Sunday 20 November 2016

Crimes and misdemeanors(1989)

                  சமூகத்தில் குற்றம்  இழைப்பவர்கள் அது  எத்தகைய  குற்றமாக  இருந்தாலும் சரி.அந்தந்த  குற்றத்தின்  தீவிரத்திற்கு  தகுந்தாற்போல தண்டனை  வழங்கப்படும்.ஒவ்வொரு  நாட்டிற்கும்  தண்டனைகள்  சட்டதிட்டங்கள்  மாறலாம்.ஆனால்  தண்டனை என்பது உண்டு.
               ஆனால்  இந்த  தண்டனை என்பது உண்மையில் குற்றவாளியை சீராக்கவா இல்லை  பெயரளவு  தண்டனையா  என்பது  விவாதத்திற்குரியது. அந்த  குற்றவாளி  அதை  தண்டனையாக  பார்க்கும்வரையே  இந்த  தண்டனை முறைகளுக்கு வெற்றி எனக்கூறலாம்.பல  நேரங்களில் குற்றவாளி தனக்களிக்கப்பட்ட  தண்டனையையே ஜாலியாக எதார்த்தமாக எடுத்துக்கொண்டால் அந்த  தண்டிக்கும் முறையே கேள்விக்குள்ளாக்கப்படும்.
             மேலும் சட்ட ரீதியான  தண்டனையில் இருந்து தப்பித்த  பலரும்  மனசாட்சி உறுத்தாமல் ஜாலியாக  எவ்வித  மனபாரமும் இன்றி வாழ்வதையும்  காண்கிறோம்!
               யூதா ரோஸந்தால் என்ற  பிரபல  கண் மருத்துவர் மனைவிக்கு  தெரியாமல் ஒரு  விமான  பணிப்பெண்ணோடு(டொலோரஸ்) இரு வருடங்களாக  உறவில் உள்ளார் .ஒருகட்டத்தில்  டொலோரஸ்  இந்த  விஷயத்தை யூதாவின்  மனைவி  மிரியத்திடம் சொல்லிவிடுவேன்  என  மிரட்டுகிறாள்.
யூதா 

            யூதாவை  பொறுத்தளவில்  சிறுவயதில்  தீவிர  மத(யூதம்)  நம்பிக்கை உள்ளவராக  மத  சடங்குகளை  தீவிரமாக  பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டவர்.ஹீப்ரூவில் இறைவணக்கம்  செய்யும்  ஒரு  குடும்பமது.
             ஆனால் பெரியவனாக  வளர்ந்தபின்   ஒருகட்டத்தில் இறைநம்பிக்கையை இழக்கிறார்.முழுமையாக  அல்ல.அந்த  கங்கு உள்ளே மிகச்சிறியதாக  இருந்தாலும்  உயிர்ப்புடனேயே  இருக்கிறது.அதனால்தான்  தான்  சிறுவயதில்  வளர்ந்த  வீட்டினை அதன் முதலாளி  அனுமதியோடு  மீண்டும்  சுற்றிப்பார்க்கும்போது  அந்த  இறைநம்பிக்கை மீண்டும் விஸ்வரூபம்  எடுக்கிறது.அவரது  தந்தை  அடக்கடி  சொல்லும் "The eyes of God are on us always." என்ற  வாசகம்  மீண்டும் நினைவுக்கு வருகிறது!
யூதாவின் தந்தை 

                 டொலோரஸ் மிரியத்திடம்  உண்மையை  சொல்ல  அனுமதிக்கக்கூடாது  என்பதே  யூதாவின்  எண்ணம்.காரணம்  என்ன?
        -   மிரியம்  அதை  தாங்கிக்கொள்ள மாட்டாள்;-மிரியத்தை  டைவர்ஸ்  செய்துவிட்டு டொலோரசை மணக்க தன்னால்  முடியாது;-  மிரியத்துடனான  ரகசிய  உறவைப்பற்றி  மனைவியிடம் ஒப்புக்கொள்ளவும்  தைரியமில்லை!
            இதெல்லாம்  காரணமாக  யூதா  சொன்னாலும் அதைவிட  முக்கியமாக  அவன் நினைப்பது  அவனது  இமேஜை.சமூகத்தில்  அவனுக்கிருக்கும்  அந்த  மரியாதையில்  சிறுகீறல்  விழுவதையும்  அவன் அனுமதிக்க தயாரில்லை.
           மிரியத்தை ஆள்வைத்து கொன்றுவிடுகிறான் யூதா.அதன்பிறகு மூன்று  மாதங்கள் கடுமையான  குற்ற  உணர்வும்  மன உளைச்சலுமாக நகர்கிறது.Rabbi யாக  இருக்கும்  தனது  நோயாளிகளில்  ஒருவரான  Ben னிடம்  இதைப்பற்றி  மேம்போக்காக  விவாதிக்கிறான்.
          மூன்று  மாதங்கள்  கழிகிறது.அதன்பின்  அவனே  ஆச்சரியப்படும்  வகையில்  மிரியத்தை  கொன்ற   அந்த  குற்றஉணர்ச்சி  முற்றிலும் விலகிவிட்டதாக சொல்கிறான்.
          இங்கேதான்  வுடி ஆலனின் திறன்  வெளிப்படுகிறது.
"கடவுளின்  கண்கள்  தொடர்ந்து எனது  செயல்களை  கவனிக்கிறதுதானே?அப்போ  நான்  செய்த  கொலையையும் அவர்  கவனித்திருப்பார்தானே?இந்த  மூன்று  மாதங்களில் அதற்கான  தண்டனை  எதுவும் எனக்கு  கிடைக்கவில்லையே!அப்போது  கடவுள் இதையெல்லாம்  பார்த்தாலும்  பெரிதாக  எடுத்துக்கொள்வதில்லை என்றுதானே  அர்த்தம் !" என்கிறான்.

        இங்கே  மற்றொரு  காட்சியைப்பற்றியும்  சொல்லவேண்டும்.யூதா  தான்  சிறுவயதில்  வாழ்ந்த  வீட்டிற்கு  மீண்டும் செல்கிறான்.அங்கே டைனிங்  டேபிளில் அவன்,அவன்  சகோதரன்,தாய்  தந்தை  அத்தை எல்லாரும்  உள்ளார்கள்.அங்கே  ஒரு  விவாதம்.
          தீவிர  யூத நம்பிக்கையாளரான யூதாவின்  தந்தை "கடவுள்  எல்லாவற்றையும்  பார்த்துக்கொண்டிருக்கிறார்"  என்றுசொல்ல  அவரது  சகோதரி "ஆறு  மில்லியன்  யூதர்கள் நாஜிக்களால்  கொன்றொழிக்கப்பட்டார்கள்!அதையும்  கடவுள்  பார்த்துக்கொண்டுதானிருந்தார்"  என்றுசொல்ல "நீ  ஒரு cynic,nihilist.நீ  ரஷ்யாவில்  இருக்கவேண்டியவள்"  என்கிறார்  யூதாவின்  தந்தை 
 Do you not find human impulse is basically decent? என்ற கேள்விக்கு 
        It's basically nothing  என்கிறாள்  யூதாவின்  அத்தை.
                 "குற்றமிழைக்கும் ஒருவன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடிந்தால்,தார்மீக நெறிமுறைகளை பொருட்படுத்தாதவனாயிருந்தால் அவன்  சுதந்திர மனிதன்தான்" என்கிறாள் அவள் .


            இங்கே  மற்றுமொரு  ட்ராக்-  வுடி  ஆலன்  வரும்பகுதி.யூதாவின் செக்மண்டைப்போல  ரொம்ப   இருண்மையாக  அல்லாமல்  கொஞ்சம்  ஜாலியாக  இருந்தாலும்  அதுவும்  முடிவில் கிளிப் ஸ்டேர்ன்(வுடி) perennial சுமையோடு எழுந்து  செல்வதாக காட்டப்பட்டுள்ளது.
க்ளிப்

       வெறுமனே உயர்ந்த  கனவுகள் மட்டும்  ஒருவனை  உயர்த்தாது  என கிளிப்  விமர்சிக்கப்படுகிறார்.தரமான டாக்குமெண்டரி எடுப்பதே  அவர்  லட்சியம்(அந்த  ப்ரொபசர் வரும்  காட்சிகள்  அற்புதம்).அதனாலேயே  கையில்  பைசா  காசில்லை!சகலை  லெஸ்டர் தன்னைப்பற்றி  ஒரு டாக்குமெண்டரி எடுக்க கிளிப்பை நியமிக்கிறான்.ரொம்ப மேம்போக்கான  மொண்ணையான ஜிகினா ஆசாமி  லெஸ்டர்.லெஸ்டர் மேலுள்ள  கடுப்பில் கிளிப்  அந்தக்குறும்படத்தை காமெடியாக  எடிட்  செய்துவிடுகிறார்(இதான்  ஜிகிர்தண்டா  என  தனிப்படமாக  வந்தது!!) கிளிப்பை வெளியே  துரத்துகிறான் லெஸ்டர்.

           கிளிப் லெஸ்டரிடம்  பணியாற்றும்  ஹேலியை  விரும்புகிறார்.அவளும்  இவரை  விரும்புகிறாள்.மனைவியை விவாகரத்து  செய்து  ஹெலியை  மணமுடிக்க நினைக்கிறான்.ஆனால்  லெஸ்டர்  ஹேலியின்  மனத்தை  கவர்கிறான்.
             விடிய  விடிய  மலர்  கொடுத்து  ஹேலியை கவர்ந்ததாக  லெஸ்டர்  பெருமையடிக்கிறான்.இதை  காண  சகிக்காமல்(Remember great depth and smoldering sensuality  does not always win)  கிளிப் தனியே  அமர்ந்திருக்கும்போதுதான்  யூதாவுடனான  உரையாடல் நிகழ்கிறது.அது படத்தின் மிக முக்கிய காட்சி.
காலம்  செல்லச்செல்ல எந்த  ஒரு  நெருக்கடியும் கடந்துவிடும்  என்கிறான் யூதா.ஆனால்  அதற்குபதில் நாம்  செய்த  குற்றங்களும்,சில்லறை தவறுகளும் உண்டாக்கும் பாரத்தை காலம்  முழுக்க  சுமக்கவேண்டியிருக்கும் என  நினைக்கிறான் கிளிப்! 


படத்தின் ஒளிப்பதிவாளர் பெர்மானின் ஆஸ்தான  ஒளிப்பதிவாளரான
Sven Nykvist
 படத்தின்  இருண்மையை பார்ப்பவர்களுக்கும் உணர்த்திவிடும்  அற்புதமான  ஒளிப்பதிவு!

Monday 7 November 2016

அப்பா(2016) மற்றும் மரியாதை (2008)

                          தமிழ்சினிமாவில்  அப்பா  கேரக்டர்னாலே முறுக்கு மீசை,  டிராக்டர்  செருப்பு, கைல  பெரிய்ய்ய  காப்பு  போட்டுக்கிட்டு  "எலே  பசுபதி"ன்னு  கர்ஜித்தவுடன் கக்கத்தில்  கையை அதக்கியபடி "சொல்லுங்கைய்யா" என்று  மகன்  வந்து  நிற்பது பலகாலமா  இருந்தது.நேரடியா  தந்தையிடம்  பேச  பயந்துகொண்டு  தாயோடுதான்  எல்லா பேச்சுவார்த்தை ,காதலிக்கும்  பெண்  பற்றிய  பகிர்வுகள் எல்லாம்.
             அவ்வப்போது  சில  விதிவிலக்குகள் இருந்தாலும்  தந்தை  கேரக்டரை சாதாரணமாக மென்மையாக  காட்டியது  விக்ரமன்(சேரன்  என்று  சொல்வேன்  என  நினைத்தீர்களா?அது  அப்புறம்).எதையுமே  நேர்மறையாக  அணுகும்  விக்ரமன்  படங்களில்    தந்தை மட்டுமல்லாமல்  பொதுவாக  ஆண்களே  மென்மையானவர்களாக  காட்டபட்டனர்.வானத்தைப்போல படத்தில்  "சாதா  சிகரெட்டு  குடிச்சா  உடம்புக்கு  ஆவாது.பஞ்சு  வெச்ச  சிகரெட்டு  குடிக்கசொல்லு" என  அண்ணன்(கேப்புடன்) மீனாவிடம்  பேசும்  காட்சி  பிரபலமானது.  சேரன்  ஆட்டோகிராப்  படத்தில்  பிள்ளையை  நண்பனாக  பார்க்கும்  தந்தை(ராஜேஷ்)காட்டினார்.பிறகு  தவமாய்  தவமிருந்து.போச்சு!அதன்பின்  பலநூறு படங்கள் தந்தை  கேரக்டரை மகன்/ளின் நண்பராய்   சித்தரித்து  பல  படங்கள்  வந்துவிட்டது.அது  ஒரு  டெம்ப்ளேட்ஆகவே  மாறிப்போனது!

