் உறைக்க...அப்போதிலிருந்து "மன்னிப்பு-கேள்-கேக்க முடியாதுடா..." ரீல் ஓடிக்கொண்டிருக்கிறது.சூர்யாவின் தளத்திலும் முன்னூற்றி இருபத்தாறு பாகங்களாக மன்னிப்பு கேள் வந்தது. ****************************************************************************** ட்ரிங்...ட்ரிங்....மகா காவிய படமொன்றை ம்யூட்டில் வைத்து ரசித்துக்கொண்டிருந்த சுராத்து போனை எடுக்கிறான்.."யாரு?" டேய் என்னமோ கட்சில செரப்போறியாமே? அண்ணா அது நா இல்லீங்ணா! பின்ன சூர்யா கவீட் பண்ணி இருக்கான்.அது பொய்யா? பொய் தானுங்க! என்னடா நீ டெராபைட் கணக்கா சேத்து வச்சிருக்கும் கில்மா படங்களை இங்கிருந்தபடியே ஒரே செகண்ட்ல டெலீட் பண்ணி காட்டவா? பேயறைந்த மாதிரி அதிர்ந்த சுராத்து அண்ணா அந்த மாதிரி ஆசைலாம் எனக்கு இல்லீங்ணா!என்று கெஞ்சி சமாதானப்படுத்தி போனை வைத்ததுமே அடுத்த ரிங்....இப்படி விடிய விடிய... ******************************************************************************
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
...நள்ளிரவு நேரம். பேகம் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் அரிஸ்டாட்டில் சூர்யாவை வச்சு செஞ்சது நினைவுக்கு வர...சூர்யா கத்தியபடி வழக்கம்போல் ஆவேசமாக இருட்டில் பாக்ஸிங் போடுகிறான்.
"பேகம் ஒரு வனஜாதேவி புத்தகம்!"
வ ன ஜா தே வி பு.....த்.. . த...க.....ம்......வனஜாதேவி.....ஜா...ன...வ....வி....தே...... உடனே ஆவேசமாக லேப்டாப்பை ஆன் செய்து அரிஸ்டாட்டிலுக்கு முன்னூற்றியாறு கண்டன கடிதங்களை எழுதி வலையேற்றம் செய்கிறான் சூர்யா. ....அதில் இருந்து சில வரிகள்... . இந்த அரிஸ்டாட்டிலுக்கு தான் பெரிய கஷிமோட்டோ சுகிமோட்டோ என்று நினைப்பு.எடுத்தது வெறும் இரண்டு படங்கள்.முழுக்க அபத்தம்.அவரது படங்களில் க்ராப்ட் இல்லை(காதி கிராப்ட் கடையில் கேட்டிருந்தா கிடைச்சிருக்குமே?-கும்மாங்கோ).வெறும் வெற்று உலக சினிமா பாவனைகளும் அப்பட்டமான காப்பி அடித்தல்களுமே அவரது படங்கள்.... ***************************** அரிஸ்டாட்டில் என்னை அழைத்திருந்தார்.வரமுடியாது என்றேன்.சுண்டக்கஞ்சியும் கருவாடும் வாங்கி வைத்திருப்பதாக சொல்லி முடிப்பதற்குள் அங்கே ஆஜரானேன். காதில் ஹெட்போன் மாட்டிவிட்டு இந்த பின்னணி இசையில் எப்போது சகீலா அறைக்குள் நுழைகிறார் என்று சரியாக சமிக்ஞை செய்யுமாறு சொல்லிவிட்டு ஆடியோவை ஆன் செய்ய ....நான் கண்மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தவன் இந்த இடமா என்று ஒரு தருணத்தை குறிப்பிட ஆமாம் என்று பாராட்டினார்!(அப்போ பேகம் நாவலை வனஜாதேவி புத்தகம் என்று சொன்னதற்கு அரிஸ்டாட்டிலை நேற்றுதானே திட்டினார்!இப்போ எப்படி பம்முறார்? என்று கேட்கும் லீனியர் பிலிஸ்டைன் குஞ்சுகள் உத்தமமேகனின் ரசவடை கதைகளை படித்தே சாகுங்கள்-எண்பதாம் நூற்றாண்டின் செத்த மூளை)... .
சரி...வந்தவேலையை செய் என்று சொல்லிவிட்டு குப்புற படுத்துக்கொள்ள நான் அவருக்கு மாலீஷ் செய்துவிட்டேன்-குயில புடிச்சி கூண்டிலடைச்சி கூவ சொல்லுகிற.....ஏய்....ஸ்டாப்....ஜப்பானிய பாடல் பாடு... .....கவாசாகி மியாசகி.....மியாசாகி ஹஷிமோட்டோ......ஹ்ம்ம்...நாலாம் சீலேவுல.... ....ஏய் மூடிட்டு மசாஜ் பண்ணு..ம்...அப்படித்தான்.... **************************************************************************************************************************************************** அடுத்தநாள் இரவு... எழுத்தாளர்கள் அனைவரும் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க இப்போது சில சத்தங்கள்.சூர்யா இல்லை.அவன் சப்தநாடியும் ஒடுங்கியவனாக அசைய முடியாது படுத்துக்கிடக்க...பக்கத்தில் ஓணாண்டிப்புலவர் தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தபடி ... என்னமாதிரியான எண்ணையில் சமோசா போடுகிறோம்? என்னமாதிரியான சிமண்டில் பில்டிங் கட்டுகிறோம்? என்னமாதிரியான அரிசி ஆப்பரேஷன்களை செய்கிறோம்? என்னமாதிரியான கட்சிக்கு ஜால்ரா தட்டுகிறோம்? ....இப்படியாக விடாது தலையை சிலுப்பியபடி ஆவேசமாக இருட்டோடு பாக்ஸிங் போட்டுக்கொண்டிருக்க..
