Monday 28 January 2013

1984(நாவல்)

                                             நாவலின் துவக்கமே இப்படி வின்ஸ்டன் ஸ்மித் என்பவன் விக்டரி மேன்ஷன் என்ற குடியிருப்பில் வசிக்கிறான்.மணி மதியம் ஒன்று என கடிகாரம் காட்டுகிறது தேதி பதினாலு ...தேதி உண்மையில் பதினாலுதானா? என்பதே அவனுக்கு சந்தேகமாக இருக்கிறது.ஏழாவது மாடியில் இருந்து கீழே இறங்குகிறான்..லிப்ட் என்றுமே உபயோகபடப்போவதில்லை என்று தெரிந்து ஆங்காங்கே இளைப்பாறி கொண்டு இறங்குகிறான்
அவன் இருப்பது ஒஷியானியா என்ற நாட்டில்
அங்கு அனைத்தும் பிக் பிரதர் தான்
என்கு பார்க்கினும் பிக் பிரதரின் போஸ்டர்கள் வானுயரத்துக்கு எந்த கோணத்தில் பார்த்தாலும் உங்களையே பார்ப்பது போல போஸ்டர்கள் நகரமெங்கும்.
BIG BROTHER IS WATCHING
YOU

கட்சியின்  கொள்கை
WAR IS PEACE
FREEDOM IS SLAVERY
IGNORANCE IS STRENGTH


அரசின் அதிகாரபூர்வ மொழி Newspeak(இது அவ்வப்போது மாற்றம் செய்யப்படும்.)
அரசில் நான்கு அமைச்சகம்
Ministry of Truth -Minitrue(Newspeak மொழியில்.இதில்தான் வின்ஸ்டன் வேலை செய்கிறான்)
Ministry of Plenty(Miniplenty)
Minstry of Love(Miniluv)
Minstry of Peace(Minipax)

மினிட்ரூவிற்கு செய்திகள் பொழுதுபோக்கு கல்வி கலை ஆகிய பொறுப்புகளை கவனிக்கும்
மினிப்லென்டி பொருளாதார விஷயங்கள்
மினிபேக்ஸ் போரை கவனிக்கும்
மினி லவ் சட்டம் ஒழுங்கு
இதென்னடா பேருக்கும் பொறுப்புக்கும் சம்மந்தம் இல்லைன்னு கேட்டா இது போல தான்அனைத்தும் ஓசியானியாவில் என்பதன் மூலம் பகடி செய்கிறார் ஆர்வெல்.
Thought police என்பவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள என்பதை டெலி ஸ்க்ரீன் அல்லது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மைக்ரோபொன் வழியாகவோ கண்டுபிடித்து அவர்கள் அரசுக்கு எதிராகவோ பிக் பிரதருக்கு எதிராகவோ மூச்சு விட்டாலும் காலி.அதன் பின் அவர்கள் என்னானார்கள் என்பது யாருக்கும் தெரியாது.மறைந்து போன அந்த நபரின் ஒரு சிறு தடயமோ நினைவு பொருளோ கூட மீதம் இருக்காது.அவன் எங்கே போனான்?என யாரேனும் கேட்டால் அவனும் காலி.ஆதலால் ஒருவனை ஒரு நாளில் காண வில்லை எனில் அந்த நாளில் மட்டும் லேசாக அது பற்றி பேசிவிட்டு மக்கள் மறந்து விட வேண்டும் அல்லது மறந்துவிட்டது போல நடித்ததாக வேண்டும்.

அவன் வசித்த பிளாட்டில் சுவரின் நான்கு பக்கமும் டெலி ஸ்க்ரீன்..அதாவது அது எப்படின்னா அது டிவி போல காட்சிகளை கட்டும் அதே நேரம் நீங்கள் என்ன செய்தாலும் அதுவும் பதிவாகும்(வெப் கேம் போல).நீங்கள் எழுப்பும் சிறு ஒலி கூட அதில் பதிவாகும்.அது கண்காணிக்கப்படும்.
தினமும் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் எழுப்பப்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.வின்ஸ்டன் ஸ்மித் எழுந்து நிற்கிறான்..அம்மணமாக..காரணம் பைஜாமா ரேஷன்.தினம் காலையில் எழுந்த உடன் நுரையீரலையே பிழிந்து வெளியே எடுத்து விடும் அளவுக்கு இருமல்.
உடற்பயிற்சி சொல்லி கொடுப்பவர் எல்லாரும் குனிந்து தங்கள் பாதத்தை தொடுங்கள்..என்கிறார்.ஸ்மித்தால் முடியவில்லை....கமான் எனக்கு 39 வயது ஐம்பது வயதுக்குட்பட்ட அனைவரும் பாதத்தை தொடலாம்.ஆ!... அப்படிதான்..
பைஜாமா மட்டும் ரேஷன் அல்ல சக்கரை கிடையாது அதற்கு பதில் சேக்கரின்,காபி பொடி என்ற பெயரில் விக்டரி காப்பி என்ற ஒரு வஸ்து,சாக்லேட் ரேஷன்,என அனைத்துக்கும் கடுமையான ரேஷன்.
இதில் முக்கியமான விஷயம் Double think என்ற கோட்பாடு.
அது என்னவெனில் தேவைக்கேற்றார் போல பேச்சுகளை மாற்றி கொள்வது.மேலும் பெரியண்ணன் கொடுக்கும்குத்துமதிப்பான யூகங்கள் சரியாக இருந்தால் அவை பெரிதாக விளம்பரபடுத்தப்படும்(பெரியண்ணனின் தொலை நோக்குசிந்தனை பாரீர் என்பது போல) அதே அவரது யூகம் தவறாகவோ நேர்மாராகவோ போய்விட்டால் அவர் கொடுத்த யூகங்கள் அடங்கிய பத்திரிகை பத்திகள் தொலைக்காட்சி பேட்டிகள் வானொலி பேட்டிகள் அனைத்தும் சுவடில்லாமல் அழிக்கப்படும்.அதன்மூலம் பெரியண்ணன் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும் என்ற ஒரு மாயை உண்டாக்கப்பட்டு அதுவே நீடிக்கவைக்க படுகிறது.