அந்த  வரிசையில்  விக்ரமன்  இயக்கி 2008 ல்  வந்த  மரியாதை  படத்தின்  கதையை  பார்ப்போம்:

             கேப்புடனுக்கொரு  மகன்.அவர் நண்பர்  தலைவாசல்  விஜய்க்கு  ஒரு  மகன்.கேப்புடன்  ரொம்ப  லீனியன்ட்.நாளைக்கு  பரிட்சை.இன்னிக்கி  மகன்  படிக்காமல்  இன்றே  கடைசி சினிமாவை  நினைத்து படிக்காமல்  சும்மா  படிப்பது  போல  பாவ்லா  செய்கிறான்.காசு  குடுத்து  சினிமா  பார்த்துட்டு  வா  என  அனுப்புகிறார்.மனைவி(அம்பிகா)கடிந்துகொள்ள   "  சினிமா  பார்த்துட்டு  வரட்டும்.பார்த்துட்டோம்கிற திருப்தியில்  நல்லா படிப்பான்"  என்று  சொல்பவர்.மகனும்  அவ்வாறே படிக்கிறான்.                

                                தலைவாசல்  விஜய் நேர்மார்.புள்ள
எங்க  படிக்கணும்
எப்படி  படிக்கணும்..
படிச்சிட்டு  வேலைக்கு  எந்த நாட்டுக்கு  போகனும்
யாரை  கட்டிக்கணும் 
                                                  என்பதுவரை ப்ளான் செய்தவர். பிள்ளைகள்  வளர்கிறார்கள்.கேப்புடன்  மகன் (அதுவும்  கேப்புடன்) அக்ரி படிப்பில் கோல்ட் மெடல்.ஏதோ  பூக்கள்  ஆராய்ச்சி மையம் வைத்து  உலகப்புகழ் விருது பெறுகிறார்.தலைவாசல் விஜய் மகன் ஃபாரீன்  போறான்.ஆனா  தாய்  தந்தையைரை துரத்திவிட்டுடுறான்.

                    "நீ  புள்ளைய  சரியா வளக்கல..நான்தான்  புள்ளைய  நல்லா  வளக்குறேன்னு  கர்வமா  இருந்தேன்.ஆனா  இப்பத்தாம்பா  தெரியுது.நீதான் புள்ளைய  நல்லவனா  மனுசனா  வளர்த்திருக்க!"என்று  கண்ணீருடன்  சொல்கிறார்.


                      இதைத்தான்  சமுத்திரக்கனி  அப்பாவாக ரீமேக்  செய்துள்ளார்.
இதில்  வித்தியாசம்  என்னன்னா  தலைவாசல்  விஜய்  மகன்-  தம்பி  ராமைய்யா  மகன்  போல  சாவதில்லை.விக்ரமன்   சமுத்திரக்கனியைவிட டபுள்  பாஸிட்டிவ்வாக  சிந்திப்பவர்  என்பதால் அப்படி!(ஓவர் செண்டிமெண்ட்  உடும்புக்கு  ஆவது  உதயா-கும்மாங்கோ)

     
சமுத்திரக்கனியை   குறைசொல்ல  மாட்டேன்.அவர்  சூழ்நிலைக்கைதி.சமுத்திரக்கனி  என்றாலே சாக்பீஸ்  டஸ்டர்  சகிதம் நின்னாத்தான்  நம்மாளு  ஒத்துக்கிறான்.அவுரு  என்ன  பண்ணுவாரு!

Saturday 5 November 2016

அப்ஸரா-சுஜாதா

My only certainty in life is that one day i shall die இது ராஜா,  மணியிடம்  சொன்னது.

                         யாராவது  கொஞ்சம்  அநாகரீகமாகவோ  எல்லைமீறியோ  நடந்துகொண்டால்/நடக்க்முற்பட்டால்  உடனே  நாம்  சொல்வது  "படிச்சவன்தான  நீ?".இது  எதுக்கு  சொல்றாங்கன்னு  எனக்கு  இன்றுவரை  விளங்கியதில்லை.இங்கே  கல்வி  என்றபேரில்  என்ன  சொல்லித்தரப்படுகிறது?மனனம்  செய்து பரிட்சையில்  வாந்தி  எடுப்பதைத்தாண்டி?அப்படிப்பட்ட  குமாஸ்தா  கல்வியை  படிச்சவன் ,படிக்காதவனிடமிருந்து எதில்  வேறுபடுவான்?
              ஒருவனின்  நடத்தையை ,எண்ண ஓட்டங்களை ,செயல்களை  தீர்மானிப்பது பெரும்பாலும்  அவன்  வளரும் சூழல்,நண்பர்கள்,பணிச்சூழல் ஆகியவைதான்.
            வாத்தியாரின்  இந்தக்கதை சாதாரணமாக  ஒன்றாக  தெரியலாம்.மனம்  பிரழ்ன்ற ஒருவன்  செய்யும்  தொடர்கொலைகள்.ஆனால்  அதில் வரும்  சிறு சிறு கதாபாத்திரங்கள்கூட  தனித்தன்மையோடு ஆசை  கனவுகளோடு இருப்பதாக வரும்.அதான்  வாத்தியார்  ஸ்டைல்.குற்றம்  செய்பவனின் பார்வையில்  திரைப்படங்கள்  எடுப்பது தமிழில்  இப்போது  பிரளமானதாக  இருக்கலாம்!  ஆனால்  அதை  கதைகளில் முன்பே  காட்டியவர் அவரே!

             உதாரணமாக  சரஸ்வதி பாயின்(பாய்  என்ன பாய்?-ராஜா)  இரண்டு  மகள்கள்.பத்து  வயதிருக்கும்.ராகினி  தாரிணி.அவர்கள்  செய்தித்தாளில் வந்துள்ள  புரியாத   தமிழ் படக்கதை(அவர்கள்  படிப்பது  பெங்களூரு கான்வென்டில் என்பதால்  தமிழ்  வாசிக்க முடியாது!)யை  தாயிடம்காட்டி  விளக்கம்  கேட்பதாக  ஒரு  இடம்  வரும்.
மேலும் ரிஷி கபூரின்  வெறியையாக  வரும்  பிரேமா(Rishi is fab yaar-பிரேமா),பார்க்கில்  உள்ள மன்னனின்  சிலையை  பார்த்து  "Hello King" சொல்லும்  அருணா  என அந்தளவு  நுட்பமாக கதாபாத்திரங்களின்  மன ஓட்டங்களை  ரசனைகளை  எண்ணங்களை  பதிவு  செய்திருப்பார்!

              அதேபோல  சகோதரிகளான  சகுந்தலா  அருணா.சகுந்தலா  கருப்பாக  ஒல்லியாக  அழகற்று இருக்கிறாள்.அருணாவோ அனைவரையும்  திரும்பி பார்க்கவைக்கும்  அழகு.சகுந்தலாவை  பெண்  பார்க்க  வந்த  பலர்  அருணாவை கேட்பதால் அவளை  லைப்ரரிக்கு  அனுப்புகிறாள்  அவர்களது  தாய்.அப்போதுதான்  பார்க்கில்  அவள்  கொல்லப்படுகிறாள்.
               இறந்துகொண்டிருக்கும் அருணாவின்  கடைசி  நிமிடங்கள் விவரிக்கப்படும்  இடம் மறக்க முடியாத  ஒன்று.
                அதற்குள்  தன்னை எது  எந்த  திசையில்  இருந்து  தாக்கியது  என  அருணாவுக்கு  தெரியவில்லை.அந்த  கூர்மையான  ஆயுதம் வலப்பக்கத் தோள் எழும்பருகில்  நுழைந்து  பற்பல  ரத்த  குழாய்களையும்  நரம்புகளையும்  துண்டித்து அங்குலக்கனக்கில்  உள்ளே  இறங்க  குபுக்  என்று  ரத்தம் போங்க அருணா  வாய்  திறந்து  காற்று  காற்று  என  திணறினாள்......அப்படியே  வாய்  திறந்துகொண்டு  விழுந்தாள்.அவள்  கைகள்  அவன்  சட்டையை  பற்றின,துவண்டன.அவன்  மேல்  சரிந்து  கீழே விழுந்தாள்.அவன்  பூட்ஸ்  தெரிந்தது.செகண்டுகள் ஜென்ம  ஜென்மங்களாக  விரிவடைந்தன-அருணாவுக்கு.ஏதோ  சொல்ல  வாயெடுக்க  ரத்தம்தான் வாயிலிருந்து   வந்தது.மெதுவாக  அந்த  சிவப்பு  ஓடை மண்ணில்  வழிவதையும்  வழிந்த  சுருக்கில் அது  உறிஞ்சப்படுவதையும் ஆர்வத்துடன்  பார்த்தாள்.தன் புடவை  மேல்  ரத்தத்தை  பார்த்தாள்..
.
.
பார்பராவின்  புத்தகத்திலிருந்து அந்த  செபாஸ்டியன்  என்ற  இளைஞன் ,'பார்த்துவா  லூசிந்தா!பார்த்துவா" என்று  அவளை  அணைத்து(வெட்கமாக இருந்தது) என் பெயர்  லூசிந்தா  இல்லை ,அருணா....அழைத்து  செல்ல  வந்தவன் அவளை  ஆக்கிரமித்துக்கொள்ள,இத்தனை  நாழிக்கு அவா  எல்லாரும்  பஜ்ஜி  சாப்பிட்டிடுண்டு  இருப்பா .பஜ்ஜிக்கு  உப்பு  போட்டேனா?நியாபகம் இல்லையே.புடவையில்  எவ்வளவு ரத்தம்?நாளைக்கு  ஸர்ஃபிலே போட்டு  ரெண்டு  மணி  நேரம்  ஊற வெச்சா  ரத்தக்கறை  எல்லாம்  போய்விடும் !எல்லாம்...எல்ல்ல்ல்ல்ல்...லாம். 
              தனக்கு  ஒழுக்கத்தை  போதித்த  தந்தை(கூன் போடாதே!பளார்) வீட்டு திண்ணையில்  மூணு  சீட்டு  விளையாடியதும்;  தாய்  வேறு  ஆண்களோடு  உறவு கொண்டு  அந்தக்காசில்  இவனை  படிக்கவைத்ததும்  ராஜாவின்  ஆழ்மனதில்  தனியா  வெறுப்பை ,சமூகத்தோடு  ஒன்ற மறுக்கும்  ஒரு  மனநிலையை கொடுத்துவிடுகிறது.அந்த  வெறியிலேயே  அவன்  படித்து  பெரிய  ப்ரோக்ராமர்  ஆகிறான்.