பக்கத்தில் உத்தமமேகன் மொபைலில் அந்த அரசியல் வாரிசு கல்லூரி மாணவிகளின் எல்கேஜி கேள்விகளுக்கு ப்ரீகேஜி லெவலில் பதில் அளிக்கும் வீடியோவை அகமகிழ்ந்து பார்த்தபடி...ஆகா!என்ன தேஜஸ்!என்ன ஒரு ஆற்றல்!சிரிக்கும்போது விழும் கன்னக்குழி இருக்கே!இதுக்கே இவரை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கலாம்!என்னன்னே தெரியல !இந்த மனுசனை ரொம்ப புடிக்குதே!ஆகா ஓகோ!
சரி!இந்த டாப்பிக்கை வச்சிக்கிட்டு ஒரு கோடி வார்த்தைகளில் ஒரு சிறு பத்தி எழுதி நம்ம சைட்ல போடுவோம்!சடலூர் பீனு இதை சிலாகிச்சி ரெண்டு கோடி வார்த்தைகளில் ஒரு சிறு கடிதம் அனுப்புவான்!நமக்கும் பொழுது போவும்...என்றபடி டைப் செய்யத்துவங்க... இதை ஓரக்கண்ணால் பார்த்த சூர்யா "ஆகா டாபிக் கிடைக்காம ஏதேதோ பெனாத்திட்டு இருக்குறதுக்கு இதே டாபிக்கை நாமும் யூஸ் பண்ணிக்கலாமே!"என்றபடி அந்த அரசியல் வாரிசு போன்ற ஒருவரே தலைவராக வர வேண்டும்.நாட்டின் எஸ்டிடி பற்றி ஆனா ஆவன்னா தெரியாட்டியும் பரவால்ல!எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்று கடித்ததில் குடித்தது என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதி வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்.(இப்பவாச்சும் வாரிசின் கட்சியில் உள்ள எண்ணற்ற கோஷ்டிகளில் ஒரு கோஷ்டியின் கடைக்கண் பார்வை நம்ம மேல பட்டா ரெமி செலவுக்கு ஆகும் என்ற நப்பாசைதான் என்பதை சொல்லவும் வேண்டுமா?-கும்மாங்கோ)... . அமலாதித்த பல்லவன் எழுந்து அமர்ந்து "ஐயோ!இதுங்க மத்தில மாட்டிகிட்டு நா படுற பாடு போதும்டா!" என்றபடி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். . . ******************************************************************************************************************************* சூர்யா எழுதிய ஒரு பதிவு: .
**ஒரு கிரிமினலின் கடிதம்**
எனக்கு தினமும் ஆயிரம் ஆபாச கடிதங்கள் வருகிறது(எடைக்கு போடலாம்னு பாத்தா எல்லாம் ஈமெயில்!-கும்மாங்கோ)..ங்கோ என்று நேரடியாக திட்டும் கடிதங்கள் எவ்வளவோ மேல்.ஆனால் இதுபோன்ற கடிதங்கள்தான் இந்த பிலிஸ்டைன் சமூகத்தின் புண்ணை படம் போட்டு காட்டுகிறது.இதோ கடிதம். .
எடே சாரு, எப்போ பாத்தாலும் சூபிக்கள் ரூமி என்று ஜல்லி அடிக்கிற.ஆனா அதே ரூமி எழுதுன மஸ்னவி தொகுப்பில் இனவெறியும் கொலைவெறியும் இருப்பது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?இதோ ஆதாரத்தை அட்டாச்மென்டில் கொடுத்துள்ளேன்.
BTW மன்னிப்பு கேள் எபிஸோட் நடந்து 11 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
-இப்படிக்கு பறிக்கி.
. * சூபிக்கள் என்று நான் சிலாகிப்பதே ஒரு பக்கெட் பிரியாணிக்குதான்.தவிர நான் வரலாறு என்று எழுதுவதெல்லாம் எனக்கு தோன்றுவது மட்டுமே.அதை நிஜத்தோடு ஒப்பிடுவது என்னை வன்கலவி செய்வதற்கு சமம்.இந்த கடிதத்தை பாலிஸ்தான்தாசன்- பனடா பிரதமர் புருடோவுக்கு அனுப்பியுள்ளேன்.அவர் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.டேய் பறிக்கி குஞ்சு உனக்கு இருக்குடா ஆப்பு! . ********************************************************************************************************************************
சீச்சீ....துத்தூ....பொப்போ......
சுராத்துவின் இந்த ஸ்டேட்டசுக்கு ரெண்டாயிரம் லைக் மற்றும் ஆயிரம் ஷேர்.

