Saturday 27 February 2021

கொலைவெறி குறுங்கதைகள்-சுராத்து

இடி மின்னல் கடும் மழை.......... கும்மிருட்டு.....பல்வேறு தெருக்களில் இருந்து தினுசு தினுசாக எழும் நாய் குரைப்புகள்-ஓலங்கள்...... ......... அந்த இருட்டில் சாலையோரத்தில் ஒரு சில்லவுட்......தலையில் சாக்கு மாட்டியபடி குத்தவச்சி உக்காந்திருக்கு..... தமிழ் சினிமாவில் கிராமத்து ஏழ்மையை பறைசாற்றும் அந்த பின்னணி இசை ஒலிக்கிறது... ஏ.....ஆயி....ஈ...ஈ....என்ற கிழவியின் குரல்.... . அந்த வார்த்தைகள் உண்டாக்கியோ எபெக்டோ என்னவோ....சுராத்துக்கு அடிவயிற்றில் ஒரு கடமுடா...... .....நல்லவேளையாக எதிரிலேயே கட்டண கழிப்பிடம்.... ....அவசரமாக உள்ளே ஓட முயற்சித்த சுராத்தை ஒரு முரட்டுக்கரம் தடுத்து நிறுத்தி....காசு.....
எவ்வளவு?
எதுக்கு?
***ரெண்டு விரல்***சிக்னல் காட்ட...
பத்து ரூவா....
பாக்கெட்டில் இருப்பதோ ஐநூறு ரூபாய் மட்டும்...அதை தயக்கத்தோடு நீட்ட..
சில்ற இல்ல என்றது முரட்டுக்குரல்...
என்கிட்டயும் இல்ல.ஆனா அவசரமா வருதே...
பரவால்ல!மிச்சம் நானூத்தி தொண்ணூறுக்கும் போய்க்கோ....
***மண்டைக்குள் இடிச்சத்தம்****** .......டக்...டக்....டக்....மிழ்நாடே......டக்...டக்...வதை ....டக்....டக்...முகாம்....போல....டக்க்க்....உள்ளது... கேரளாவில்....சுண்டு..விரல்....தட்டினால்...சொர்க்கம்....க்ரக்க்....கக்கக்......கக்க....டக்....நிசப்தம்.... ...ஏய்ய்ய் என் தலைவன் லுமும்பா நாட்லேர்ந்து அனுப்புற தந்தி ஏண்டா பாதில நின்னு போச்சு?சொல்றா என்று சுராத்து தந்தி ஆபிசரின் சட்டையை உலுக்க.....யோவ்...இன்னிக்கி நைட் பன்னெண்டு மணியோட தந்தி சேவைக்கு மொத்தமா மங்கலம் பாடுறாங்க.இது தெரியாம வந்துட்ட...ஓடிடு...என்று மிரட்ட வெளியே தெறித்து ஓடுகிறான்.... ********************************************************************** *********
*தில்லி சர்வதேச எழுத்தாளர் மாநாடு
... . சூர்யாவுக்கு யாரும் அழைப்பிதழ் கொடுக்காவிட்டாலும் சுராத்து சூர்யா ஓணான்டிப்புலவர் மற்றும் உத்தமமேகன் நால்வரும் வாண்டனா டில்லிக்கு ரயில் பிடித்து சென்று எப்படியோ அங்கே நுழைந்துவிட்டனர்.(நான்கு நாள் மாநாடு என்பதால் அங்கேயே தங்கும் வசதி உணவு ஏற்பாடு வாட்டர் சர்வீஸ்... எல்லாம் உண்டு என்பதை கேள்விப்பட்டுத்தான் அவர்கள் அங்கே சென்றார்கள் என்பதை தனியா வேற சொல்லணுமா?-கும்மாங்கோ)... . ஈகிள் டிவியின் அசல் தொகுப்பாளர் மாணிக் தனது தம்பியின் காதில் மாட்டிய இயர்பீஸ் மூலம் சூர்யாவை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்து ஒருவரமே ஆகியிருந்த நேரம்.... . இது குறித்து சூர்யாவுக்கு தன்னையறியாமல் கடும் கோபம் ஏற்பட்டு அவ்வப்போது கை முஷ்டியை முறுக்குதல்,டேய்ய்ய்ய் என்று தன்னையறியாமல் கத்துதல்(ஒருமுறை சினிமா தேட்டரில் படத்துக்கு