         இப்படி  சிறுவயது மனப்பிறழ்வை ஒருபுறம்   நல்வழிக்கு  பயன்படுத்தினாலும்  இன்னொருபுறம் அதே  அறிவை கொல்வதற்கும்   பயன்படுத்துகிறான்(நீட்ஷேவின் Thus Spake Zarathushtra புத்தகம் ராஜாவின்  ஆபீஸ்  ட்ராவில்  இருப்பதாக கதையில்  வருகிறது)
              மனப்பிறழ்வு  கொண்டவர்கள் கொலை  செய்யும்போது  முழு   பிரக்ஞையோடு கொல்திவதில்லை. 'கொல்வது   தாந்தான்'  என்ற  எண்ணமே  அவர்களுக்கு  இருப்பதில்லை.மேலும்  யாரை  கொல்லவேண்டும்  என்று அவர்களாக  தீர்மானிப்பதில்லை.They  leave it to chance!இதிலும்  அப்ஸரா  என்ற  கம்பெனி  நியான் பார்த்துத்தான்  அவனுக்கொரு  ஐடியா.அதன்படி  ப்ரோக்ராம்  எழுதுகிறான்.
                          அதாவது  கொலை  செய்வதும்  தானில்லை.யாரை  கொலை  செய்வது  என  தீர்மானிப்பதும் தானில்லை  என்ற  உணர்வே  அவர்களிடம் மிதமிஞ்சி  இருப்பதால் கொலை  செய்யும்போது   எவ்வித  பதட்டமும்  இருப்பதில்லை.கொன்றுவிட்டு  நிதானமாக  பார்க்கைவிட்டு  வெளியேற  முடிகிறது."இருட்டில் பந்துவிளையாட  வைக்காதீங்க  குழந்தையை"என்று  ஒரு  தாய்க்கு  அட்வைஸ்  பண்ணமுடிகிறது!அதே போல  கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வும்  அவர்களுக்கு  இருப்பதில்லை!"ஏன்  விபத்தில் பலர்  இறக்கிறார்களே?அதுபோலத்தானே  இதுவும்?"-இது  அவர்கள்  வாதம்!
           முதலில்  சொன்னதுபோல கதை  என்பது  வழக்கமான  ஒன்றுதான்.ஆனால்  அதை  சொல்லும்விதம்,அதில்தான்  இக்கதை மிளிர்கிறது.
            

Tuesday 1 November 2016

The Man who wasn't There(2001)

                         கோயன் சகோதரர்கள்(Coen Brothers)  படங்கள்  பலவற்றில்  ஒரு  ஒற்றுமையை  காண  முடியும்.Hopeless ஆக  வாழ்வின்  எல்லைக்கே  தள்ளப்பட்ட  ஒரு  ஆண்.அந்த புதைகுழியில்  இருந்து  வெளியே வர  அவன்  எடுக்கும்  முயற்சி.அதனால்  ஏற்படும்  தொடர்  விரும்பத்தகாத  நிகழ்வுகள்  கடைசியில்  அவனுக்கே  பாதகமாய்  முடிவது.சாதரணமாக  நம்  வாழ்விலேயே  நாம்  ஏதோ  ஒரு  விஷயத்தை  செய்யப்போய்  அது  வேறு  வகையாக  (சில  நேரங்களில்  நமக்கு  எதிராகவே)முடிவதை கையறு  நிலையில்  செய்வதறியாது  நாம்  பார்த்துக்கொண்டிருந்திருப்போம்.அத்தகைய விஷயத்தைத்தான்  கோயன்  சகோதரர்கள்  ஒருமாதிரி  கருப்பு  நகைச்சுவையாக  சொல்லிவிடுவார்கள்.
               இந்தப்படத்திலும்  அப்படியான  ஒரு  ஆளின்  வாழ்க்கைதான்  சொல்லப்படுகிறது.1940 களின்  பிற்பகுதியில்  கதை  நடப்பதாக  காட்டப்படுகிறது.அந்த  காலகட்டத்தில்  வந்த  நுவா(Noir) படங்களின்  பாணியிலேயே  இப்படத்தின்  ஒளிப்பதிவும்  செய்யப்பட்டுள்ளது.
 

                 ஒரு  சலூனில்   வேலை  செய்கிறான் எட்.அதிகம்  பேச விரும்பாதவன்.அதனால்  ஈர்க்கப்பட்டே  டோரிஸ் அவனை  திருமணம்  செய்துகொள்ள  விரும்புகிறாள்."என்னை  இன்னும்  நீ  புரிந்துகொள்ள வேண்டாமா?"  என்று  எட்  கேட்க  "ஏன்  இதற்குமேல் உன்னைப்பற்றி  சொல்ல  நல்ல  விசயங்கள்  உள்ளனவா?"  என்று  கேட்கிறாள்.திருமணம்  செய்தபிறகும்  மணவாழ்க்கை  இனிக்கவில்லை.

           பத்தாண்டு  மண  வாழ்வில்  ஒன்பதாண்டுகள்  உடலுறவு  கொள்ளாமல்  ஏதோ  கடமைக்கு  சேர்ந்து வாழ்கின்றனர்.டோரிஸ்  தான்  வேலை  பார்க்கும்   கடை  முதலாளி  டேவ்  உடன் தகாத  உறவு  வைத்துள்ளாள்.
        தனது  கடைக்கு  வரும்  ஒரு  கஸ்டமர்(டோல்லிவர்) டிரை க்ளீனிங்  பிசினஸ்  பற்றி  சொல்ல  எட்  டேவை மறைமுகமாக  பிளாக்மெயில்  செய்து   10000$  வாங்கி டோல்லிவரிடம்  தருகிறான்.அவன் எஸ்கேப்.டேவ்   அவனை  அடித்துக்கொன்று எட்'தான்  தன்னை  மிரட்டியது  என்று  தெரிந்துகொண்டு  அவனை  தனியே  வரசொல்லி  கொல்ல  முயற்சிக்கிறான்.கடைசியில்  எட்  டேவை  கொன்றுவிடுகிறான்.
டோல்லிவர்

            இந்த  காட்சி பற்றி  ஒரு  விஷயம்  சொல்ல வேண்டும்.வன்முறை  கொலைகள்  போன்றவை  சமூகத்தில்  எப்படி  மிக  எளிமையாக  கடந்துபோய்விடக்கூடிய  ஒன்றாக  மாறிவிட்டது  என்பதை  கோயன்  படங்களில்  ஒரு  பகடியாகவே  காட்டியிருப்பார்கள்.
             Blood Simple(1980) படத்திலும்  மனைவியின்  கள்ளக்காதலனை  கொல்ல  கணவன்   ஒரு  டிடெக்டிவ்வை  அனுப்புகிறான்.அவன்  double cross செய்து  கணவனையே  கொன்றுவிடுகிறான்.அந்தக்காட்சி  அப்படியே  சுட்டுவிட்டு  அவன்  எழுந்துபோய்விடுவதாக  முடியாது.மிக  மெதுவாக  நிறுத்தி  நிதானமாக  கொலை  நிகழ்வதாகவும்  சுடப்பட்டவுடன்  ரத்தம்  மிக  மிக  மெதுவாக  உடலில்  இருந்து  வழிதல்,மிக  மெதுவாக  சுழலும் அந்த   சீலிங்  ஃபேன் சத்தம்  தவிர  வேறு  சத்தமோ  பின்னணி  இசையோ  இருக்காது.அதுதான்  கோயன்  ஸ்டைல்!
            இதிலும்  டேவ் இறக்கும்  காட்சி  அவ்வாறே  மிக  மெதுவாக  காட்டப்படும்..அந்தக்கொலைக்காவும்  போலி  கணக்கு  எழுதியதற்காகவும்  எட்டின்  மனைவி  கைது  செய்யப்படுகிறாள்.அவள்  சிறையிலேயே  தூக்குமாட்டி  தற்கொலை  செய்துவிடுகிறாள்!மொத்தமாக  உடைகிறான்  எட்.
             எவ்வித  சுவாரஸ்யமும்  முன்னேற்றமும்  இல்லாத  ஒரு  வாழ்வில் எட்  எடுத்த  அந்த  தொழில்  முயற்சியும் (டிரை க்ளீனிங்)  இப்படி கேலிக்கூத்தாக   முடிகிறது .
            எவ்வித  சுவாரஸ்யமற்ற  ஒரு  வாழ்வில்  நாம்  அனைவருமே  ஏதோ  ஒரு  விதமான  escapism  த்தை  நாடுகிறோம்.சிலருக்கு  சினிமா..சிலருக்கு  இசை..சிலருக்கு  புத்தகங்கள்..

                     தனது  சலூனுக்கு  வாடிக்கையாக  வரும்  அபண்டாஸ்ன்  பதின்ம  வயது  மகள் ரேச்சல்  பியானோ  வாசிப்பதை  ரசிப்பதில்  ஒருவித  escapism ஆக   உணர்கிறான் எட் .
             தனது  வாழ்க்கை  கானல்  நீராகிப்போன  நிலையில்  அபண்டாசின்  மகள்  ரேச்சல் -ன் இசைத் திறமையை  சரியான  வகையில்  ஊக்குவித்தால்  அவள்  மிகப்பெரும்  உயரத்தை  அடைவாள்.அவளது  மேனேஜராக  பணியாற்றலாம்  என்று  அடுத்த  முயற்சியை  எடுக்கிறான்.அதுவும்  வேறுமாதிரி  கார்  விபத்தில்  முடிகிறது.மருத்துவமனையில்  இருப்பவனை  போலீஸ்  கைது  செய்கிறது.டேவ்வை  கொலை  செய்ததற்காக  அல்ல!டோல்லிவரை  கொலை  செய்ததற்காக!
ரேச்சல் 

             இடையில்  டேவ்'ன்   மனைவி  வேற்றுகிரக  விண்கலத்தை  தானும்  டேவும்  பார்த்ததை  எட்டிடம்  சொல்கிறாள்.நம்ப  மறுக்கிறான்.ஆனால்  அவன்  சிறையில்  இருக்கும்போது  சிறைக்கதவுகள்  தானாக திறந்துகொள்கிறது.வானில்  விண்கலன்! (இது சரியா  என  தெரியவில்லை.ஆனால்  இங்கே  எனக்கு  தோன்றியது  David Lych meets Coen Brothers!)


                வாழ விருப்பமே  இல்லாதவன்/வாழ்வில்  அனைத்துவித  பிடிப்புகளும்  கைவிட்டநிலையில்   இருப்பவன்   சிறையில்  இருந்து தப்பிக்கவா  போகிறான்?மீண்டும்  தனது  சிறை  அறைக்கே  வந்துவிடுகிறான்.மின்சார  சேரில்  மரண  தண்டனை  நிறைவேற்றப்படுகிறது!

         அப்போது  கூட  ஒருவித  கருப்பு  நகைச்சுவையாக  எட்  மின்சார  சேரில்  உட்கார்ந்துகொண்டு  சுற்றிலும்  பார்க்கிறான்.பார்வையாளர்கள்  ஒவ்வொரு  விதமான  சிகை  அலங்காரமும்  க்ளோசப்பில்  காட்டப்படுகிறது.வாழும்போது  புரிந்துகொள்ளவே  முடியாத  ஒரு  வாழ்க்கை  மரணத்திற்கு  பிறகாவது  புரியும்  என்று  நம்புகிறான்!
              படத்தின்  மிகப்பெரிய பலம்  Billy Bob Thornton .அதிகம்  பேசாத,  வாழ்வில்  எந்த  ஒரு  விஷயத்திலும்  பெரிதாக  ஈடுபாடு இல்லாத,எந்நேரமும்  ஒரு  வெற்றுப்பார்வை  பார்க்கிற  எட்  கேரக்டரை  அப்படியே  கண்முன்  கொண்டுவருகிறார்.அட்டகாசம்!
எட்

கோயன்  படங்களில்  வழக்கமாக  நடிக்கும்  Frances McDormand (ஜோயல்  கோயனின்  மனைவி) ம்  நன்றாக  நடித்துள்ளார்.டுபாக்கூர்  வக்கீலாக  வந்து  காசு  கறக்கும்  Tony Shalhoub ம் கேரக்டரில்  சரியாக  பொருந்துகிறார்.
                 
