Saturday 24 January 2015

பிசாசு

 ஒரு இயக்குனரின் வீச்சு படத்தின் வேர்வரை ஊடுருவுதல் என்பது நல்லதாகவோ அல்லது மொக்கையாகவோ முடிந்துவிடலாம்.உதாரணமாக டி.ஆர் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் டி.ஆர் போலவே பேசுவது, பார்த்திபன் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பார்த்திபன் போலவே வார்த்தைஜாலம்(பெரும்பாலும் இது மிகையாகி 'போதும்டா சாமி' என்று பார்வையாளனை தினறடிப்பதாகவே இருந்துள்ளது.உதாரணம் கதை,திரைக்கதை,வ,இ...படம்).

                  மிஷ்கின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒரு புத்தகம் பற்றியோ உலக சினிமா பற்றியோ(யுத்தம் செய்'ல் சேரன் ராஷமன் படம் பற்றி பேசுதல்,இதே படத்தில் எக்ஸ்சார்சிஸ்ட் படம் பற்றிய காட்சிகள்) பேசிக்கொள்வது,தத்துவம் பேசும் கதாபாத்திரம்(இப்படத்தில் பணம் ஏய்க்கும் அந்த இளைஞன்)அல்லது காட்சிகளூடே ஒரு புத்தகத்தை காட்டுதல்(யுத்தம் செய்) இவைகளை ஒலக விமர்சகர்கள் கடுமையாக விமர்சிப்பதை காணமுடிகிறது."சாமானியர்கள் இப்படியா பேசிக்கொள்வார்கள்?" என்று கேட்கிறார்கள்.என்னைப்பொறுத்தளவில் இது ஒரு குறையாக தெரிந்ததில்லை.காரணம் இயல்பு மனிதன் விவாதிப்பதெல்லாம் அடுத்தவன் வூட்டு சுவத்துக்கு அப்பால் என்ன நடக்குது?/டாஸ்மாக் பற்றி/நிஜவாழ்வை விட பன்மடங்கு ஊதி பெருக்கப்பட்ட ஒரு நடிகனின் இமேஜ் பற்றி/நடிகனின் அரசியல் பிரவேசம் பற்றி...blah..blah...ஸ்ஸப்பா...இந்த கருமத்தைத்தானே தினம் நாம் வாழ்வில் கேட்டுக்கொண்டிருக்கிறோம்?அதேநேரத்தில் படத்தில் வருவது போன்ற மனிதர்களே நிஜவாழ்வில் இல்லை என்று சொல்லமுடியாது அல்லவா!
                     ஒரு நல்லவன்/ள் இறந்தால் அவன்/ள்(அது?) பிசாசாக அலைந்தாலும் நல்ல தன்மையக்கொண்டதாகவே இருக்கும் என்பதே கரு.உடனே பிசாசுக்கு சிந்திக்க தெரியுமா?என்று கேட்கிறார்கள்.இவர்கள்தான் ஆங்கில பேய் படங்களை எதிர்கேள்வி கேட்காமல் பார்த்தவர்கள்.சரி படத்துக்கு வருவோம்.
                    படத்தின் குறைகளை முதலில் பார்ப்போம்.
       மிஷ்கின் படமென்றாலே அனைத்து(அல்லது பிரதான கேரக்டர் வரையிலாவது) abrupt ஆக ஜெர்க் அடிப்பது,விழிக்காமல் இமைப்பது,தலைகுனிந்து நிற்பது(இது குரசோவா பாணி) ,ஒருத்தனை லைன் கட்டி ஒவ்வொருத்தராக வந்து அடிப்பது போன்றவைகளைக்கூறலாம்(இசை பற்றி பிறகு பார்ப்போம்).Autuer என்ற சொல்லாடல்படி மேற்சொன்னவை மிஷ்கினின் முத்திரையை பறைசாற்றுவதாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் சில சமயங்களில் அது மிகையாகிப்போவதை காணமுடிகிறது.
         உதாரணமாக சுரங்கப்பாதையில் அந்தச்சிறுமி(அட்டகாசமான கண்டுபிடிப்பு!) பார்வையற்றவர்களை அழைத்துச்செளும் காட்சியில் எல்லாரும் லைனில் நின்றுவிட்டு ஏதோ ஒரு cue க்காக காத்திருந்து பிறகு நகர்வதாக வரும் காட்சி.அக்காட்சி துவங்கும்போதே அவர்கள் நகர்வதாக காட்டக்கூடாதா?(எனக்கு சினிமா கோட்பாடுகள் தெரியாது.எனக்கு தோன்றியதை கேட்கிறேன்).