 Hate speech என்று  தினம் இரண்டு நிமிடங்கள் காட்சிகள் காண்பிக்கப்படும்.அதில் துரோகிகள் எதிரிகள் ஆகியோர் கொல்லப்படுதல் மற்றும் மிக முக்கியமாக Emmanuel Goldstein என்ற நபர் பற்றி காண்பிக்கப்படும்.இவர் யார்?.இரண்டு நிமிட வெறுப்பு பேச்சுகளில் தவறாமல் இவர் பற்றி காண்பிக்கப்படும்.இந்த கோல்ட்ஸ்டீன் என்பவர் புரட்சி ஏற்படும் நாளில் இருந்தே கட்சியில் முக்கிய பங்காற்றியவர்.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரியண்ணனுக்கு  நிகரான செல்வாக்குடன் திகழ்ந்து பிறகு பெரியண்ணனுக்கு  எதிராக குரல் எழுப்பியதால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கோல்ட்ச்டீன் தலைமறைவாகிறார்(அல்லது அப்படி இருப்பதாக சொல்லபடுகிறது.)ஆனாலும் அவ்வப்போது துண்டு பிரசுரங்கள் புத்தகங்கள் வாயிலாக மக்கள் இடையே பெரியண்ணனுக்கு  எதிராக கலக்கம் செய்ய தூண்டியதாக கோல்ட்ச்டீன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கோல்ட்ச்டீன்  பேசுவதை கட்டும் போதே அனைவரும் நரம்பு புடைக்க வசை பாடுகிறார்கள்.அந்த கருப்பு முடி கொண்ட பெண்மணி ஒருபடி மேலே போய் புத்தகத்தை டெலிச்க்ரீன் மெல் வீசி எறிகிறார்,.
   கோல்ட்ஸ்டீனின் உருவம் விளக்கபடுகிறது.யூத முகம் உருண்டை கண்ணாடி ஆடு போன்ற தாடி மற்றும் ஆடு போன்ற குரல்...இந்த விளக்கம் யாரை குறிக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.Leon Trotsky தான் அவர்.

அந்த கருப்புமுடி கொண்ட பெண்ணை பார்க்கும் போதெல்லாம் ஸ்மித்துக்கு கடும் எரிச்சல் ஏற்படுகிறது.அவளை நிர்வாணமாக்கி உடலுறவு கொள்ளும்போது  climax இல்  கொன்று விட நினைக்கிறான்.
அப்புறம் ஒரு சமயத்தில் அவள் இவனிடம் ஒரு துண்டுசீட்டு கொடுக்க அதில் ஐ லவ் யூ என எழுதி இருக்கிறது.
பாழடைந்த ஒரு கடையின் மாடி பகுதியை ஸ்மித் வாடகைக்கு எடுக்கிறான்.அதில் அவனும் அவளும் குஷியாக இருக்கிறார்கள்.அவள் கடத்தப்பட்ட உண்மையான சர்க்ககரை காபி பொடி சாக்லேட்  என்று கொண்டு வந்து தருகிறாள்.இருவரும் அதை வாழ்நாளிலேயே காணாதது  போல அனைத்தையும்  சுவைக்கிரார்கள்.அந்த அறையில் டெலிச்க்ரீன் இல்லை என்ற குஷியில் நிம்மதியாக கிடைக்கும் நேரங்களில் வசிக்கிறார்கள்.
இப்படி செல்லும் போது திடீரென்றுஇருவரும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லபடுகிரார்கள்.கடுமையான சித்ரவதை உடல் ரீதியாக மற்றும்மன ரீதியாக.இது முழுமையாக முடிந்த பின் அவர்கள் வெளியே விடப்படுகிறார்கள்.பெரியண்ணன் பற்றிய துளி எதிர் சிந்தனை கூட அவர்கள் மனதில் எழாவண்ணம் இருக்கிறது அந்த ட்ரீட்மென்ட்.அப்படி ஏதேனும் ஒரு கணத்தில் அவர்கள் மனதில் அப்படி எதிர் சிந்தனை எழுமானால் அவர்கள் தலையில் பாய தயாராக இருக்கிறது குண்டு.