              

Thursday 20 October 2016

தொட்டி ஜெயா (2005)


                  சிம்பு நடித்த ஒரே உருப்படியான படமாக நான் கருதும் படம்!!


                                'ஆறு  மெழுகுவர்த்திகள்'  படத்துக்கு ஒலக விமர்சகர்கள் எல்லாரும்  சொல்லி வச்சாப்ல "இந்த இயக்குனர் ஏற்கெனவே எடுத்த முகவரி படத்தை  பார்த்தோமானால் ..." என்ற டெம்ப்ளேட் வாசகத்தோடே விமர்சனத்தை துவக்கினார்கள்.ஆனால் அதற்குப்பின் (காதல் சடுகுடு குப்பை என்பதால்  அதை  விட்டுவிடுவோம் ) வந்த  இந்தப்படம் பற்றி பேசாமல் விட்டுவிட்டார்கள்.
சரி எல்லா ஒலக விமர்சகர்களும் ஒரே 'வாத்து' அச்சில் வார்த்தது என்பதால் விட்டுவிடுவோம்!               எப்படி  அரசியல்  சமூக  நிலைப்பாடுகளில்  status quo  என்பது  உள்ளதோ  அதேபோல  சினிமா உலகிலும்,  திரைப்படப்பாடல்கள்  உலகிலும்  உண்டு.எந்த  படம்  எல்லாராலும்  பேசப்படுகிறதோ  அதைப்பற்றியே  விவாதங்கள்  எழும்பும்.பேசப்படாத  பல  நல்ல  படங்கள்  அதனால்  வெளிச்சத்திற்கு  வராமலேயே  போய்விடும்.அதற்காக  தொட்டி  ஜெயா  ஓலகத்தரமான  படம்  என்றெல்லாம்  சொல்லவில்லை.அது  ஒரு  நல்ல  வணிக சினிமா.நல்ல  வணிக  சினிமாக்கள்  அருகிவரும்  இக்காலகட்டத்தில்;  போலியான  பல  படங்கள் மாற்று  சினிமா/ஒலக  சினிமா  என்று  ஏகோபித்த  பாராட்டுக்கு(அதே  status quo தான்) உள்ளாகிவரும்  வேளையில் இப்படம்  பற்றி  பேசவேண்டிய தேவை  உள்ளது.

                       இப்பட  டிரைலர்,  போஸ்டர்  எல்லாவற்றிலும்  இருளே  பிரதானமாக  இருந்தாலேயே  இப்படத்தை  பார்க்க  சென்றேன்.மொத்த  தியேட்டரையும்  ஒற்றை  தூண்  தாங்கிக்கொண்டிருக்க  சற்று  பயத்துடனேயே படத்தை  பார்க்க  வேண்டியதாயிருந்தது!
படம் பிடிக்க மிகமுக்கிய காரணம் சிம்புவின் மொத்த வசனத்தையும் ஒரே பக்கத்தில் எழுதிவிடலாம்!சிறுவயதில் இருந்தே அனாதையாக ஒருவித கடுமையான, இறுக்கமான சூழலில் வளர்ந்தவன்தான் ஜெயச்சந்திரன்.அதனாலேயே அவன் அதிகமாக பேசுவதில்லை.ஒன்லி ஆக்ஷன்!

           2002  ல்  தாதா  சீசன்  ஆரம்பித்தது.அஜித்தின்  ரெட்,விக்ரமின்  ஜெமினி,சூர்யாவின்  ஸ்ரீ, விஜயின்  பகவதி ஏன்  ரசினியின்  பாபா  கூட  தாதா  சீசனில்  வந்தபடம்தான்.அதன்பின்  காதல்  கொண்டேன்  துவங்கி  சைக்கோ  சீசன்  வந்தது.சிம்புவின் மன்மதன்  வந்தது.சிகப்பு  ரோஜாக்கள்  சாயல் ஓவராக  இருந்ததாலேயே  எனக்கு  அப்படம்  பிடிக்கவில்லை.தவிர  மொட்டை  சிம்புவின்  ஓவராக்டிங்  கொடுமை  வேற! தாதா  off season  சமயத்தில்  வந்ததுதான்  தொட்டி  ஜெயா.

                    துவக்க  காட்சியான  "முத்து கணேஷ்  யாரு?" மறக்க  முடியாத  காட்சி!நயீவான  நாயகி  தாதா  ஹீரோன்னு  வழக்கமான  கதைதான்.இன்னும்  சற்று  உற்று  கவனித்தால்  இப்படத்தின்  கதையும்  ஷாம்  நடித்த  பாலா (2002) படத்தின்  கதையும்    ஒன்றுதான்.அதில்  ரகுவரனிடம்  அடியாளாக  இருக்கும்  ஷாம் ரகுவரனின்  இரண்டாம்  மனைவியின்  மகளான  மீரா  ஜாஸ்மினை  லவ்வுகிறான்.அதற்கு  ரகுவரனின்  எதிர்ப்பு  அதைமீறி  சேர்ந்தார்களா?இல்லையா?  என்ற  கதைதான்.

          ஆனால்  அதில்  ஒரு  முக்கியமான  வேறுபாடு  உண்டு.ஷாம்  ஏன்  அப்படி  இறுக்கமான  அடிதடி  ஆசாமியாக  மாறினான்  என்பதற்கு  ஒரு  பிளேஸ்பேக்  இருக்கும்.தாய்  தந்தை  தங்கச்சின்னு  வாழ்ந்துவந்த  குடும்பத்தில்  சில  ரவுடிகள்  செய்யும்  வேலைகளால்  தங்கச்சி  தாய்  தந்தை  மூவரும்  இறந்துவிட அதற்கு  பழிவாங்கவே ஷாம்  அப்படியாக  மாறினார்  என்று  காட்டியிருப்பார்கள்.
       ஆனால்  இப்படத்தில்  சிம்பு  ஏன்  அப்படி  இறுக்கமான  இருண்மையான  தன்மை கொண்ட  ஒரு  கேரக்டராக  மாறினான்   என்பதற்கு  பெரிய  பிளேஸ்பேக்  சம்பவங்கள்  எதுவும்  காட்டப்பட்டிருக்காது.வாழ்க்கை அதன்  இயல்பான  தன்மையிலேயே  ஒருவனை  இறுக்கமான  ஆளாக  மாற்றிவிடக்கூடியது.அதற்கு  எந்த  நெஞ்சை  நக்கும்  பிளேஸ்பேக்கும்  அவசியமில்லை  என்பதுதான்  நிஜம்.
     


ஆர்டி ராஜசேகரின் மிகச்சிறந்த ஒளிப்பதிவு  இப்படத்தில்தான்!இருளுக்கும் ஒளியுக்குமாக    cat and mouse  விளையாடியிருப்பார்! முக்கால்வாசி  படம்  இருட்டிலேயே(மிஸ்கினுக்கு முன்னோடி துரை!) படமாக்கப்பட்டிருக்கும்.
                 டிஜிட்டல் கேமராவில்  இருளில் எடுக்கிறேன் பேர்வழின்னு  ஸ்க்ரீன்ல  சாணியடிச்சாப்ல  ஒருமாதிரி   சாம்பல்  கலர்ல  இருள்  காட்டப்படும்  இக்காலகட்டத்தில்  அப்படத்தை  பார்க்கும்போது  ஒளிப்பதிவில்  எவ்வளவு இழந்திருக்கிறோம்  என்பது  புலப்படும்.ஹாரிஸின்  தீம்  ம்யூசிக்  நன்றாகவே  பொருந்தியது(அது  காப்பியா  என்னான்னு  நமக்கு  தெரியாது).உயிரே  என்  உயிரே  பாடலை  குறிப்பிட்டு  சொல்லலாம்...

குறை என்றால் சிம்பு பேசவேண்டிய வசனங்களை சேத்துவச்சி பேசும் கொச்சின் ஹனீபா.அதிலும்

ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
  என்று  இம்போசிஷன்  சொல்லிகொண்டிருப்பது  கடுப்பை  கிளப்பும்.அதேபோல  வில்லனாக  வரும் பிரதீப்  ராவத் அந்த  கேரக்டரில்  கொஞ்சமும்  பொருந்தவில்லை.அதிலும்  "நம்ம  வூட்டாண்டையே  வன்ட்டானா?" ன்னு  சென்னை  தமிழ்  டப்பிங்  குரலுக்கும்  அவரின்  வாயசைப்பு +பாடி  லாங்குவேசுக்கும்  எந்த  தொடர்புமேயில்லை.
                   மற்றபடி  ஏற்கெனவே  சொன்னபடி  இது  நல்லதொரு  வணிக  சினிமா!

Monday 17 October 2016

Notஆமை-நாட்டமை ரீமேக்

நாட்டாமை-விஜயகுமார் 
பசுபதி- தலைவர்  கவுன்டர் 
கணக்குப்பிள்ளை-மனோபாலா
பட்டாளத்தான்-வெண்ணிற  ஆடை  மூர்த்தி 
மற்றும்  பலர்...
*********************************************************************************
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ  நாட்டாம  பாதம்  பட்டா  அந்த  வெள்ளாம  வெளையுமடி ..நாட்டாம  கை  அசைச்சா  அந்த  போயிங்  விமானமே  நிக்குமடி...
ஆடி  கார்  வந்து  இறங்க  நாட்டாமை  இறங்குகிறார்..கூடவே  தம்பி   பசுபதி  ...ஆலமரத்தடிக்கு  வருகிறார்கள் 


கணக்குப்பிள்ளை: ம்  என்னைய்யா  பாத்துகிட்டு  நிக்குறீங்க?நாட்டாம  காலடி  மண்ண  எடுத்து எல்லாரும்    நெத்தியில  பூசிக்கிங்க
பசுபதி:  க்கும்..நாட்டாம  இப்பத்தான்  அவுட்சைட்  போயிட்டு  வந்திருக்காரு..அந்தக்காலடி  மண்ணை  எடுத்து  பூசுனா சிக்கன்குனியா  இல்ல  மட்டன்குனியாவே  வரும்டா!சொன்னா  கேக்க  மாட்டானுங்களே..
......எல்லாரும்  காலடி  மண்ணை  நெற்றியில்  பூசிக்கொள்ள  ஒருவர்மட்டும்  நைசா  காலடி  மண்ணை  பார்சல்  பண்ணுகிறார்.....
பசுபதி:  அடேய்  என்னடா  பண்ணுற?
ராசப்பன்:  அய்யா  இந்த  மண்ணை  செய்வினக்கி  வெக்குறதுக்காக  எடுத்துட்டு  போறேனுங்க
பசு:  ஆகா  நாம  நெனச்சத  எவனோ  செய்யுறானே..சரி  நல்லா  செய்..இந்த புடி  ஐநூறு..நீ  வெக்குற  வினையில  அடுத்த  பஞ்சாயத்துல  நான்தான்  நாட்டாமையா  இருக்கோணும்
ராசப்பன்:  சரிங்கைய்யா
பசு:  டேய்  ஸ்டாப்..இந்த  நாட்டாமக்கி  வெக்குறாப்ல அடுத்து  எனக்கும்  வெக்கலாம்னு  ப்ளான்  பண்ணாத.நா  தூங்கும்போது  கூட  கால்  பூட்ஸ  கழட்டமாட்டேன்.போடா..
.

நாட்டாமை:  அப்புறம்  பிராது  குடுத்தவன்  எல்லாம்  வந்துட்டானா?
பசுபதி:  பிராது  குடுக்குறவன்  பிஸ்கொத்து   குடுக்குறவன்  எல்லாம்  வந்துட்டான்  ஆரம்பிங்க.
ஒண்டிப்புலி :நாட்டாமகாரய்யா  நியாயம்  செத்துபோச்சு..அநியாயம்  அழிஞ்சு  போச்சு..