நடுவே சூர்யா ஆவேசமாக டேய்ய்ய் என்று கத்தியதும் அதே தருணத்தில் ஹீரோவை வில்லன் திட்டியதால் ஹீரோவின் ரசிகர்கள் தேட்டரில் பதிலுக்கு கத்தியதும் சின்க் ஆக தப்பித்தான் சூர்யா-கும்மாங்கோ) என்று நிகழ்ந்து வருவதையும் பொருட்படுத்தாமல்(உண்மையில் இப்படியெல்லாம் நிகழ்வது சூர்யாவுக்கே தெரியாது என்பது மற்றொரு காமெடி) தில்லிக்கு சப்ஜாடா கிளம்பி சென்றுவிட்டனர்.எப்படியோ அழைப்பிதழ் இல்லாமலேயே உள்ளே புகுந்து ஒரு டார்மெட்டரியில் இடமும் பிடித்துவிட்டனர். இவர்கள் நான்கு பேர்.அந்தப்பக்கம் ஒரு மலையாள சாகித்யக்காரன்,அவர் பக்கத்தில் ஒரு பஞ்சாபி எழுத்தாளர்.இந்தப்பக்கம் ஒரு ஹிந்தி எழுத்தாளரும் ஒரு எஸ்பன்யோல் எழுத்தாளரும் தங்கியிருந்தனர். . நள்ளிரவு நேரம்...எல்லாரும் மட்டையாகிக்கிடக்க.... ஆரம்பித்தது கூத்து..... ஆழ்ந்த உறக்கத்தில்(உபயம்:கெமி மார்டின்+சுண்டக்கஞ்சி ) இருந்த சூர்யாவின் மண்டைக்குள் சிரிப்பு சத்தங்களும் கிண்டல் குரல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக "மன்னிப்பு கேள்" என்ற குரலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது..... . மன்னிப்பு கேள்ள்...
அந்த மண்டைக்குரலுக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா பாயிலிருந்து எழுந்தமர்ந்து கேக்க முடியாதுடா....என்று எதிரில் யாருமே இல்லாவிட்டாலும் ஆள்காட்டி விரல்காட்டி ஆவேசமாக கத்தினான்... . பிறகு தூக்கம்.... . அரைமணிநேரம் கழித்து..... மன்னிப்பு கேள்ள்..... கைகளை பவ்யமாக கட்டியபடி "கேக்குறேன் கேக்குறேன் கேக்குறேன்"....என்று தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சூர்யா தூங்கிவிட... .
ஒருமணிநேரம் கழித்து மீண்டும்.....மன்னிப்பு கேள்.... டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று ஆவேசமாக சூர்யா கத்த சுற்றி இருந்தவர்கள் எழுந்தமர்ந்து இதை தமாஷாக கவனிக்க ஆரம்பித்தனர்...பகூத் மஜா ஆ ரஹா ஹே..என்றபடி ஹிந்தி எழுத்தாளர் ரசிக்க ஆரம்பித்தார்... . மன்னிப்பு கேள்.... .போடாங்...... . மன்னிப்பு கேள்..... கேட்டுடுடுறேன்..... . மன்னிப்பு கேள்...... பூத்தா மா** என்று சூர்யாவுக்கு தெரிந்த ஒரே எஸ்பன்யோல் வசைமொழியில் திட்ட எஸ்பன்யோல் எழுத்தாளர் சூர்யாவை ஆச்சரியமாக பார்க்கிறார். . சுராத்து வழக்கம்போல இரவு நேரங்களில் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன் மாட்டியபடி கில்மா படங்களில் வரும் பின்னணி ஒலிகளை மட்டும் தனி ஆடியோவாக மொபைலில் போட்டு கேட்டபடி ரசித்து மகிழ்ந்தபடியே உன்மத்த நிலையில் தூங்குவது வழக்கமென்பதால் வெகுநேரம் சுற்றி நடப்பவை குறித்து தெரியாமல் இருந்தவன் திடீரென்று இருட்டில் ஒரு உருவம் காற்றில் பாக்ஸிங் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்து விழிக்கிறான்.