          பிரதான கதாபாத்திரத்தின் பெயர் ஒற்றைக்கண் சிவராசனா?என்று கேட்க தோன்றுகிறது.சரி மாடர்ன் யூத்துங்க எந்த ஸ்டைலை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அதை தவிர்த்துவிடலாம்.
         விளிம்புநிலை மக்களின் வாழ்வை படமாக்குதல் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் "இந்தப்படத்தில் இந்தந்த காட்சிகளில் அவர்கள் இடம்பெறுவார்கள்" என்று வலிந்து திணிப்பது அவர்களுக்கு செய்யும் நியாயமாக இருக்காது.இந்தப்படத்திலேயே அந்தச்சிறுமி&பார்வையற்ற நபர்கள் மிஷிகினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை நினைவுபடுத்துகிறார்கள்.சப்வேயில் சித்தார்த்தை பீர் பாட்டிலால் கொலைசெய்யவரும் அந்த நபர் பிசாசால் கொலை செய்யப்படுவதற்காக மட்டுமே அந்த சப்வே காட்சிகள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.

       மற்றொரு குறை ராதாரவி.அவர் நல்ல நடிகர் என்றாலும் பல காட்சிகளில் ஏதோ ஒட்டாமல் நடித்தது போலவே எனக்கு தோன்றியது.அவரைவிட சித்தார்த்தாக நடித்த நாகா நன்றாக பொருந்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
          இப்போது இசை பற்றி.ஒரு பாடலை/பின்னணி  இசைத்துணுக்கை கேட்கும்போதே இன்னார்தான் இசையமைத்தது என்று சொல்லிவிடலாம்(தற்காலத்தில் லூப்பில் போடுபவர்களை சொல்லல).ஆனால் இவர்  படத்தின் இசையக்கேட்டால் "இது மிஷ்கின் பட இசை" என்று சொல்லுமளவு அவர் எந்த இசையமைப்பாளருடன் பணியாற்றினாலும் தனது பாணி என்ற ஒன்றில் பொருந்துவதாக இருக்குமாறு சரியாக வேலை வாங்குகிறார்.கண்டிப்பாக இதை பாராட்ட வேண்டும்.குறிப்பாக அவர் படங்களில் வயலின்(எனதபிமான இசைக்கருவி) பிரதானமான ஒன்றாகவே இருந்துவந்துள்ளது(அஞ்சாதே துவங்கி).அது இசையராஜாவாக இருந்தாலும் கே'யாக இருந்தாலும் அரோல் கொரேலியாக இருந்தாலும் தன்  மனதில் தோன்றும் பாணியில் அவர்களை இசையமைக்க வைக்கிறார்.பிரதானமாக Bach'ன் பாணி?(என்று எனக்கு தோன்றுகிறது.தவறிருந்தால் மன்னிக்கவும்).அந்த சப்வேயில் வரும் பாடல், அந்த வயலின் நிரவலிசை, பாடிய அந்த பாடகியின் குரல்(என்ன ஒரு உணர்வு!),அதற்கு வாயசைக்கும் சிறுமி நான்கும்  அட்டகாசமாய் ஒரு புள்ளியில் சேர்வதை உணரமுடிந்தது.உயிரை உருக்கும் அப்பாடல்:

           பேயோட்டும் பெண் சம்மந்தப்பட்ட காட்சிகள் இழையோடும் நகைச்சுவை.  பேயோட்ட வெவ்வேறு மதத்தினர் வந்து சடங்குகள் செய்வதை ஒருவித பகடியாகவே காட்டியது நமட்டுச்சிரிப்பை வரவழைக்கிறது.  சவரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் இடையில் எழுந்துவந்தாலும் முழுச்சவரம் செய்த முகத்தோடவே இருக்கும் வழமைக்கு மாறாக பாதி தாடியோடு அவர் வந்தது நல்ல கண்டின்யூவிட்டி.நிறக்குருடு என்ற ஒரு புது விஷயத்தை மகா திருப்பத்தை  கொண்டுவர பயன்படுத்திதை பாராட்டலாம்.நாயகியின் தொப்புள்+மார்பகங்கள் நிலையான செட் பிராபர்டியாக இருக்கும் தமிழ் சினிமாவில் வெறும் பத்து நிமிடத்துக்கு மட்டுமே ஒரு பெண்ணை பயன்படுத்தியது புதுமை.
.
பி.கு: படங்களைப்பற்றி நான் எழுதுவதை விமர்சனம் என்று நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்.படம் பார்க்கும்போது தோன்றும் எண்ண ஓட்டங்களைப்பதிவு செய்வதே என் வழக்கம்.அந்த வகையிலேயே இதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த சீன்ல திரைக்கதை செம வீக்கா இருப்பது உன் கண்ணுக்கு தெரியலியா?ஒளிப்பதிவு எட்டாவது சீனில் துருத்திக்கொண்டிருந்ததே?அது உனக்கு தெரியலியா என்றெல்லாம் அக்கப்போர் செய்யப்படாது.ஏன்னா அதைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது!
         

