Saturday 9 December 2023

குரோதம் & நான் சிகப்பு மனிதன்

 

இரண்டு படங்களுமே டெத் விஷ் படத்தின் காப்பி தான்.சமீபத்தில் டெத் விஷ் ஐந்து பாகங்களும் ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக பார்த்தபோது குரோதம் படம் நினைவுக்கு வந்தது.அதை மீண்டும் பார்த்தோம்.நான் சிகப்பு மனிதன் எப்போது பார்த்தோம் என்று நினைவிலில்லை.


 

       ஒருவகையில் மூலப்படத்திற்கு நெருக்கமாக இருப்பது குரோதம் படம் தான்.டெத் விஷ் போலவே இதிலும் நாயகன் ஒரு ஆர்க்கிடெக்ட்.டெத் விஷ் படத்தில்  பாலியல் பலாத்காரத்தில்  மனைவி இறந்துவிட,பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மகளை  தனது மருமகனுடன் மன சிதைவுக்கான சிகிச்சைக்கு வேறொரு ஊருக்கு அனுப்பி வைப்பார்.


 

     குரோதம் மற்றும் நான் சிகப்பு மனிதன் படங்களில் இளம் நாயகன் என்பதால் தங்கை கதாபாத்திரம் மட்டும்.

குரோதம் படத்தில் தங்கை நல்லெண்ணெய் சித்ரா மற்றும் மச்சான் (மாஸ்டர்) ஶ்ரீதர் ஆகியோரை வேறொரு ஊருக்கு அனுப்பி வைக்கிறார் பிரேம்.

     அதன் பிறகு தனது உறவினர் தங்கவேலுவை வேலை சம்மந்தமாக பார்க்க செல்கிறார்.அவர் ஒரு துப்பாக்கியை பரிசாக கொடுக்க அதை வைத்து சமூக விரோதிகளை காலி செய்கிறார்.இந்த வகையில் இது டெத் விஷ் படத்தை ஒட்டியே நகர்கிறது.நான் சிகப்பு மனிதனில் இப்படி வந்தது போல தெரியவில்லை.


 

     மேலும் தங்கவேலு& லூஸ் மோகன் கூட்டணி வித்தியாசமாக இருந்தது.”சிரிப்ப சலிச்சு சலிச்சு அவனே முழுங்குறான் “ என்று லூஸ் மோகனை பார்த்து தங்கவேலு அடிக்கும் கமன்ட் அட்டகாசம் :D

        தங்கை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சியை படம் நெடுக காட்டுவார் எஸ்.ஏ.சி.ஆனால் குரோதம் படத்தில் மூலப்படம் போலவே புகைப்படத்தை மட்டும் பார்த்து வருத்தமடைவதாக காட்டி இருப்பார்கள்.

     பாக்யராஜ் கதாபாத்திரம் என்ற எக்ஸ்டிரா ஃபிட்டிங் குரோதமில் இல்லை.

“காந்தி தேசமே காவல் இல்லையா?” என்று பொது மேடையில் ஆவேசமாக பாடி தன்னைத்தானே காட்டிக்கொடுக்கும் அளவுக்கு பிரேம் செல்வதில்லை.ரொம்பவும் கமுக்கமாகவே சமூக விரோதிகளை தீர்த்து கட்டுகிறார்.

      அந்த வகையில் குரோதம் ஒரு subtle ஆன பிரதி.நான் சிகப்பு மனிதன் மசாலா கொஞ்சம் தூக்கலாக எடுக்கப்பட்ட பிரதி.

    Posh ஆன நாயகன் கதாபாத்திரத்தில் பிரேம் சரியாக பொருந்துகிறார்.அவரின் நடை உடை பாவனை பேசும் விதம் எல்லாமே அதை பிரதிபலிக்கிறது.இந்தப்படத்தில் மட்டுமல்ல குரோதம் 2 அசோகா படங்களிலும் அதை காணலாம்.குரோதம் 2 படமும் இதே போல தங்கையை கொன்றவர்களை ஹை டெக்காக போட்டு தள்ளுவது தான் கதை.அதில் கொஞ்சம் டூயட் பாடல்கள்,கதையோடு பொருந்தாத செந்தில் காமெடி என்று  ஊளை சதை அதிகம். குரோதமில் அது இல்லை.

 

குரோதம் படத்தில் கொடுமையான ஒரே விஷயம் என்றால் அது பிரேமின்  மீசை.சார்ல்ஸ் பிரான்சன் மீசை கொஞ்சம் சீனத்தனமாக இருக்கும்.அதுபோலவே இருக்க வேண்டும் என்று பிரேமின் மூக்குக்கு கீழான மீசையை வழித்து விட்டுள்ளார்கள். பாக்க கொடுமையா இருக்கு..

     மேலும் இன்றைய woke கும்பல் இந்த கதையின் நாயகன் செய்தது தவறு அது இதுவென்று பொங்கி எழுவார்கள்! படத்தை நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம் என்பதற்கான அடையாள குறியீடு அதுவே!