சூர்யாவின் மன்னிப்பு கேட்கும் படலத்தை கண்டவன் உடனே போன் செய்து "ஆங்.....ஒரு லொபோடமி கேஸ் இருக்கு.சீக்கிரம் வாங்க" என்று துண்டிக்கிறான். இதைக்கேட்ட சூர்யா "எனக்கா லொபோட்டமி?இருடி!உனக்கு வாசெக்டமிக்கு ஏற்பாடு பண்றேன்" என்று யோசித்தபடி போன் செய்து "ஆங்.....ஒரு அரிசி ஆப்பரேஷன் பார்ஸல்.ஆமா!தில்லி எழுத்தாளர் மாநாடு.டார்மிட்டரி நாலு..வாசப்படிலேர்ந்து நாலாவது ஆசாமி.அள்ளிட்டு போங்க" என்று துண்டித்துவிட்டு சுற்றி இருந்தவர்களை பார்த்து "நத்திங்...நத்திங்" என்றபடி படுக்கையில் பம்முகிறான். ****************************************************************************** இன்றைக்கு ஈகிள் டிவியில் நரியா?நாயா? நிகழ்ச்சியில் அடியேன் கலந்துகொள்ள உள்ளேன்.டிவி ஸ்டேஷனுக்கு செல்லும் ஆட்டோ செலவு ரிட்டர்ன் செலவு+சோலா ஷெரட்டன் டின்னர் செலவு என்று வாசகர்கள் எனக்கு தாரளமாக அனுப்பலாம்.குறைந்தபட்ச தொகையாக நூறு டாலர் அனுப்பவும். ****************************************************************************** சுராத்து எழுதிய ஸ்டெப்னி நாவல் சேல்ஸ் பிய்த்துக்கொண்டு போக அதன் தொடர்ச்சியாக "தொப்புளில் ஊசி போடுவது எப்படி?" என்ற மகாமகோ காவியமும் விற்றுத்தீர(எதுதான் விக்குமென்று எவனுக்கு தெரியுது!-கும்மாங்கோ) சூர்யா கடும் வயிற்றெரிச்சலில் இருந்தான்.அவனுக்கு ஆப்படிக்கனுமே!என்றபடி க்விட்டரை ஒப்பன் செய்து "சுராத்து லமுதிகவில் சேரப்போகிறாராம்!கேள்விப்பட்டேன்" என்று ஒரு கீச்சை தட்டிவிட்டுவிட்டு..."இருடி இன்னக்கி நைட்டு உனக்கிருக்கு பூஜை!" என்று அகமகிழ்ந்து தூங்க சென்றான். ****************************************************************************** இருட்டுல யாரு அரிசி ஆப்பரேஷன் ஆசாமின்னு தெரியலையேடா!என்று இரு ஊழியர்கள் குழம்பியபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சூர்யா சுராத்து இருவரும் உச்சா போய்விட்டு மப்பில் வந்து படுக்கும்போது இடம்மாறிவிட்டதால் இந்த குழப்பம்.சரி ரெண்டையும் அள்ளிப்போடு!நமக்கும் எக்ஸ்ட்ரா இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்று சு,சூ ரெண்டையும் மயக்க மருந்து உதவியுடன் ஆப்பரேஷன் தியேட்டரில் வைத்து முடித்தார்கள்.அரிசி ஹார்லிக்ஸ் சாத்துக்குடி சுபம். நோ....ஓ...ஓ....ஓ......என்று சூர்யா கதற சுராத்தோ சேதுவாகி விட்டத்தை வெறித்து பார்த்தபடி படுத்திருந்தான். ************************************************************************* நாயர் கட இட்லி மட்டும்தான் சென்னைல சிறந்தது என்று தப்பா சொன்னதுக்கு மன்னிப்பு கேள்!