Tuesday 13 January 2015

கரைந்த நிழல்கள்



  நாட்டின் மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் சினிமாவின் வீச்சு அதிகம்.கடந்த ஐம்பதாண்டு அரசியலை தீர்மானித்தது சினிமாத்துறையை சார்ந்தவர்கள்தான்.இதன் காரணமாகவே இன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களும் ஆட்சியை பிடிக்க முயலும் அவலங்கள் தெரிந்ததே.அதைப்பற்றி பேசினால் திசை திரும்பிவிடும்.
              இன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு சினிமா மோகம் உண்டு.சினிமா பார்க்கும் மோகம் தெரிந்ததே.நான் சொல்வது சினிமாவில் சேர்ந்து சாதித்து பெரியாளாக புகழ் பெற வேண்டும் என்பதற்காகவே ஊரை விட்டு படிப்பை விட்டு குடும்பத்தை விட்டு கோடம்பாக்கத்தில் பத்துக்கு பத்து அறைகளில் இருபது பேர் போராடி கொண்டிருப்பதைத்தான்.இவை அனைத்தும் சினிமாவில் பேர் புகழ் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே.
             இந்த கரைந்த நிழல்கள் நாவல் சினிமா துறையை சர்க்கரை பூச்சு,பகட்டுகள் இல்லாமல் அப்பட்டமாக காட்டுகிறது.

             இந்த நாவலை பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டும் .
முதலில் இது வழக்கமான நாவல் இல்லை.அதாவது ஒரு துவக்கம் .அங்கே நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே அறிமுகம் செய்யப்படும்.பிறகு ஒருவித linear வழியில் துவக்கம், இடையில் பல்வேறு திருப்பங்கள், முடிச்சுக்கள் பிறகு அவை தீர்ந்து ஒரு முடிவு.சில நாவல்கள் முடிவில்லாமல் தொக்கி நிற்கும்.
        ஆனால் இந்த நாவல் மேற்குறிப்பிட்ட அந்த டெம்ப்ளேட்டை உடைத்தெறிகிறது.முழு நாவலுமே எடிட் செய்யப்படாத ஒரு திரைப்படம் போல ஒருவித jumble போல கலைந்து கிடக்கிறது(முன்னுரையில் "நாவல் புரியவில்லை" என்று பலர் சொன்னதாக சொல்கிறார் அசோகமித்திரன்.காரணம் இதுவாக இருக்கலாம்).வாசித்து முடித்ததும் நாமாக அவைகளை ஆங்காங்கே பொருத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.பொருத்தி பார்க்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.Raymond Chandler எழுத்து போல கதை முடிந்ததா?முடிச்சுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைவிட கதாபாத்திரங்கள் தங்களுக்குள் interact செய்துகொள்ளும் விதம் ,கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள்,அவர்களின் பிரச்சனைகள், அதை தீர்க்க முடியாமல் அவர்கள் மனதில் எழும் ஆற்றாமை அனைத்துமே வாசகனை உச்சு கொட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லாமல்  ஒருவித சமநிலையில் ஆசிரியர் இதை நம் முன் வைத்துள்ளார்.அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது அவரவர் அனுபவங்களைப்பொறுத்த்து!
         உதாரணமாக பட தயாரிப்பாளர் ரெட்டியார் படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டார்.கொஞ்சமே பாக்கி.நடிகை ஷூட்டிங் வர மறுக்க அங்கே சென்று இவர் சத்தம் போடுகிறார்.நடிகை மயக்கம் போட்டு விழுகிறாள்.அத்தோடு ரெட்டியார் segment முடிந்தது.ரெட்டியாருக்கு என்னானது என்பதை 2 வருடம் கழித்து வேறொரு தயாரிப்பாளர் அந்த முடிக்காத படத்தை தூசு தட்டி பார்க்கும் போது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.கடன் நெருக்கி மூழ்கிப்போனார்
         ஒரு  நாவலின் எழுத்துநடை என்பது அந்த எழுத்தாளரை காட்டிகொடுத்து விடும்.இந்த எழுத்தாளர் இப்படித்தான் எழுதுவார்.வார்த்தை பிரயோகம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கலாம்.இந்த நாவல் அதையும் நொறுக்கி விட்டது.அசோகமித்திரன் அவர்களின் எழுத்து நடை என்பது மென்மையானது என்றுதான் பலர் நினைக்கிறார்கள் . உதாரணமாக ஒற்றைவிரல் டைப் ரைட்டர் கதையை படித்தால் தெரியும்.இந்த நாவல் அத்தகைய மென்மையான மொழிநடையின் சாயல் துளியும் தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.

          இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால் நாவலில் ஆசிரியர் கதை சொல்லவில்லை.அவர் வசனங்களை எழுதவில்லை.அந்தந்த கதாபாத்திரங்களை  தங்களுக்குள் interact செய்ய வைத்துவிட்டார். குவென்டின் டரண்டினோ ஒரு பேட்டியில்எனது படத்திற்கு நான் வசனங்கள் எழுதுவதில்லை.படத்தில் வரும் கதாபாத்திரங்களே அதை எழுதுகிறார்கள்” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.இதைத்தான் அசோகமித்திரன் செய்துள்ளார்.தவறாமல் வாசிக்கவேண்டிய ஒரு அற்புத படைப்பு.