Friday 8 February 2013

வடக்குபட்டி பஸ் ஸ்டாப் D1

அய்யா ஷாஜி எச விமர்சனம் என்ற பெயரில் சாருவையே மிஞ்சும் விதத்தில் அவ்வப்போது உளறி கொட்டி கொண்டிருந்தாலும் சில சமயம் உருப்படியான பதிவை எழுதுகிறார்..அது எப்பன்னா இசை தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது மட்டும்..ஏற்கெனவே ஜன.2009 ஆம் ஆண்டில் ஸ்பீக்கர்கள் பற்றி ஒரு நல்ல பதிவை எழுதினர்..அதன் பின் இம்மாத உயிர்மையில் "ஒலியா இசையா" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியுள்ளார்..அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம்தான் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது..இம்புட்டு நாளாக தெரியாம போய்டுச்சே என நினைத்தேன்..அது வினைல் ரெகார்ட் மூலம் கேட்கும் இசை ஆடியோ சிடியில் கேட்கும் தரத்தை விட உயர்ந்தது என்பதுதான்...இணையத்தில் இது குறித்து தேடிய போது அது உண்மைதான் என தெரிய வந்தது.ரிகார்ட் ப்ளேயரின் தரத்தில் ஆடியோ சிடியால் ஒலியை வழங்க முடியாது என்பது ஆச்சரியமான உண்மை 

http://jimmyred.hubpages.com/hub/Why-Vinyl-Records-Sound-Better-Than-CD

************************************************************************************
ஜெமோவை எங்கு பாத்தாலும் காறி துப்பனுமாம்...அய்யா சாரு சொல்றாரு..ஜெமோ தான் 1999 ஆண்டு முதல் எழுதிய அனைத்து பதிவுளையுமே இன்றும் அவரது தளத்தில் படிக்கலாம்..அவர் அதை டெலிட் செய்து விட்டு நான் எங்கே எப்போ எதை சொன்னேன்னு மழுப்பியதில்லை.ஆனா அய்யா சாரு இருக்காரே  யப்பா யப்பா...இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் கிளீன் ஸ்லேட் (நன்றி: டார்க் நைட் ரைசஸ்) ஆக்கிவிட்டு நான் எங்கே அப்படி சொன்னேன் ஆதாரம் காட்டுன்னு கேக்குற கில்லாடியாச்சே...இப்போ யார் முகத்தில் நியாயமாக காறி துப்பனும்னு தனியா சொல்லனுமா என்ன?
 
**********************************************************************************
 
டில்லி பாலியல் கொடுமை பற்றி பல விவாதங்கள் நடந்தாலும் முக்கியமான ஒன்றை பற்றி பேசாமல் விட்டுடாங்களோ என எண்ண வைக்கும் விஷயம் இது...அந்த குற்றம் நடந்தது ஒரு தனியார் பேருந்தில்.டில்லி அரசு தானே பேருந்து சேவையை நடத்த வக்கற்று உள்ளதா?தனியாரை ஊக்குவிப்பதற்கு இந்த துறைதான் கிடைத்ததா?ஒரு பேருந்தை சொந்தமா வச்சிருந்தா பேருந்து சேவை என்ற பெயரில் ரேப் கிட்னாப் என்று எது வேண்டுமானாலும் செய்யும் வாய்ப்பை அது ஏற்படுத்தாதா?சரி காங்கிரசு தனியாரின் கைக்கூலி..பிற காங்கிரசு அல்லாத மாநில அரசுகள் கஷ்டமோ நஷ்டமோ என அரசு பேருந்து சேவையை நடத்தி வருவதற்கும் மறைமுக முட்டுக்கட்டை போடும் விதமாக டீசல் விலையை பதினோரு ரூபாய் உயர்த்தி இருக்கிறீர்கள்...அப்போ பிறரும் இது போல தனியார் பேருந்து சேவையை அனுமதித்து குற்றங்களை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரசு அரசின் விருப்பமா?
***********************************************************************************
நோ கமண்ட்ஸ்