Friday 15 January 2021

கோலிவுட் ரவுண்டப் 5.0

 Pituitary warning: சிகரெட் பிடித்தல் உயிரை கொல்லும்.புடிக்காம இருந்தாலும் வேற எதாச்சும் காற்றில் பரவி கொல்லும்!

.
டுமீல்.....டிஷ்.......டமால்.....dispararle a la muerte...

 டப்.....டுப்....

...............

.Shoot...Shoot.....
.
அமேசான் அடர்ந்த காட்டின் நடுவே...
மம்பு  ஓடிக்கொண்டிருக்க பின்னால் அமேசான் வன பாதுகாப்புப்படை....
.
ஐயோ!இந்த குகீந்திரன் பேச்சை கேட்டது தப்பா போச்சே...
.
டுமீல்...
..பின்னாலிருந்து வந்த புல்லட் ஒன்று மம்புவின் முன் மண்டையின் கற்றை முடியை கழட்டிக்கொண்டு போகிறது....
.
போச்சா!இனி "அவரு" மாதிரி பேட்ச் விக் வச்சித்தான் நடிச்சாகணும்!ஏற்கெனவே அக்ரமை போட்டு  காஜராட்டைன்னு வச்சு செஞ்சதை பாத்தப்பவே நா உசார் ஆகியிருக்கணும்!இப்ப பாரு முன்னாடி க்ளார் அடிக்கும்படி ஆகிப்போச்சே.....
.
லோக்கல்ல அழகா என்னோட வீட்டு பாத்ரூம்ல  டீசருக்கான சீனை எடுக்கலாம்னு சொன்னதை வேணாம்னுட்டு அமேசான் காட்டில் அனகோண்டாவை உசுரோட கையில புடிக்குறமாதிரி காட்டுனாத்தான் த்ரில்லுன்னு சொன்ன அந்த டைரக்டர் எங்கடா....என்றபடி புதருக்குள் மறைந்து ஓடுகிறார்....
.
நாம் அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆனோம்.
.
******************************************************************************
அடுத்து அடுத்து சென்றது பல்பேட்டா ஷூட்டிங் ஸ்பாட்.... கொருக்குபேட்டை ஜிம்...