...இது மாணிக் தம்பி பாபி. .................................ஈகிள் டிவி ஸ்டுடியோ........................................... . ஆடியன்ஸ் புடைசூழ. ..நாயா?நரியா? ப்ரோக்ராம். . . . . . சார்...அதுவந்து.... . வந்து போயிலாம் அப்புறம்!மொதல்ல பொய் சொன்னதுக்கும் உங்களோட வாசகர்களை ஏமாத்துனதுக்கும் மன்னிப்பு கேள்.... . என்ன நடந்ததுன்னா... . மன்னிப்பு கேள்...அப்புறம்தான் எல்லாம்... . டேய்ய்ய்ய்...என்று கூட்டத்தில் இருந்து சுராத்து பொங்கி எழ..உடனே இரண்டு பவுன்சர்களின் கவனிப்பில் கப்சிப் ஆகிறான்... . சரி....ன்னிச்சிடுங்க... . இல்லையே...சரியா கேக்கல!சத்தமா என்று தும்பி பட ஆதவன் போல பாபி கேட்க..
மன்னிச்சிடுங்க!மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க!
...சரி...சரி....போதும்.இத்துடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் பாபி சூர்யாவுக்கு கொடுத்த விருந்தை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவன் பிறகுதான் தன்னை பாபியும் மாணிக்கும் வச்சி செஞ்சது மண்டையில் உறைக்க...அப்போதிலிருந்து "மன்னிப்பு-கேள்-கேக்க முடியாதுடா..." ரீல் ஓடிக்கொண்டிருக்கிறது.சூர்யாவின் தளத்திலும் முன்னூற்றி இருபத்தாறு பாகங்களாக மன்னிப்பு கேள் வந்தது. ****************************************************************************** ட்ரிங்...ட்ரிங்....மகா காவிய படமொன்றை ம்யூட்டில் வைத்து ரசித்துக்கொண்டிருந்த சுராத்து போனை எடுக்கிறான்.."யாரு?" டேய் என்னமோ கட்சில செரப்போறியாமே? அண்ணா அது நா இல்லீங்ணா! பின்ன சூர்யா கவீட் பண்ணி இருக்கான்.அது பொய்யா? பொய் தானுங்க! என்னடா நீ டெராபைட் கணக்கா சேத்து வச்சிருக்கும் கில்மா படங்களை இங்கிருந்தபடியே ஒரே செகண்ட்ல டெலீட் பண்ணி காட்டவா? பேயறைந்த மாதிரி அதிர்ந்த சுராத்து அண்ணா அந்த மாதிரி ஆசைலாம் எனக்கு இல்லீங்ணா!என்று கெஞ்சி சமாதானப்படுத்தி போனை வைத்ததுமே அடுத்த ரிங்....இப்படி விடிய விடிய... ******************************************************************************
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
...நள்ளிரவு நேரம். பேகம் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் அரிஸ்டாட்டில் சூர்யாவை வச்சு செஞ்சது நினைவுக்கு வர...சூர்யா கத்தியபடி வழக்கம்போல் ஆவேசமாக இருட்டில் பாக்ஸிங் போடுகிறான்.
"பேகம் ஒரு வனஜாதேவி புத்தகம்!"