....ஒண்டிப்புலி  தலைமுடியை  பிடித்து  ஆட்டுகிறார்  பசுபதி..
ஏண்டா  உனக்கு  குடுத்ததே  இந்த  ஒருவரி  வசனம்தான.அதையும் போட்டு சொதப்புனா எப்படிடா?
டைரக்டர்:  அட  என்னைய்யா  கிளவுட்ஸ்  வருது  .சட்டுபுட்டுன்னு  சீன  எடுத்து  முடிப்போம்.எல்லாம்  டப்பிங்ல  பாத்துக்கலாம்
பசு:க்கும்..எல்லா  படத்துலயும்  இதத்தான  பண்ணுறீங்க?
டைரக்டர்:ஓகே  ரீடேக்
ஒண்டிப்புலி: நாட்டாமகாரய்யா  நியாயம்  செத்துபோச்சு..அநியாயம்  அழிஞ்சு  போச்சு..
நாட்டாம:  என்னடா  சொல்லிப்போட்ட  நீயி?
பட்டாளத்தான்  ஒண்டிப்புலி  காதருகே  வந்து  ,ஏண்டா  போட்டா  என்கிட்டே  சொல்லோணும்னு  சொல்லியிருக்கேனில்ல?அப்புறம்  ஏண்டா  சொல்லல?
ஒண்டிப்புலி:  அய்யா இவுரு  அத  கேக்கலீங்
நாட்:  என்றா  என்றா  அங்க  குசு  குசுன்னு?
பட்டாளத்தான்:  குசுவும்  இல்ல  .கு....(காக்காய்  வந்து  தலையில்  கொத்திட்டு  போகிறது)
பசு:  க்கும்  நீ  தூங்குனாலே  டபுள்  மீனிங்ல  தான  தூங்குவ?
நாட்:  என்றா  என்றா  ப்ராது?
ஒண்டிப்புலி:  அய்யா  நேத்து  செத்துப்போன  குப்புசாமி  பொணத்த  பதினெட்டு  பட்டியில   எந்த  தெரு  வழியாவும்  எடுத்துட்டு  போக  கூடாதுங்க.நீங்கதான்  நல்ல  தீர்ப்பா சொல்லோனும்
பசு:  ஏண்டா 18  பட்டி  வழியாவும்  எடுத்துட்டு  போக  கூடாதுன்னா?பின்ன  எப்படிடா  குப்புசாமிய  அடக்கம்  பண்ணுறது?ஹெலிகாப்டர்ல  எடுத்துட்டு  போக  சொல்றியா?
நாட்:  என்றா  பசுபதி  என்றா  அங்க  முணுமுணுப்பு?
பசு: ஒன்னும்  இல்லீங்
நாட்:  என்றா  ஒண்டிப்புலி  நீ  சொன்னா  மாதிரியே  இந்த  19  பட்டி
பசு:  அய்யா  பக்கத்து  பட்டிய  எக்ஸ்ட்ராவா  சேத்துகிட்டீங்க..
நாட்:  எல்லாம்  எனக்கும்  தெரியும்டா.இந்த  18  பட்டி  வழியாவும்  குப்புசாமி  பொணத்த  எடுத்துட்டு போக  அனுமதிக்க  முடியாது.இதாண்டா  இந்த  நாட்டாமையோட  தீர்ப்பு.
பசு: அய்யா  அப்படி  செஞ்சா  போலீசு  கேசாகி  போகுமுங்,
நாட்:  என்றா  பெரிய  போலீசு?இப்படித்தான்  நம்ம  பதினேழாவது  பட்டியில  ஒரு  கொலைய  விசாரிக்குறேன்னு  ஒரு  இன்ஸ்பெக்டர்  வந்தான்.அவன்  கால  வெட்டி  கெணத்துல  போட்டோமுல்ல
பசு:  க்கும்  பல  வருசமா  துவைக்காத  அந்த  சாக்ஸ்  காலோட  வெட்டி  கெணத்துல  போட்டு  இன்னிக்கும்  அது  குடிக்க  வக்கில்லாம  ஆகிப்போச்சு..இதுல  என்னடா  பெரும?
நாட்:  என்றா  பசுபதி  என்றா  அங்க  முணுமுணுப்பு?
பசு:  அண்ணா  இதே  வசனத்த  திரும்பத்திரும்ப  பேசுனா  க்ளீஷேன்னு  பொறந்த  கொழந்த  கூட  வெளிய  தம்மடிக்க  போயிடுதுங்க.மாத்தி  பேசுங்க.
நாட்:  அதெல்லாம்  முடியாதுடா..இதெல்லாம்  எங்க  பாட்டன்  முப்பாட்டன்  காலத்துலேர்ந்து  செஞ்சிகிட்டு   வாறது.
பட்டாளத்தான்:  அய்யா  அந்தக்காலத்துல  பல  வீடுங்க  வச்சுக்க  அனுமதி  இருந்துச்சிங்க.அந்தமாதிரி  இப்பவும்  அனுமதி  குடுத்தீங்கன்னா...
பசு:  கரக்டா  அவன்  பாயிண்டுக்கு  வந்துட்டான்
பட்டா:  பாயிண்டுக்கு  நா  வரல..அதுதான் ஏ....
பசு:  போதும்டா  டபுள்  மீனிங்கு!
.
டிங்கு :  அய்யா  நம்மூருல  கக்கூசு  கட்டனும்னுட்டு   அதிகாரிங்க  தொல்ல  குடுக்குறாங்கைய்யா..நீங்கதான்  அத  தடுக்கோணும்
நாட்:  என்றா  என்ற  பாட்டன்  முப்பாட்டன்  காலத்துலேர்ந்து ஓப்பனாத்தான் போயி  பழக்கம்.இப்ப  என்றா  வெள்ளக்காரன்  கக்கூசெல்லாம்?
பசு:  அய்யா  நீங்க  வச்சிருக்குற  ஆடி  கார்கூட  வெள்ளக்காரன்  கண்டுபிடிப்புதானுங்க..
நாட்:  அமுத்துடா  பசுபதி .அதுக்காக  எல்லா  விசயத்துலையும்  வெள்ளக்காரன  நாம  பாலோ  பன்னோனுமா?
பட்டாளத்தான்:  அய்யா   வெள்ளக்காரன்  போட்ட  புக்கு  ஒண்ணு  படிச்சேன்  ...
பசு:  நீ  எங்கடா  படிச்ச?படம்  பாத்தன்னு  சொல்லு
பட்டா:  ஆமா  படம்  பாத்தேனுங்க.அதுல  என்னன்ன  மாதிரிலாம்..
பசு:  யோவ்  நிறுத்து.நீ  பஞ்சாயத்த  பிட்டு பட  தேட்டரா  மாத்திடுவ  பேசாம இரு..
நாட்:  கக்கூசு  கட்டணும்னு  சொல்றவன்  நாக்க  வெட்டுலே..கட்ட முயற்சி  பண்றவன்  கைய  எடுலே!
பசு: கருமாந்தரம்  புடிச்சவனுங்களா...

.

வேலு:நாட்டாம  அய்யா  தீர்ப்ப  தப்பா  சொல்லிப்போட்டீங்களே!
நாட்:  என்றா  சொல்லிப்போட்ட  நீயி?
.....பசுபதி  வேலுவின்  சட்டையை  பிடித்து....
டேய்  எதுக்குடா  இப்படி  சொன்ன?
வேலு:  இல்ல  தப்பா  தீர்ப்பு  சொல்லிட்டோம்னு  தெரிஞ்சா  நாட்டாம  நெஞ்சடச்சி  செத்துடுவாருன்னு  சொன்னாங்க.அதான்  டெஸ்ட்  பண்ணலாம்னு
பசு:தப்பா  தீர்ப்பு  சொன்னதுக்காக  நாட்டாமைங்க  எல்லாம்  நெஞ்சடச்சி   சாகணும்னா நாட்டுக்குள்ள  ஒரு  நாட்டாமகூட  இந்நேரம்  உசுரோட  இருக்க மாட்டான்டா!ஏதோ  சினிமா  பாத்துட்டு  வந்து  நாயி  கரடி  உடுது..ஓட்றா..
நாட்:  இந்தமாதிரில்லாம்  இவனுங்க  பண்ணுவாங்கன்னு  தெரிஞ்சிதான்  தினம்  பஞ்சாயத்துக்கு  வாறதுக்கு  முன்னாடி  நாலு ஆஸ்பிரின்  மாத்திரைய  போட்டுட்டுதான்  வரேன்!
பசு:  செம  உசாரா  இருக்கீங்ணா
.
வேலுச்சாமி:  அய்யா  வூட்டுக்கு  தண்ணி  வுடுறதுக்கு  கொழா  போட்டிருக்கானுங்க.ஆனா  அது  மாடசாமி  தெருவழியா  வருதுங்க..அத  ஏத்துக்க  முடியாதுங்க.
நாட்:  என்றா  அந்த  கொழாஎல்லாம்  புடுங்கி  எறிங்கடா
பசு:  ஆமா  புடுங்கி  போட்டுட்டு  தலைல  கொடத்த  வச்சிக்கிட்டு  ஐநூறு  மைல்   போங்க..
நாட்:  என்றா  பசுபதி  நமக்கு  பாரம்பரியம்தான்  முக்கியம்.
பசு:  அய்யா  எனக்கு  ஒரு  விண்ணப்பமுங்க
நாட்:  கேள்றா
பசு:  நம்மூருக்கு  கரண்டு  சப்ளை  பண்ற  கம்பிங்க  கூட  அதே  மாடசாமி  தெருவழியாத்தான்  போகுதுங்க..
நாட்:  இத  ஏத்துக்கவே  முடியாதுடா..எலே  அந்த  ஒயரையும்  புடுங்கி  போடுங்கல
பசு:இன்னிக்கி  பாதி   ஊரு  டெட்  பாடிதாண்டி!
.
ராசப்பன்:  அய்யா  நம்மூரு  சுப்பு  பஞ்சாயத்து  கட்டுப்பாட்ட  மீறி  நடந்துட்டானுங்க.
நாட்:  டேய் இந்த சுப்புவ ஊர விட்டு தள்ளி வக்குறேன்டா.அவன்கூடா ஆரும் பேசக்கூடாது..அவன் செல்லுக்கு ஆரும் ரீசார்ஜ் பண்ணகூடாது..அவன்..
....சொல்லிமுடிப்பதற்கு முன்னமே  சுப்பு  ட்ரேவல்  பேக்  சகிதம்  ஆஜராகிறான்...

சுப்பு :அய்யா,ரொம்ப  நன்றிங்கைய்யா.நா  பட்டணத்துக்கு  போகனும்.உங்க  ஆடி  கார்ல  ஸ்டேஷன் வரைக்கும்  கொண்டுவிட்டீங்கன்னா  நல்லா  இருக்கும்!
பசு:  எகத்தாளத்த  பாரு..ஓட்றா...
.