.
பஞ்சித்: ம்...அப்டிதான் மாம்ஸ்....உன்னும் வெறும் ஆயிரம் ஸ்குவாட்தான் மிச்சம்.....
.
 கார்யா: .....நுரை தள்ளியபடி......  "அய்யய்யோ.......ஜாலியா நொந்தானத்தோட காலேஜ் வாசல்ல கிரவுண்ட்நட்  போட்டுக்கிட்டு இருந்தவனை  இப்படி பெண்டு நிமித்துறியே மச்சி...இது நாயமா?


.
பஞ்சித்: இன்னா தல மெர்சல் ஆவாத பண்ணு.நெக்ஷ்ட்  இயர் கீட் எக்ஜாம்ல "நீ எத்தினி வாட்டி தண்டால் எட்த்த" ....அத்தான் கொஷின் ஆ வரப்போவுது...
.
கார்யா: ஆமா ஒரு சிங்கிள் க்வெஸ்டின்....அதுக்காக மொத்தமா ஆல்  பாடி பார்ட்ஸும் டேமேஜ் ஆகிடும் போலயே!....அய்யய்யோ என்று அலறியபடி மீண்டும் ஸ்க்வாட்ஸ்!
.


***********************************************************************************************************
அடுத்து நாம் சென்ற இடத்தில் தேய்ந்து போன ரெகார்டாக ஒரு வருடமாக  ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..

 

..லை....ப்.....இ....கர்ர்...ர்ர்ர்ரர்.....ஸ்....வெ....கர்ர்ர்ர்.....ரி....ஷா....ர்ர்ர்...ட்....ந....கர்ர்ர்ர்....ண்பா..........
.
கவுண்டர்: எந்த நேரத்துல வாய வச்சாங்களோ!ஒலகத்துல பாதி பேர் மேல டிக்கட் வாங்கிட்டான்....சரி இங்கேர்ந்து மொதல்ல ஜூட் விடுவோம்...
.
********************************************************************அடுத்து அஜய் கேதுபதி வீடு...கணசிங்கம் என்ற கிங்கள பெயர் தலைப்பை மாற்றக்கோரி வீட்டின் முன்பு நூறு பேர் மல்லாக்க படுத்து மறியல் செய்துகொண்டிருக்க இடையில் இருந்த கேப்பில் கால் வைத்து ஜம்ப் பண்ணி நாம் உள்ளே சென்றோம்....
.
அஜய் கேதுபதி முகமூடி அணிந்து நம்மை வரவேற்கிறார்...
.
கவுண்டர்: ...ண்ணா ......ஒரு டவுட்டு...
.
அ.கே: சொல்லுங்கஜி..
.
கவுண்டர்: போன வருசம் பாஸ்டர் ஆடியோ ரிலீஸ் பங்க்சன்ல ஒண்ணு சொன்னீங்களே நியாபகம் இருக்கா?
.
அ.கே:ஜி....சாரிஜி.....நியாபகமில்ல...
.
கவுண்டர் :(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒரு வாரத்துக்கு பத்து படம்னு கால்ஷீட் குடுத்துட்டு இருந்தா எப்படி நியாபகம் இருக்கும்....ஆ...அது வந்துங்ணா...."நம்ம மனசு சுத்தமா இருந்தா எதுக்கும் நாம பயப்பட வேண்டியதில்லைன்னு சொன்னீங்க.ஆனா நீங்க ஏனுங்ணா முகமூடி போட்டிருக்கீங்க?உங்க மனசு சுத்தமில்லையா?
.
அ.கே:...து...அது...வந்துஜி......
.
கவுண்டர்:க்கும்...தமிழ்நாட்ல மைக்கும் மேடையும் கெடச்சிட கூடாது!சகட்டுமேனிக்கு அடிச்சி விடவேண்டியது...என்ன ஏதுன்னு விளக்கம் கேட்டா பம்ம வேண்டியது!அவனவனுக்கு தெரிஞ்சத செய்ங்க!உனக்கு என்ன தெரியும்?
.
அ.கே:து....வந்து......
.
கவுண்டர்: கேக்கக்கூடாத கேள்விய கேட்டுட்டேன் போல!சரிங்ணா நீங்க வழக்கம் போல மேடைல மைக்க புடிச்சு ஆட்டையாம்பட்டி அரசியல்லேர்ந்து ஆப்ரிக்க அரசியல் வரைக்கும் சகட்டுமேனிக்கு அடிச்சி உடுங்க!இப்ப என்ன ஆளை உடுங்க!
.