குழந்தைகள்  அனைவரும் பெற்றோரை கண்காணிப்பது அவர்கள் கடமை என சிறு வயதில் இருந்தே பயிற்றுவித்தது கட்சி.(கல்வி என்பதே பெரியண்ணன் சொல்வதை படிப்பது மட்டுமே. அவர் என்ன சொல்கிறாரோ அதுவே வரலாறு அதுவே பூகோளம்.உலகம் தட்டை என்றோ உலகில் ஓசியானியா மட்டுமே இருக்கிறது என்றோ சொன்னால் கூட அதை நம்பித்தான் ஆக வேண்டும்)
பெற்றோர் யாரேனும் பெரியண்ணனுக்கு எதிராக பேசினாலோ அல்லது கட்சிக்கு எதிராக சதி செய்ய முயல்வதாகவோ அவர்கள் பிள்ளைகளுக்கு தெரிய வந்தால் பிள்ளைகள் தயங்காமல் தாட் போலீசிடம் பிடித்து கொடுத்து விடுவார்கள்.அப்பால அந்த பெற்றோர்கள் evaporate ஆகி விடுவர்.



சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சி அல்ல
சர்வாதிகாரத்தை அடையவே புரட்சி


 ஸ்மித் சித்ரவதை செய்யப்படும் நேரத்தில் ஒ ப்ரைன் பேசும்  சில முக்கிய வசனங்கள்::
பாஸிச  ஜெர்மனி மற்றும் கம்யூனிச சோவியத்தில் துரோகிகள் புல்லுருவிகள் ஆகியோர் சித்ரவதை செய்யபட்டோ அல்லது சுடபட்டோ கொல்லப்பட்டனர்.ஆனால் அவர்கள் இறந்து சில வருடங்களில்அவர்களது சமாதி ஒரு நினைவிடமாகவும் அவர்கள் அமரராகவும் ஏன் தலைவனாகவும் போற்றப்படுவதேன்?
ஏனெனில் அவர்கள் சாகும் கடைசி நொடி வரையில் தாங்கள் முரண்பட்ட கட்சி கொள்கைகளை மனதளவில் சிந்தனை அளவில் ஆத்மாவின் அடி ஆழத்தின் வரை எதிர்த்தே செத்திருக்கிறார்கள்.
அவர்களை சித்ரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தும் பொய் என பிற்காலங்களில் மக்களுக்கு தெரிந்துவிடுவதற்கு இதுவும் ஒரு காரணம்,.
அந்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம்.இறந்தவர்கள் எங்கள் கட்சிக்கு எதிராக வர அனுமதிக்க மாட்டோம்.அதனால் தான் நாங்கள பின்பற்றும் முறை வேறானது.உடல் ரீதியான சித்ரவதைகளை கூட சில மனிதர்கள் பொறுத்து கொண்டிருக்கிறார்கள்..ஆனால் எங்கள் வழிமுறை அனைவரையும் மனதின் ஆத்மாவின் அடி ஆழம வரை சலவை செய்து எங்கள் கொள்கைகளை நிரப்பிய பிறகே அவர்களை கொள்கிறோம்.இதனால் அவர்கள் இறந்த பின் ஒருவரும் சீண்ட மாட்டர்.

மனிதன்  என்பவன் தனியாக இயங்கும் போது தோல்விகளுக்கு ஆட்படுகிறான்...அதே அவன் கட்சி என்னும் அமைப்பில் ஒரு பகுதியாக இருக்கும்போது என்றுமே அவனுக்கு வெற்றி


வின்ஸ்டன் ஸ்மித் கேட்கிறான் : மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகம் இருந்ததே?
ஓ ப்ரையன் : இந்த உலகின் இருப்பே மனித மனத்தின் உணர்வில்தானே? மனிதன் இல்லாத போது உலகம் இருந்தா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை

இது சோவியத்தை மட்டும் குறிப்பதல்ல...இரண்டாம் உலக போரால் சீரழிந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த ரேஷன் முறை இங்கிலாந்து அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இருந்தது.இவ்விருநாடுகளும் கூட இதே அளவு சீரழிந்து அழுக்கடைந்து இருந்தது.ஆர்வெல் இதை மறைமுகமாக குறிப்பிடுகிறார்.
மேலும் இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலக கட்டுப்பாடு காலம் காலமாக வைத்துகொண்டிருந்த இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்காவுக்கு மாறுகிறது..காரணம ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகள்.மேலும் பெரியண்ணன் மனப்பாங்கு என்ற சொல்லாடல் வந்ததே இந்த நாவலால்தான்.இப்படியாக செல்கிறது இந்த நாவல்.