Sunday 28 February 2016

Sleeper(1973)

படத்தைப்பற்றி  பொதுவாக  எழுதுவதைவிட  அதில்  விவாதிக்கப்பட்ட  சில  விஷயங்களை  முன்வைத்து  ஓரிரு  எண்ணங்களை  பதிவு  செய்யவே  இப்பதிவு.

           ஒரு  கடை  உரிமையாளராக  இருக்கும் மைல்ஸ்  மன்றோ (வுடி  ஆலன்)  ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.  இரநூறு ஆண்டுகள் உறைநிலையில் வைக்கப்பட்டு அதன்பின்  எழுப்பப்படுகிறார்.அங்கே  ஒரு  ஒடுக்குமுறை  ஆட்சி.அதற்கெதிரான  போராட்டம்.....


        இதில்  சில முக்கியமான  காட்சிகளை  தமிழக  அரசியலை  முன்வைத்து  விவாதிக்க  வேண்டியுள்ளது.
        மன்றோவை  அமரவைத்து  இரநூறு  ஆண்டுகளுக்கு  முன்பான  பிரபலங்களின்  புகைப்படங்கள்  காட்டப்படுகிறது.அமெரிக்க  சனாதிபதியாக  இருந்த  நிக்ஸனின்  புகைப்படமும்  காட்டப்படுகிறது.
                    "இவர்  அமெரிக்க  சனாதிபதியாக  இருந்திருக்கிறார்.ஆனால்  அவர்  ஏதோ  பெருந்தவறு  செய்திருந்ததால்  அவர்  பற்றிய  எந்த  தகவலும்  இங்கே  இல்லை.ஸ்டாம்ப்  கூட"..
  மன்றோ: "ஆம்.இவர்  அமெரிக்க  சனாதிபதியாக  இருந்தவர்தான்.இவர்  ஒவ்வொருமுறையும்  வெள்ளை  மாளிகையை  விட்டு  வெளியே  சென்றபோது  சீக்ரட்  சர்வீஸ்  (வெள்ளை  மாளிகையில்  உள்ள) வெள்ளி  பாத்திரங்களை  சரிபார்த்தது"

          கவனியுங்கள்.இப்படம்  வந்தபோது  இப்படிப்பட்ட  ஒரு  வசனம்  பேசப்பட்டபோதும்  நிக்ஸன்தான்  பதவியில்  இருந்துள்ளார்.வாட்டர்கேட்  ஊழல்  பரபரப்பில்  இவ்வசனம்  பேசப்பட்டுள்ளது.

     எனக்கு உடனே  தோன்றிய  கேள்வி.."ஒருவேளை  தமிழகத்தில்  பதவியில்  இருப்பவர்  பற்றியோ  இருந்தவர்  பற்றியோ    ஒரு  சினிமாவில்  நகைச்சுவையாகவோ/சீரியஸாகவோ  ஒரு  வசனத்தை  பேசிவிட  முடியுமா?படம்  ரிலீசாகுமா?அதற்கும்மேல்  பேசிய  நடிகரின்  கதி?வசனம்  எழுதியவர்  கதி?இயக்குனர்  கதி?தயாரிப்பாளர்  கதி?கதியோ  கதி!!!
    
               தவறு  நடந்துவிட்டது..சம்மந்தமே  இல்லாத  ஒரு  போட்டோ  மேலே  இடம்பெற்றுவிட்டது..(அந்த  பயம்  இருக்கட்டும்..ahem  ahem-கும்மாங்கோ ..)
            இப்போது  மேற்கத்திய  நாடுகளில்  இருக்கும்  கருத்து  சுதந்திரம்  பற்றி  பாராட்டும்   அதேநேரம்  பொதுவாகவே  உலகில்  எந்த  ஒரு  அரசியல்  கட்சியோ/ராணுவ  அமைப்போ  நடத்தும்  ஆட்சிகள்  என்பது சகிக்க  முடியாத  கொடூரங்களாகத்தான்  இருந்திருக்கிறது/இருந்துகொண்டிருக்கிறது(சில  விதிவிலக்குகள்  உண்டு).
             இப்படத்தில்   சர்வாதிகாரியாக  இருக்கும்  தலைவரை(தலைவர்னாலே சர்வாதிகாரிதானே?-முனியாண்டி)  ஒரு  எதிர்புரட்சி  குழு  வெடிகுண்டு  வைத்து  கொன்றுவிடுகிறது.அவரின்  மூக்கு  மட்டுமே  மிஞ்சியுள்ள  நிலையில் அனைத்து  விஞ்ஞானிகளும்  அழைக்கப்பட்டு  அந்த  மூக்கை  வைத்து  மீண்டும்  தலைவரை  க்ளோனிங்  முறையில்  உருவாக்க  கேட்டுக்கொள்கிறார்கள்  அதிகாரிகள்.
            செம  காமெடி..  ("கிட்ட  வந்தா  உங்க  தலைவரை  கொன்றுவிடுவேன்"  என்று  மூக்கில்  துப்பாக்கியை  வைத்து  மிரட்டுவது...BANG!)
         



லூனா(டயான் கீட்டன்): புரட்சிக்குழுவின்  தலைவன்  எர்னோ  புரட்சியை  முன்னடத்தி  ஆட்சியை  பிடிக்கப்போகிறான்.
மன்றோ:  ஆறு  மாதம்  கழித்து  எர்னோவின்  மூக்கை  திருடிக்கொண்டிருப்போம்..Political solutions don't work ..It doesn't matter who's up there..they are all  terrible..
               இந்த  சமயத்தில்  எனக்கு  தமிழக  அரசியல்தான்  நினைவுக்கு  வந்தது.அவர்  வந்தால்  தமிழகம்  சுபீட்சமாகிடும்..இவர்  வந்தால்  தேனாறும்  பாலாறும்  ஓடும்...நான்  வந்தால்  ஊத்தாப்பத்தை  ஒழிப்பேன்...என்பதெல்லாம்    வெற்று  வாக்கியங்களாகவே தெரிகிறது(அதானே  உண்மையும்??) .ஒரு  நல்லவர்  தலைமை பதவிக்கு  வந்துவிட்டால்  நாடே  திருந்திடும்  என்பதெல்லாம்  naivety ன்  உச்சம்.
   இதன்பிறகு  வரும்  உரையாடல்...
லூனா:  நீ  அறிவியலை  நம்பவில்லை..அரசியல்  தீர்வுகளை  நம்பவில்லை..கடவுளை  நம்பவில்லை...பின்  எதைத்தான்  நம்புகிறாய்?
மன்றோSex and death - two things that come once in a lifetime... but at least after death, you're not nauseous.