*******************************************************************************
அடுத்து கலிமை ஷூட்டிங் ஸ்பாட்....
.
எந்த வருசம் ஷூட்டிங் ஆரம்பித்தது என்பதையே மறந்துபோய் காலமற்ற ஒரு வெளியை உள்ளே செல்லும்போதே நாம் உணர்ந்தோம்.
.
நுழைவாயிலில் ஒருவர் தலையை பிய்த்துக்கொண்டு உக்காந்திருக்க...என்ன என்று கேட்டதில் தான் கன்டின்யுவிட்டி பாக்கும் ஆசாமி என்றுசொல்ல விவரம் புரிந்து உள்ளே சென்றோம்.
.
பத்து பைக்குகள் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக பாய்ந்துகொண்டிருக்க நமக்கு எந்த சேதாரமும் வந்துடக்கூடாது என்ற சுயநலத்தில் எஸ்கேப் ஆனோம்!
.

**********************************************************************************
அடுத்து ரெண்டாயிரத்தில் ஒருவன்  பட ஸ்பாட்.

வழிநெடுக கும்மிருட்டு.ஆங்காங்கே எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் தொங்க ரத்தவாடை....


யார்னா இருக்கீங்களா?


ஊ ஊ ஊ என்று ஊதக்காத்து......

 
யார்லாம் இருக்கீங்க?
கும்மிருட்டில் இரண்டு கண்கள் மட்டும்.....
நெல்லாடிய நிலமெங்கே .....
கவுண்டர்: அதெல்லாம் பிளாட்டு போட்டு வித்தாச்சுங்ணா
சொல்லாடிய அவையெங்கே?
கவுண்டர்: அதெல்லாம் ஷாப்பிங் மால் ஆகிடுச்சு!
வில்லாடிய களமெங்கே?
கவுண்டர்:கேட்டட் கம்யூனிட்டி!ஆ நெக்ஸ்ட்...
கல்லாடிய சிலையெங்கே
கவுண்டர்: இதுக்கு கவுன்டர் அடிச்சா வீண் வம்பு!கப்சிப்!
தாய் தின்ற மண்ணே.. தாய் தின்ற மண்ணே....
கவுண்டர்:(கனுசுவின் தலையை பிடித்து ஆட்டியபடி) ஏன்டா பெத்த தாய்க்கு சோறுபோடாம மண்ணை திங்க வச்சிட்டு பெருமையா பாட்டு வேறையா?
. தா தீம்த.. திகு தக..
தா.. திரனன தா.. ஜிகு தக தா..

.
கவுண்டர்: ஓ!தமிழ்ல பாடுனா கலாய்க்கிறோம்னுட்டு துளு மொழில அளக்குறான்.....அடங்கப்பா முடியலடா!எஸ்கேப்!
.

*********************************************************************************
அடுத்து கூர்யா எந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்...எது டிராப் ஆச்சு என்று எதுவுமே புரியாதநிலையில் அவர் வீட்டுக்கே சென்றோம்.வாசலில் பிவக்குமார் " செல்போனை எங்கிட்டே குடுத்துட்டு உள்ள போ ராஜா..ஆ ஆ " என்றுசொல்ல  கீழே விழுந்தால் பிக்ஸல் தெரிச்சிடும் என்ற முன்யோசனை பயத்தில் பவ்யமாக அவரிடம் மொபைலை குடுத்துவிட்டு உள்ளே செல்கிறோம்..நூறு காலர் வச்ச ரவிக்கையும் நூறு காட்டன் புடவையும் பண்டலாக வந்து இறங்க...ஓ!ககுந்தலா தேவி ரீமேக் என்று புரிந்து அதை கடந்து சென்றோம்