சிங்காரம்:  அய்யா  அய்யா  தப்பு  நடந்து  போச்சு..ஐயோ  ஐயோ!
பசு:  என்னடா  இது  மொத்த  18  பட்டிக்குமே  ரத்தகொதிப்பு  இருக்குது  போல.பத்து  லாரி  பிரஷர்  மாத்திரைய  ஊரு  கெணத்துல  கலக்கி  உட்டாத்தான்  சரியாகும்  போல!
நாட்:  என்றா  பசுபதி  இது  ரத்த  கொதிப்பில்லடா..ஆதங்கம்..எங்க  பாட்டன்..முப்...
பசு:  அண்ணா  போதுமுங்ணா  ரீல்  அந்து  போச்சு..
சிங்காரம்:  அய்யா  டிரம்மும்  கலரியும்  உங்களுக்கு  போட்டியா  தேர்தல்ல  நிக்க  போராவளாம்.
பசு:  ஹிலாரியும்  டிரம்புமா?அட்ரா  அட்ரா!
நாட்:  யாருடா  அந்த கலரி?யாருலே  அந்த  டிரம்மு?இழுத்துட்டு  வாங்கலே!
பசு:  அண்ணா  அவுங்கெல்லாம்  அமெரிக்காவுல  இருக்குறாங்க.
நாட்:  எந்த  அக்காவுல  இருந்தா  என்னடா?ஊரு  கட்டுப்பாட்டுக்கு   கட்டுப்படாம  எப்படிடா  இருக்க  முடியிம்?
பசு: அண்ணா  நீங்க  அனுமதிச்சா..
நாட்:  என்றா  இழுக்குற?
பசு: நீங்க  அனுமதிச்சா  நா  வேணும்னா  அமேரிக்கா  போயி  அந்த  ரெண்டு  பேரையும்  இழுத்துட்டு  வரட்டுமாங்?
நாட்:  இப்பதாண்டா  நீ  என்ற  தம்பி!தாராளமா  போயிட்டு  வாடா .டேய்  கணக்கு பசுபதி  கேக்குற  காச  குடுத்து  உடு.
கணக்கு:க்கும்.இவன்  ஊரு  சுத்திபாக்க  ப்ளான்  பண்ணுறான்.இது  தெரியாம  நீயெல்லாம்  ஒரு  நாட்டாம..
நாட்:  என்றா  முணுமுணுப்பு?
கணக்கு:  ஒண்ணுமில்லீங்!
பசு: ஒரு  பத்து  எல்  எடுத்து  வய்யி.துணிமணிய  பேக்  பண்ணிட்டு  வரேன்..ஐ  ஆம்  எஸ்கேப்டா!ஜாலியா  அமேரிக்காவுல  ஜல்சா  பண்ண வேண்டியதுதான்.

Saturday 8 October 2016

ராமன் ராகவ்

                 "ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும்  ஒரு  மிருகம்  இருக்கு.அதை  வெளியேற்ற  மனிதர்கள்  எல்லைதாண்டி  போவதுண்டு.மதத்தின்  போர்வையில்  சாதியின்  போர்வையில்,  போலீசு,அரசியல்வாதி    போன்ற  அதிகாரத்தின்  போர்வையில்  மனித நேயத்தின்  போர்வையில் எல்லைதாண்டி  கொல்வதுண்டு.நான்  எந்த  முகமூடியின்  பின்னாலும்  ஒளிந்து  கொள்ளாமல்  கொல்கிறேன்.சாப்பிடுவது,  கடவுளை  வணங்குவது  ,தூங்குவது,  மலம்  கழிப்பது  போன்று  கொல்கிறேன்.  உச்சத்தை  கண்டுவிட்டேன்  அதனால்  சரண்டர்  ஆகிறேன்"
                      இதுதான்  ராமன்(நவாசுதின்)  ராகவனிடம் (விக்கி ) சொல்லும்  காரணம்.
                      பொதுவாக  சீரியல்  கொலைகாரன்  அவனை  பிடிக்கப்போகும்  நேர்மையான  போலீசு  போன்ற  வழமையான  சித்தரிப்புகளை  ஒதுக்கிவைத்துவிட்டு  அப்பட்டமாக  சில  உண்மைகளை   காட்டியிருக்கிறார் .போலீசாக  வரும்  ராகவன்  வழக்கமாக  சட்டைக்கு  போடும்  கஞ்சியை  உள்ளுக்கும்  கொஞ்சம்  விட்டுக்கொண்டு  விறைப்பாக  காய்கறி  விக்குறவன்  தொடங்கி  மந்திரி  வரையில்  முஷ்டியை முறுக்கி  "அடிங்..நா  போலீசுடா" என்று  தமாஸ்  பண்ணுவதில்லை.ராகவனின்  கதை  என்பது  தனி.
                   ஆளவந்தான்  நந்து  கேரக்டர்  உங்களுக்கு  நினைவில்  இருக்கலாம் ."பூ  விழாம  தல  விழுந்திருந்தா  நீ  இந்தப்பக்கம்  நா  அந்தப்பக்கம்"  என்று  நந்து  விஜயிடம்  சொல்வதாக  ஒரு  வசனம்  இருக்கும்.நந்து  சித்தியிடம்  வளராமல்  மாமாவிடம்  வளர்ந்திருந்தாலும்  இதே  மாதிரிதான்  ஆகியிருப்பார்.The  inherent desire to sin  என்பது  சிறுவயதிலேயே   நந்துவின்  மனதில்  இருந்த  விஷயம்.அதை  சித்தி  ஊதி  பெருக்கிவிட்டாள்  என்று  வேண்டுமானால்  சொல்லலாம்.

                   ராகவனும்  கிட்டத்தட்ட  அப்படியே.சிறுவயதில்  கஞ்சா  அடிப்பதை  தந்தை  பார்த்துவிடுகிறார்.அதன்பின்  தொடர்  பெல்ட்  விளாசல்கள் ஆழ்மனதில்  இருக்கும்  அந்த  தீய  எண்ணங்கள்/செயல்கள்  மீதான  ஈர்ப்பின் விரிசலை  பெரிதுபடுத்துகிறது.இப்படிப்பட்ட  ஒரு  ஆள்    காவல்துறையில்  சேர்ந்தால்  தனக்குள்  இருக்கும்  அந்த  தீய  எண்ணங்களை  வெளிக்கொண்டுவர  ஒரு  வடிகாலாக  இருக்கும்  என்று  எண்ணுகிறான்  ராகவன்(அது  படத்தில்   சொல்லப்படுவதில்லை  என்றாலும்  அவ்வாறு  புரிந்துகொள்ளலாம்) .போதைக்கு  அடிமையான  ஒரு  insomniac ஆகவும்  sexual pervert  ஆகவும்  இருக்கிறான்.அதிகார  முகமூடியில்  அவன்  நினைத்ததை  செய்யமுடிகிறது.

                 நினைத்த  பெண்ணோடு  உறவு கொள்கிறான்.ஆனால்  திருமணம்  குழந்தை  என்ற  commit  ஆக  அவன்  விரும்பவில்லை.அது  அவனுக்கு   சரிப்படாது  என்பதையும்  உணர்ந்திருக்கிறான்.உறவு  கொள்ளும்  பெண்களை  காயப்படுத்துவதோடு  அல்லாமல்  தன்னையும்  ஒரு  self destructive  path  ல்  வழநடதத்துவதில்  மகிழ்கிறான்.
                   எல்லா  நேரத்திலும்  அதே  கடுமையோடு  ராகவனால்  நடந்துகொள்ள முடிவதில்லை.போதைப்பொருள்  சப்ளை  செய்யும்  அந்த  நைஜீரியன்  ராகவனை  உதைத்து  கீழேதள்ளி  துப்பாக்கியை  காட்டியதும்  நடுங்கிப்போகிறான்.அந்த  நேரங்களில்  மனதின்  இருண்ட  குகைக்குள்  முற்றிலுமாக  சிக்கிக்கொண்டு  வெளிவரமுடியாமல்  கிடக்கிறான்.இருண்ட  மனதிற்கும்  இவனிற்குமான  இடைப்பட்ட  சுவர்  போலவே  அவன்  போதைப்போருட்களையும்  பெண்களுடனான  perverse  உடலுறவுகளையும்   பயன்படுத்துகிறான்.

                    கீழ்லிருந்து  மேல்  வரை  முற்றிலும்  அழுகிப்போன  சமூகத்தின்;  மனித  மதிப்புகள்  முற்றிலுமாக  வீழ்ச்சியடைந்த  ஒரு காலகட்டத்தின்  பிரதிநிதிகளாகவே  ராமண்ணாவும்   ராகவனும்  சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.ராகவன்  ஒரு  நடுத்தர  குடும்பத்தில்  இருந்து  வந்தவன்.ராமன்  அடித்தட்டு  சேரியிலிருந்து  வந்தவன்  என்பதெல்லாம்  இங்கே  எந்த  வித்தியாசத்தையும்  ஏற்படுத்துவதில்லை.எல்லா  தரப்பிலும்  எல்லா  தட்டுகளிலும்  இத்தகைய  மனிதர்கள்  நிறைந்த  சமூகமாகவே  நம்  சமூகம்  உள்ளது.
                    ராமனின்     சகோதரி  வீட்டில்  நடக்கும்  அந்த  செக்மன்ட்டில்  Michael Haneke  இயக்கிய  Funny Games(1997) படத்தின்  சாயலை  காணமுடியும்.ஆனால்  funny games  போல  படம்  பார்ப்பவர்களை thesis paper  போலவும் இயக்குனர்  தன்னை  பேராசிரியராகவும்  கற்பனை  செய்துகொண்டு   இம்சை படுத்தும்  வேலையை  அனுராக்  செய்யவில்லை. படத்திலேயே  ரொம்ப  இறுக்கமான  காட்சிகள்  அந்த  காட்சிகள்தான்.தனது  தந்தையையும்  தாயையும்  கொன்றுவிட்டதை   பதற்றமில்லாமல்  மெதுவாக   எட்டிப்பார்க்கும்  அந்த  சிறுவன்  இன்றைய  சிறுவர்  சிறுமிகள்  வன்முறை மீதுகொண்ட    ஈர்ப்பினை  காட்டுவதாகவே  உள்ளது.ஆனால்  இதையெல்லாம் பார்வையாளனுக்கு   preach  செய்வது  என்ற  நிலைக்கு  போய்  கொல்லாமல்  வெறுமனே  காட்சிப்படுத்தி  இருப்பது  ஆறுதலளிக்கிறது!


                    முதலிலேயே  சரணடையும்  ராமனை  போலீசு  கைது  செய்யாமல் ஏன்   அவன்  தப்பிக்கும்  வகையில்  பாழடைந்த குடியிருப்பில்  பூட்டிவிட்டு  செல்கிறார்கள்  என்பது  உறுத்தினாலும்  அதன்பிறகு  வரும்  காட்சிகள்  அந்தக்குறையை  மறக்கடித்துவிடுகிறது.
கடவுளின்  சிசிடிவி  கேமரா!

                  சமூக  அவலங்களை  குற்றங்களை  தண்டிப்பதற்காக  இருக்கும்  காவல்,நீதித்துறை,அதிகார  வர்க்கம்  எல்லாமே  பொது  ஜனத்திரளில்  இருந்து  வந்தவையே.பொதுமக்கள்  சீரழிந்த  நிலையில்  இருக்கும்போது  அதிலிருந்து  ஒருவர் வந்து  அதிகாரியாகவோ  நீதிபதியாகவோ  போலீசாகவோ  ஆனால்  அவர்களும்  அந்த  சமூக  அவலத்தின்   பிரதிநிதியாகத்தான்  இருப்பார்கள்  என்பதை  இப்படம்  உணர்த்துகிறது.Of course  ஒவ்வொரு  மட்டத்திலும்  சில  நல்லவர்களும்  இருக்கத்தான்  செய்கிறார்கள் .  ஆனால்  ஒப்பீட்டளவில்  மிகவும்  குறைவான  அளவில்  மட்டும்!

              ராமன்  கேரக்டர்  மட்டுமே  படம்  முழுக்க  தெரிந்தது.அதில்  நடித்த  நவாசுதின்  கண்ணுக்கு  தெரியவில்லை.நவாஸ்  என்ற  நடிகனை  முழுமையாக  எரித்து  ராமன்  கேரக்டருக்கு  உயிர்  கொடுத்துள்ளார்.இப்படிப்பட்ட  நடிப்பை  தமிழில்  பார்க்க  எனக்கும்தான்  ஆசை..என்ன  செய்ய!ராகவனாக  வரும்  விக்கியும்  நன்றாகவே  கேரக்டருக்கு  பொருந்துகிறார்.சிம்மியும்  கூட!