வ ன ஜா தே வி பு.....த்.. . த...க.....ம்......வனஜாதேவி.....ஜா...ன...வ....வி....தே...... உடனே ஆவேசமாக லேப்டாப்பை ஆன் செய்து அரிஸ்டாட்டிலுக்கு முன்னூற்றியாறு கண்டன கடிதங்களை எழுதி வலையேற்றம் செய்கிறான் சூர்யா. ....அதில் இருந்து சில வரிகள்... . இந்த அரிஸ்டாட்டிலுக்கு தான் பெரிய கஷிமோட்டோ சுகிமோட்டோ என்று நினைப்பு.எடுத்தது வெறும் இரண்டு படங்கள்.முழுக்க அபத்தம்.அவரது படங்களில் க்ராப்ட் இல்லை(காதி கிராப்ட் கடையில் கேட்டிருந்தா கிடைச்சிருக்குமே?-கும்மாங்கோ).வெறும் வெற்று உலக சினிமா பாவனைகளும் அப்பட்டமான காப்பி அடித்தல்களுமே அவரது படங்கள்.... ***************************** அரிஸ்டாட்டில் என்னை அழைத்திருந்தார்.வரமுடியாது என்றேன்.சுண்டக்கஞ்சியும் கருவாடும் வாங்கி வைத்திருப்பதாக சொல்லி முடிப்பதற்குள் அங்கே ஆஜரானேன். காதில் ஹெட்போன் மாட்டிவிட்டு இந்த பின்னணி இசையில் எப்போது சகீலா அறைக்குள் நுழைகிறார் என்று சரியாக சமிக்ஞை செய்யுமாறு சொல்லிவிட்டு ஆடியோவை ஆன் செய்ய ....நான் கண்மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தவன் இந்த இடமா என்று ஒரு தருணத்தை குறிப்பிட ஆமாம் என்று பாராட்டினார்!(அப்போ பேகம் நாவலை வனஜாதேவி புத்தகம் என்று சொன்னதற்கு அரிஸ்டாட்டிலை நேற்றுதானே திட்டினார்!இப்போ எப்படி பம்முறார்? என்று கேட்கும் லீனியர் பிலிஸ்டைன் குஞ்சுகள் உத்தமமேகனின் ரசவடை கதைகளை படித்தே சாகுங்கள்-எண்பதாம் நூற்றாண்டின் செத்த மூளை)... .
சரி...வந்தவேலையை செய் என்று சொல்லிவிட்டு குப்புற படுத்துக்கொள்ள நான் அவருக்கு மாலீஷ் செய்துவிட்டேன்-குயில புடிச்சி கூண்டிலடைச்சி கூவ சொல்லுகிற.....ஏய்....ஸ்டாப்....ஜப்பானிய பாடல் பாடு... .....கவாசாகி மியாசகி.....மியாசாகி ஹஷிமோட்டோ......ஹ்ம்ம்...நாலாம் சீலேவுல.... ....ஏய் மூடிட்டு மசாஜ் பண்ணு..ம்...அப்படித்தான்.... **************************************************************************************************************************************************** அடுத்தநாள் இரவு... எழுத்தாளர்கள் அனைவரும் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க இப்போது சில சத்தங்கள்.சூர்யா இல்லை.அவன் சப்தநாடியும் ஒடுங்கியவனாக அசைய முடியாது படுத்துக்கிடக்க...பக்கத்தில் ஓணாண்டிப்புலவர் தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தபடி ... என்னமாதிரியான எண்ணையில் சமோசா போடுகிறோம்? என்னமாதிரியான சிமண்டில் பில்டிங் கட்டுகிறோம்? என்னமாதிரியான அரிசி ஆப்பரேஷன்களை செய்கிறோம்? என்னமாதிரியான கட்சிக்கு ஜால்ரா தட்டுகிறோம்? ....இப்படியாக விடாது தலையை சிலுப்பியபடி ஆவேசமாக இருட்டோடு பாக்ஸிங் போட்டுக்கொண்டிருக்க..
பக்கத்தில் உத்தமமேகன் மொபைலில் அந்த அரசியல் வாரிசு கல்லூரி மாணவிகளின் எல்கேஜி கேள்விகளுக்கு ப்ரீகேஜி லெவலில் பதில் அளிக்கும் வீடியோவை அகமகிழ்ந்து பார்த்தபடி...ஆகா!என்ன தேஜஸ்!என்ன ஒரு ஆற்றல்!சிரிக்கும்போது விழும் கன்னக்குழி இருக்கே!இதுக்கே இவரை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கலாம்!என்னன்னே தெரியல !இந்த மனுசனை ரொம்ப புடிக்குதே!ஆகா ஓகோ!