தகச்சிக்கு தகச்சின் ....தகச்சிக்கு தகச்சின்....தகச்சிக்கு தகச்சின்....ரட்டட்ட....தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...ரட்டட்டட்

.
என்னாதிது?போதிகாதான் சோலோ படத்துல மட்டும்தான நடிக்கிறாங்க?அப்புறம் எப்படி புஷி பாட்டு?என்று குழம்பியபடி உள்ளே சென்றால் அங்கே பட்டாபட்டியோடு கூர்யா சேறுபூசியபடி நிற்க ரெண்டு பக்கமும் ரெண்டு அல்லக்கைகள் பயர் எஞ்சின் ஹோஸ் வைத்து தண்ணீரை பீய்த்து அடித்துக்கொண்டிருந்தார்கள்...


.
கூர்யா:...ம்...அப்படித்தான்!நல்லா வேகமா அடிங்க!காடிவாசல் படத்துக்காக மெனக்கெட்டு ரெண்டு மாசமா சேத்துளையும் வெயில்லயும் நின்னு ரெடியானா படம் ட்ராப்புன்னுட்டாங்க!அடுத்து சிட்டி சப்ஜக்ட்!பழையபடி ஜூஸ் குடிச்சு தெளியவச்சிட்டுதான் நடிக்க போகணும்!ம்....அப்படித்தான் அப்படியே ரெண்டு இன்ச் வலது இடுப்புல ஃபோர்சா அடி....அப்பாடா...
.
கவுண்டர்: ஏனுங்கணா எதுக்கு அப்படி செய்ய சொல்றீங்க?
.
கூர்யா:காடிவாசல் கேரக்டரோட முகபாவம் எப்பவும் கல்லடைப்பு வந்தவன் மாதிரி இருக்கணும்னு டைரக்டர் சொன்னாரு!அதான் நெஜமாவே....
.
கவுண்டர்: ஆங்!புரியுதுங்!டேய் அல்லக்கை...போய் அண்ணனுக்கு பழம் வாங்கிட்டு வா!ஒண்ணு இங்க இருக்கு!இன்னொன்னு இதான்னு சொன்னான்னா நடக்குறதே வேற!ஓடு!
.
பிவக்குமார்: என்ன இங்க சத்தம்?
.
கவுண்டர்: பம்மியபடி...ஒண்ணுமில்லீங்!என்றபடி வெளியேற நாமும் அவரோடு எஸ்கேப்!
.




********************************************************************************
அடுத்து செக்கந்தராபாத்தில்  ஒரு ஷூட்டிங்  ஸ்பாட்.நுழைவாயிலில்  பெரிய பலகையில்...

ஷூட்டிங் நேற்று நடந்தது.....இன்னக்கி நடக்கல...நாளைக்கி....!!!!!

 

 

என்று எழுதியிருக்க...

.
கவுண்டர்: இஹாஹாஹா என்று நக்கலாக சிரித்தபடி கடந்துசெல்ல நாமும் பின்னால் பம்மினோம்.

**********************************************************************************

அடுத்து காசர் எழுந்தருளும் பாழ்வார்பேட்டை சென்றோம்.....

வழிநெடுக பேனர் கட்டவுட் தோரணங்கள் துண்டுசீட்டு..இத்யாதி...இத்யாதி....

.

அல்லக்கைகளை தாண்டி உள்ளே செல்லவே மூன்று மணி நேரமாகிவிட்டது!உள்ளேயும் பெருங்கூட்டம்.கூட்டத்தின் இடையே லேசாக கிடைத்த இடைவெளியில் எட்டி பார்த்ததில் காசர் டாஸ் போட்டுக்கொண்டிருந்தார்...

...கிண்டியன் 2 ஷூட்டிங் போகணுமா?இல்லாட்டி அக்ரம் ஷூட்டிங்கா?

.


 

டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......

 

நாணயம் காசரின் பேச்சு போல மையமாக நிற்க.....சிறிதுநேர அமைதிக்கு பிறகு...பிரச்சாரம்!ஆரம்பிக்கலாங்களா? என்று கூறியபடி அடிப்பொடிகள் சூழ வெளியேறுகிறார்.