சிம்மி 

              காலம்  காலமாகவே  ஹிந்தி  படங்களில்  தென்னிந்தியர்கள்  கோமாளிகளாகவே  சித்தரிக்கப்பட்டுவருகிறார்கள்(சிலபல  விதிவிலக்குகளும்  உண்டு  என்றாலும்).தென்னிந்தியாவில்  நான்கு  மாநிலங்கள்  உள்ளன.அவர்களுக்கு  வெவ்வேறு  மொழி  பண்பாடு  எல்லாம்  உண்டு  என்ற  புரிதல்  இல்லாமலேயே  போட்டு  குழப்பியடிப்பார்கள்.உதாரணமாக  அமிதாப்  நடித்த   கூலி (1983)  படத்தில்  ஒரு  தென்னிந்திய குடும்பம்  காட்டப்படும்.அதில்  குடும்பத்தலைவர்  திருப்பதி  பெருமாள்  படத்தின்  முன்பு  நின்றுகொண்டு  "முருகா" என்பார்.நல்லவேளை  படத்தின்  இறுதியில் வரும்    அல்லா  சென்டிமெண்டில்  அல்லாவை  ஏசுவோடு  குழப்பாமல்  இருந்தார்களே(அது  இன்டர்நேசனல்  விஷயம்  உதயா-கும்மாங்கோ)!
             ஷாருக்  நடித்த  ரா  ஒன்  ,சென்னை  எக்ஸ்பிரெஸ்  எல்லாவற்றிலும்  தென்னிந்தியர்கள்  சித்தரிப்பில்   ஏக  குளறுபடி!இந்தப்படத்தில்  சிம்மி  ஒரு  தெலுங்கு  பெண்.அதற்காக  அவரின்  ஒருகையில்  திருப்பதி  லட்டையும்  இன்னொரு  கையில்  ஆவக்காய்  ஊறுகாயையும்  கொடுக்கவில்லை .அனுராகிடம்  அந்த  sensibility  இருப்பது  பாராட்டுக்குரியது. மற்ற  ஹிந்தி  இயக்குனர்களுக்கும்  அது  வரவேண்டும்.

ஒலக எழுத்தாளர்  உள்ளிட்டோர்  சொல்வதுபோல  இது உண்மையான   ராமன்  ராகவின் கதையல்ல.அதை  படமாக்க  60 களின்  செட்  போடவேண்டும்  காஸ்ட்யூம்ஸ்  சிக்கல்  கிராபிக்ஸ்  தேவைப்படும்  போன்ற  பட்ஜெட்  பிரச்சனையால்  நிஜ  ராமன் ராகவின்  கேரக்டரை  தழுவி  படமாக்கப்பட்டதே  இப்படம்!

                              கண்டிப்பாக  இது ஒரு  அற்புதமான  முயற்சி!ஆங்..படத்தில்   சிகரெட்  பிடிப்பது  blah blah blah ; குடிப்பது  blah blah  என்றெல்லாம்  மொண்ணை  எச்சரிக்கைகள்  வரவில்லை!இந்த  அபத்தங்களை  கடுமையாக  எதிர்க்கும்  அனுராகின்  முயற்சியால்  இது  நடந்ததா  என்பது  தெரியவில்லை.ஆனாலும்  அந்த  அபத்த  எச்சரிக்கை  வாசகங்கள்  ஒழிக்கப்பட  வேண்டும்  என்பதே  என்  கருத்தும்!
           
            

Thursday 15 September 2016

ஹம்மிங்பர்ட் (2013)

                                  பொதுவாக ஜேசன்  ஸ்டேதம்  படங்கள்  என்றாலே  கண்டிப்பாக  அதிரடி  சேஸிங்  ,சண்டைக்காட்சிகள்,விறுவிறுப்பான  காட்சியமைப்புகள்  என்றிருக்கும்.அதிலிருந்து  விலகி  அவர்  நடித்திருக்கும்  படமிது.இப்படத்தில்  அடிநாதமாக  இருப்பது  குற்ற  உணர்வும்  அதற்கான  பிராயச்சித்த  தேடலும்தான்..அதை  சரியாக  சொல்லியிருக்கிறார்களா  இல்லையா  என்பதைத்தாண்டி  இப்படம்  எனக்கு  பிடித்திருந்தது..குறைகள்  உண்டு  என்றாலும்கூட..

                      ஷெர்லாக்  ஹோம்ஸ்  நாவல்  எழுதப்பட்ட  19 ஆம்  நூற்றாண்டில் டாக்டர்  வாட்சன்  கதாபாத்திரம்  ஆப்கன்  போரில்  காயம்பட்டு  நாடு  திரும்பியவராக  சித்தரிக்கப்பட்டிருப்பார்.பிறகு  நூறாண்டுகள் கழித்து  ஷெர்லாக்  தொடர்  2010 ஆம்  ஆண்டு  நவீன  காலகட்டத்தின்  பின்னணியில்  டிவி  தொடராக  எடுக்கப்பட்டது.அப்போதும்  வாட்சன்  கதாபாத்திரம்  ஆப்கன்  போரில்  காயம்பட்டு  நாடு  திரும்பியவராக காட்டமுடிந்தது  நகைமுரண்.அப்போதும்  ஆப்கனுடனான  சண்டை  இருந்தது.நூறாண்டுகள்  முன்பும்  ஆப்கனுடன்  போர்  புரிந்துள்ளது  பிரிட்டன்.இதைசொல்ல  காரணம்  போரின்,  சண்டைகளின்  அர்த்தமற்ற  தன்மையை  மேற்கோள்  காட்டுவதற்காகவே.
                         இப்படத்திலும்  ஜோசப்  ஸ்மித்/ஜோயி(ஸ்டேதம்) ஆப்கன்  போரில்  நடந்த  பிழையான  சில விஷயங்களுக்குப்பிறகு நாடற்றவராக  வாழ்ந்து  வருகிறார்.அவருடன்  இசபெல்  என்ற  மற்றொரு  வீடற்ற  தோழி  தங்கியிருக்கிறார்.இருவரும்  தாக்கப்பட  ஜோசப்  ஓடி புகைப்படக்காரர்  வீட்டில்   ஒளிந்துகொள்கிறான்.அமெரிக்கா  சென்றுள்ள  புகைப்படக்காரர்  திரும்ப  வர  பல  மாதங்கள்  ஆகும்  என்ற  நிலையில்  வசதியான  அந்த  அபார்ட்மெண்டில்  சகல  வசதிகளையும்  அனுபவித்து  வாழ்கிறார்  ஸ்மித்.அண்டை  வீட்டார்  விசாரிக்கும்போது  அந்த  புகைப்படக்காரரின்  பாய்ஃபிரன்ட் என  சொல்லி  தப்பிக்கிறார்.

                       சிஸ்டர்  கிறிஸ்டினாவுடன்  நட்பில்  இருக்கும்  ஸ்மித் அவ்வப்போது  அவரை  சந்திக்கிறான்.அவருக்கு  ஸ்மித்  வேறொருவரின்  வீட்டில்  தங்கியிருப்பது  தெரிந்து  கண்டிக்கிறார்.பிறகு  ஸ்மித்  சீன உணவகத்தில்  வேலை  செய்து  சொந்த  சம்பாத்தியத்தில்  வாழ்கிறான்.அங்கு நடக்கும்  அடிதடிமூலம்  சீன  அண்டர்கிரவுண்ட்  கும்பலோடு  தொடர்பு-அடியாள்  வேலை  என்று  நாள்  கழிகிறது.பிறகு  கிறிஸ்டினா  மூலம்  இசபெல்  கொல்லப்பட்டதை  அறிகிறான்.அவனை  பழிவாங்குகிறான்.அதன்பின்னராவது  அவனுக்கு  மன  நிம்மதி  கிடைத்ததா?
                     இப்படத்தின்  மிகப்பெரும்  பலமாக  நான்  கருதுவது  கிறிஸ்டினா  கதாபாத்திரம்தான்.சிறுமியாக  இருந்தபோது  பேலே (Ballet)  நடமங்கையாக  ஆசைப்பட்டு  தந்தையின்  வற்புறுத்தலால்  ஜிம்னாஸ்டிக்ஸ்ல்   சேர்கிறாள்.அங்கே    தன்னை  பலமுறை  பாலியல்  பலாத்காரம்  செய்த  ஜிம்னாஸ்டிக்ஸ்  பயிற்சியாளனை  கொன்றுவிட்டு      சீர்திருத்தப்பள்ளி  எல்லாம்  கடந்து  nun  ஆகிவிடுகிறாள்.

                  ஸ்மித்  அடிதடி  மூலம்  சேர்க்கும்  காசை அவ்வப்போது  கிறிஸ்டினாவிடம்  கொடுக்கிறான்.கிறிஸ்டினா  அதை  மதரிடம்  கொடுக்கிறார்.இந்தப்பணத்தை  வாங்கிக்கொள்வதில்  மதருக்கு  தயக்கமில்லை.தவறான  முறையில்  சம்பாத்திததென்று  போலீசிடம்  கொடுத்தால்  அவர்கள்  பப்புக்கு  சென்று  குடித்து காலி  செய்யப்போகிறார்கள்  என்கிறார்.ஆனாலும்  கிறிஸ்டினாவுக்கு  ஒரு  தயக்கம்.இந்தப்பணத்தில்  தனக்கொரு  பொருள்  வாங்கிக்கொள்ளுமாறு  ஸ்மித்  கூறினான்  என்கிறார்.இந்தக்காட்சியில்  கிறிஸ்டினாவின்  dilemma மிகத்தெளிவாக  காட்டப்படுகிறது.தவறான  முறையில்  வந்த இப்பணத்தை  வீடற்றவர்களுக்கு  செலவழிக்க  தயங்குகிறார்.அதேநேரத்தில்  அப்பணத்தில்  தனக்கு  பிடித்த  ஒரு  பொருளை  வாங்கிக்கொள்வதில்  அவருக்கு  தயக்கம்  இருக்கவில்லை.
                       அப்பணத்தில்  Maria  Zielinska வின் கடைசி  பேலே  நட  நிகழ்ச்சிக்கு  பாக்ஸ்  டிக்கட்  வாங்கிக்கொள்கிறார் .தான்  யாராக  ஆக வேண்டும்  என்று  விரும்பி  ஆனால்  ஆகமுடியாமல்  போனதோ  அவர்தான்  மரியா.நாற்பதை  தாண்டிவிட்டவர்.அவரின்  ஃபேர்வெல்  நடன  நிகழ்ச்சிக்குத்தான்  500  பவுண்டில்  டிக்கட்  எடுக்கிறார்  கிறிஸ்டினா.தான்  அடைய  விரும்பிய  ஒரு  இடத்தை  அடைந்திருக்கும்  மற்றொருவரை  பார்த்து  மகிழும்  அந்த  உணர்வை  மிக  அற்புதமாக  வெளிப்படுத்திருக்கிறார்  கிறிஸ்டினாவாக  நடித்திருக்கும்  Agata Buzek  .இவர்பற்றி  மேலும்  தேடியபோது  இவர்  வேறுசில  படங்களில்  nun  ஆக  typecast செய்யப்பட்டிருப்பதை  காணமுடிந்தது.இருந்தாலும்  அவர்  இப்படத்தில்  மிக  அற்புதமாக  நடித்திருக்கிறார்.nun  ஆகிவிட்டபோதும்  அவ்வப்போது  எழும்  சாமானிய  பெண்ணின்  ஆசைகள்,  நிறைவேறாமலேயே  கானலாகிவிட்ட  தனது  பேலே  நடன கனவு ,அற்புதமான  உடைகள்  மீதான  ஆசை  என்று  அந்தப்பக்கம்-இந்தப்பக்கம்  என  மாறி  மாறி  வாழ்ந்துகொண்டிருக்கும்  ஒரு  பெண்  கதாபாத்திரத்தை  அப்படியே  கண்முன்  கொண்டுவந்துள்ளார்.