சரி!இந்த டாப்பிக்கை வச்சிக்கிட்டு ஒரு கோடி வார்த்தைகளில் ஒரு சிறு பத்தி எழுதி நம்ம சைட்ல போடுவோம்!சடலூர் பீனு இதை சிலாகிச்சி ரெண்டு கோடி வார்த்தைகளில் ஒரு சிறு கடிதம் அனுப்புவான்!நமக்கும் பொழுது போவும்...என்றபடி டைப் செய்யத்துவங்க... இதை ஓரக்கண்ணால் பார்த்த சூர்யா "ஆகா டாபிக் கிடைக்காம ஏதேதோ பெனாத்திட்டு இருக்குறதுக்கு இதே டாபிக்கை நாமும் யூஸ் பண்ணிக்கலாமே!"என்றபடி அந்த அரசியல் வாரிசு போன்ற ஒருவரே தலைவராக வர வேண்டும்.நாட்டின் எஸ்டிடி பற்றி ஆனா ஆவன்னா தெரியாட்டியும் பரவால்ல!எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்று கடித்ததில் குடித்தது என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதி வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்.(இப்பவாச்சும் வாரிசின் கட்சியில் உள்ள எண்ணற்ற கோஷ்டிகளில் ஒரு கோஷ்டியின் கடைக்கண் பார்வை நம்ம மேல பட்டா ரெமி செலவுக்கு ஆகும் என்ற நப்பாசைதான் என்பதை சொல்லவும் வேண்டுமா?-கும்மாங்கோ)... . அமலாதித்த பல்லவன் எழுந்து அமர்ந்து "ஐயோ!இதுங்க மத்தில மாட்டிகிட்டு நா படுற பாடு போதும்டா!" என்றபடி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். . . ******************************************************************************************************************************* சூர்யா எழுதிய ஒரு பதிவு: .
**ஒரு கிரிமினலின் கடிதம்**
எனக்கு தினமும் ஆயிரம் ஆபாச கடிதங்கள் வருகிறது(எடைக்கு போடலாம்னு பாத்தா எல்லாம் ஈமெயில்!-கும்மாங்கோ)..ங்கோ என்று நேரடியாக திட்டும் கடிதங்கள் எவ்வளவோ மேல்.ஆனால் இதுபோன்ற கடிதங்கள்தான் இந்த பிலிஸ்டைன் சமூகத்தின் புண்ணை படம் போட்டு காட்டுகிறது.இதோ கடிதம். .
எடே சாரு, எப்போ பாத்தாலும் சூபிக்கள் ரூமி என்று ஜல்லி அடிக்கிற.ஆனா அதே ரூமி எழுதுன மஸ்னவி தொகுப்பில் இனவெறியும் கொலைவெறியும் இருப்பது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?இதோ ஆதாரத்தை அட்டாச்மென்டில் கொடுத்துள்ளேன்.
BTW மன்னிப்பு கேள் எபிஸோட் நடந்து 11 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
-இப்படிக்கு பறிக்கி.
. * சூபிக்கள் என்று நான் சிலாகிப்பதே ஒரு பக்கெட் பிரியாணிக்குதான்.தவிர நான் வரலாறு என்று எழுதுவதெல்லாம் எனக்கு தோன்றுவது மட்டுமே.அதை நிஜத்தோடு ஒப்பிடுவது என்னை வன்கலவி செய்வதற்கு சமம்.இந்த கடிதத்தை பாலிஸ்தான்தாசன்- பனடா பிரதமர் புருடோவுக்கு அனுப்பியுள்ளேன்.அவர் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.டேய் பறிக்கி குஞ்சு உனக்கு இருக்குடா ஆப்பு! . ********************************************************************************************************************************
சீச்சீ....துத்தூ....பொப்போ......
சுராத்துவின் இந்த ஸ்டேட்டசுக்கு ரெண்டாயிரம் லைக் மற்றும் ஆயிரம் ஷேர்.