               
                  சினிமாவிலும்  சரி  நாவல்களிலும்  சரி  சில  கதாபாத்திரங்கள்  நமக்கு  மிகவும்  comforting  ஆக  இருப்பதை  உணரமுடியும். குறைந்தபட்சம்  சினிமாவிலும்  நாவல்களிலுமாவது  அப்படியானவர்களை காண  முடிவதில்  மகிழ்ச்சி! கிறிஸ்டினா  அப்படியான  ஒரு  கதாபாத்திரம்தான் .
                      Crime and Punishment நாவலில்  வரும்  Sonya கதாபாத்திரத்தின்  தன்மைகள்  சிலவற்றை  கிறிஸ்டினாவிடம்  காணமுடிகிறது.
                   ஸ்மித்  கதாபாத்திரத்திற்கு  வலுசேர்க்க  சில ஆப்கன் போர்க்கள  காட்சிகள்    காட்டப்படுகின்றன.தனது  சக போர்  வீரர்கள்  ஐந்து  பேரை  ஆப்கன்  தீவிரவாதிகள்  கொன்றதற்கு  பழிவாங்க  தன் கண்ணில்படும்  முதல்  ஐந்து  பேரை  கொன்றுவிட்டதாக (அவர்களில்  சாமானியர்களும்  உண்டு)கதறுகிறார்.ஆனால்  அந்த  போர்க்கள  காட்சிகள்  மனதில்  பதியவில்லை.ஏனோதானோவென்று  இருப்பதாக  எனக்கு  தோன்றியது.மேலும்  தனது தோழியான  இசபெல்லை  உடனே  தேடாமல் கிறிஸ்டினாவாக  வந்து  அவள்  கொல்லப்பட்டதை  சொன்னதும்தான்  அவளின்  நினைப்பு  ஸ்மித்திற்கு  வருகிறதா?? இதுமாதிரி    சறுக்கல்கள்  இருந்தாலும்  படம்  நிறைவைத்தந்தது.

Sunday 11 September 2016

ஜியோ- எனது புரிதல்

                           நீங்கள்  கவனித்திருக்கலாம்..4G  நெட்வொர்க்கில்  இருக்கும்  ஒரு  மொபைலுக்கு  தொலைபேசி  அழைப்பு  வரும்போது  2G க்கோ  3G  க்கோ  மாறிவிடும்.காரணம்  4G  யில்  செல்லுலர்  அழைப்பு  சாத்தியமில்லை.அதில்  அனைத்துமே  டேட்டாதான்!
                  இப்போது  வந்திருக்கும் ஜியோவைப்பொறுத்தளவில் 2G 3G  எல்லாம்  கிடையாது  .முழுக்க  முழுக்க  4G  மட்டுமே.தொலைபேசி  அழைப்புகளும்  டேட்டாவாக  மாற்றப்பட்டே  பரிமாறப்படும்.ஒருவேளை  உங்கள்  ஏரியாவில்  ஜியோ (4G)  சிக்னல்  இல்லையெனில்  ஃப்ளைட்  மோட்  போலத்தான்!
                 இன்னொரு  விஷயம்  தொலைபேசி  அழைப்பின்  தரம்..ஏன்  தொலைபேசி  அழைப்புகளை  டேட்டாவாக  மாற்றி  அனுப்ப  வேண்டும்??
              தொலைபேசி  அழைப்பின் தரம்  உயர்ந்ததாக  இருக்க  அது  உதவும்.ஆனால்  அதிலும்  ஒரு  ஃ உள்ளது.
           உங்கள் கைபேசியில்   VoLTE  ரேடியோ  இருக்க  வேண்டும்.மேலும்  கைபேசியின்  OS  ம்  VoLTE  அழைப்பு  செய்ய  வசதி  பெற்றிருக்க  வேண்டும்..சில  கைபேசிகளில்  அந்த  VoLTE  ஹார்ட்வேர்  இருக்கும்..ஆனால்  OS  ல்  அது  எனேபிள்  செய்யப்பட்டிருக்காது.அந்த  நிலையில்  அந்த  கைபேசி  நிறுவனம்  OTA(over the air) அப்டேட்  மூலம்  அதை  எனேபிள்  செய்ய முடியும்.ஆனால்  உங்கள்  கைபேசியில்  VoLTE  ஹார்ட்வேர்  இல்லையெனில்  அதற்கு  வேறு  வழி  உள்ளது.அதை  பிறகு  பார்ப்போம்.
                 இப்ப  உங்களிடம்  VoLTE  ஹார்ட்வேர்  சாஃப்ட்வேர்  இரண்டுமே  உள்ளது..ஜியோ  (தற்போதைக்கு  வோல்டியி  வசதி  ஜியோவில்  மட்டும்) சிம்மும்  போட்டிருக்கிறீர்கள்..நீங்கள்  உங்கள்  நண்பருக்கு  போன்  செய்து  பேசுகிறீர்கள்.."என்னைய்யா  என்னமோ  FM  ரேடியோ  போல  குரல் தெளிவா  கேக்கும்னு  சொன்னாங்கே..இங்க  ஒரே  கரகரப்பிரியாவா  இருக்கே?"  என்பது  பலரின்  கேள்வி..

                 நீங்கள்  வோல்டியி  எனேபில்ட்  போன்+சிம் வச்சிருந்தா  போதாது..உங்கள்  நண்பரும்  அதேபோன்று  வோல்டியி  எனேபில்ட்  போன்+சிம் வச்சிருந்தா  மட்டுமே  அந்த  HD  voice  ல்  பேசமுடியும்.நீங்கள் வோல்டியி  எனேபில்ட்  போன்+சிம் வைத்திருந்து  நண்பர்  சாதா  ஸ்மார்ட்போனோ  அல்லது  வோல்டியி  ஸ்மார்ட்போன்ல  வேறு  சிம்மை  பயன்படுத்தினால்  அதே   muddy  call  clarity தான்  கிடைக்கும்.
                நீங்கள்  ஜியோ  சிம்மை  வோல்டியி  வசதி  இல்லாத  ஸ்மார்ட்போனில்  பயன்படுத்தினால்  அப்போது  எப்படி  கால்  செய்யமுடியும்?அதற்கு  மை  ஜியோ  ஆப்  இன்ஸ்டால்  செய்திருக்கவேண்டும்.மேலும்  டேட்டா  ON  ல்  இருக்கவேண்டும்.அந்த  டேட்டா   மூலமாக  பேசலாம்.வோல்டியி  எனேபில்ட்  மொபைல்  வைத்திருந்தால்  டேட்டா  ஆன்  செய்திருக்க வேண்டும்  என்ற அவசியமில்லை!

                மே  மாசம்  துவங்கி  ஃப்ளேம்  மொபைலில்  மூன்று  மாதம்  அன்லிமிடட்  டேட்டா_காலிங்  கொடுத்திருந்தபோது  நாள்  முழுவதும்  ஓரளவு  4G  ஸ்பீட்  வந்தது.ஆனால்  இப்போது  அனைவருமே  சிம்மை  வாங்கி  பயன்படுத்தலாம்  என்று  அறிவிக்கப்பட்டதும்  ஒருநாளைக்கு  4G  டேட்டா  மட்டும்  4G  ஸ்பீடில்  கிடைக்கும்  என  அறிவிக்கப்பட்டதும்  போச்சு!இணைய  பிரவுசிங்  பண்ணும்போது  பிரச்சனையில்லை.ஸ்பீட்  இருக்கு.ஆனா  ஆப்  ஸ்டோரிலோ   டொராண்டிலோ  யூட்யூபிலோ  எதாச்சும்  டவுன்லோட்  போட்டா  முதல்  ஐந்து  நிமிடம்  நல்ல  ஸ்பீட்  அதன்  பின்  1Mbps க்கு  த்ராட்டில்  செய்யப்படுகிறது.அதை  நிறுத்திவிட்டு  மீண்டும்  ஒருமணி நேரம்  கழித்து  அதே  டவுன்லோடை  ரெஸ்யூம்  செய்தால்  அதேபோல  முதல்  ஐந்து  நிமிடங்கள்  ஸ்பீட்  பிறகு  த்ராட்டில்..
              மேலும்  இந்த  நைட்  அன்லிமிடட்  என்ற  கேலிக்கூத்து.2-5 AM  ஆம்!
              இந்த  டைம்  ஸ்லாட்டை  இருவகையினர்  பயன்படுத்திகொள்ளலாம்!
1. ஏ.ஆர்.ரகுமான்
2.  நள்ளிரவு (உனக்குத்தான்  அது  நள்ளிரவு.மத்தவங்களுக்கு  அது  விடிகாலை  உதயா-கும்மாங்கோ) நாலு  மணிக்கே  கண்விழிப்பவர்கள்  ஒருமணி நேரம்  யூஸ்  பண்ணலாம்..
  என்ன  அபத்தமான  டைமிங்  இது?  12-5AM  அல்லது  12-4AM  னு  வச்சாலும்  ஒரு  நியாயம்  இருக்கும்.
                 மேலும்  ஒவ்வொரு  பிளானோடு  வழங்கப்படும்  wifi  hotspot  data.அதிலும்  ஒரு  ஃ  இருக்கு.உங்க  ஏரியாவில்  ஜியோ  வை ஃ பை  சிக்னல்  இருந்தால்  மட்டுமே  அது  பயனுள்ளது.இல்லாட்டி  ஜியோ  வை ஃ பை  வசதி  உள்ள  ரயில்  நிலையம்  போன்று  எங்கனா  போய்  பயன்படுத்திக்கலாம்.

                   1 GB  50  ரூபாய்  என்பதும்  கல்தா தான்!அதாவது  4999 க்கு  ரீசார்ஜ்  செய்தால்  75GB  என்று  66 ஓவாக்கி  ஓரளவு  நெருங்கி  வருது.மற்றபடி  149  க்கு  300 MB  _700MB wifi என்பது  யானை  பசிக்கு  சோளப்பொறி தான்.
                  "மதியத்துக்கு  கொடல்  கொழம்பு  வச்சிடு..வஞ்சிரத்த  வறுத்துடு.." போன்ற அதிமுக்கிய   குடும்பஇஸ்திரி  உரையாடல்களுக்கு     "ஹா!ஹூ..யா..ம்..ஹாஹா"  என்ற மாதக்கணக்கில்  நீளும்   லவ்வர்  பாய்  உரையாடல்களுக்கு  மிகவும்  ஏற்றது.அன்லிமிடட்  கால்ஸ்  ஆச்சே!
                   இதுக்குமேல  இதில்  உள்ள  ஃ  ன்னாக்கள்  கமர்ஷியல்  லான்ச்க்கு  பிறகே  தெரியவரும்.ஜியோ  டு  ஜியோ  இணைப்பு  உடனே  கிடைக்கிறது.ஆனால்  பிற  மொபைல்  சேவை  நம்பர்களை  ஐந்தாறு  முறை  டயல்  செய்தால்தான்  லைன்  கிடைக்கிறது.இந்த  இன்டர்கனக்ட்  பிரச்சனை  இன்னும்  தீர்க்கப்படவில்லை.ஏர்டல்  உள்ளிட்ட  பகல்  கொள்ளையர்கள்  இந்த  இன்டர் கனக்ட்  கால்கள்  ஒவ்வொன்றுக்கும்  கட்டணம்  நிர்ணயிக்க  வேண்டும்  என  டிராயிடம்  புகார்  கொடுத்துள்ளன..அதில்  வரும்  தீர்ப்புக்கு  பிறகே  அந்த  பிரச்சனை  சரியாக  வாய்ப்புள்ளது.