      

Friday 1 December 2023

Leo மற்றும் A History of Violence

 

சமகால தமிழ்ப்படங்களில் லோகேஷ் படங்களை பார்ப்பதுண்டு.காரணம் அவர் படங்களில் wokism,புது மோஸ்தர் பெண்ணியம், நசுக்கி



ட்டான் கதை, மாவோயிஸ பஜனை,பொதுவுடைமை பிதற்றல்,ஏழ்மையை விதந்தோதுதல் ஓவர் சென்டிமென்ட் போன்ற டார்ச்சர் வஸ்துக்கள் இருக்காது.போதை வஸ்துக்கள் இருப்பது பற்றி நமக்கு கவலையில்லை.படத்தை முழுமையாக பார்க்க முடிகிறதா?இல்லையா? என்பதே ஒரு வணிக சினிமாவுக்கான நமது வரைமுறை.அதில் அவர் படங்கள் தேறுகின்றன !

 

        இந்தப்படம் LCU வை சார்ந்த படமாக சொல்லப்படுகிறது.ஆனால் கைதி மற்றும் விக்ரம் படங்களோடு இணைக்கும் வகையிலான வலுவான காட்சிகள் எதுவுமில்லை.அந்த போலீசு+ ஆ …ஊ… மாயா ஆகியோர் தான் இணைப்பு சங்கிலிகள் .கடைசியில் காசர் நா தழுதழுக்க குரல் கொடுக்கிறார்!அவ்வளவே.

மாஸ்டர் படத்தை பொறுத்தளவில் பெரும் குழப்பம்.விஜய் சென்னை கல்லூரியில் டப்பாங்குத்த்து ஆடுகிறார்.விஜய் சேதுபதி தென் மாவட்டத்தில் கொலைகள் செய்கிறார்.பிறகு எங்கு இருக்கிறது என்றே தெரியாத ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு விஜயை ஏன் அனுப்புகிறார்கள்?ஒரே குழப்பமோ குழப்பம்.

        கைதி படம் நன்றாக இருந்தாலும் அந்த மகள் சென்டிமென்ட் ரொம்ப ஓவராக போனது+ அந்த லாரி கிளீனர் பையன் பனை மட்டையில் எதோ பெய்த  மாதிரி ஓயாமல் பேசிக்கொண்டே வந்தது(குறிப்பாக சமகால அரசியல் விஷயங்களை கமன்ட் அடிக்கிறேன் பேர்வழி என்று அடித்த மொக்கை கமண்டுகள்) எரிச்சலை உண்டாக்கியது.விக்ரம் படத்தில் திடீரென்று காசர் சமூகத்துக்கே தான் தான் பேராசிரியர் எனும் தொனியில் லெக்சர் அடிச்ச காட்சிகள் எரிச்சலை உண்டு பண்ணியது+கடைசியில் முகத்தை “நடிக்கிறேன் பாருடா” என்ற பாவனையில் கூலிங்கிலாஸ் அணிந்த வண்ணம் விட்ட லுக்கு (இந்த மிகையான முக பாவனையை வைத்தே ரோலக்ஸ் கூட்டத்தில் ஒரு கருப்பாடு இருப்பதை உடனே  கண்டுபிடித்து இருக்கலாம்!பயிற்சி பத்தாது).

         இந்த படத்தை பொறுத்தளவில் முதல் பாதி பார்க்கும்படியாக இருந்தது.முக்கிய காரணம் அந்த லொக்கேஷன் .ஹிமாச்சல் பிரதேச அழகை படத்துக்கு தேவைப்படுகிறார் போல பயன்படுத்தியது பாராட்டுக்கு உரியது.ஆனால் இதே டேராடூன்/டார்ஜீலிங் ஆகிய லொக்கேஷன் அற்புதங்களை பேட்ட & கெத்து படத்தில் மகா மொக்கையாக வீணடித்து இருந்தார்கள்.

         A History of Violence படத்தின் பிரதி தான் இந்தப்படம்.அதில் சந்தேகம் வேண்டாம்.ஆனால் அதில் சில பட்டி டின்கரிங் செய்துள்ளார்கள் . சிலது நன்றாக வந்துள்ளது.சிலது சரியில்லை.

      உதாரணமாக அந்த காபி ஷாப் சண்டைக்காட்சி நன்றாக உள்ளது.தனியாக பி ஜி எம் பயன்படுத்தாமல் ஏற்கெனவே ஓரளவுக்கு பிரபலமான பாடல்களை பயன்படுத்தும் யுக்தி சாமர்த்தியமான முடிவு.விக்ரம் படத்தில் அய்யய்யோ யம்மா யம்மா பாடல் நமக்கு அந்தளவு மனதில் பதியவில்லை.ஆனால் இந்தப்படத்தில் பசும்பொன் பாடல் குறிப்பாக அந்த இடைநிரவலில் வரும் புல்லாங்குழல்& ஷெனாய்(??) இசை அப்படியே காட்சியோடு(மிஷ்கின் நடு மண்டையில் குண்டு :D) பதிந்து விட்டது.இதுவே ஆங்கில மூலத்தில் அதே காட்சி சப்பேன்று இருந்தது!

          பிற சண்டைக்காட்சிகள் அந்தளவு இல்லை .லியோ காற்றில் பறக்கும் காட்சிகளில் அழிக்கப்பட்ட ரோப் நம் கண்ணுக்கு வழக்கம் போல தெரிந்தது.பைக்கில் விஜய் செல்லும் காட்சி முழுக்க கிரீன் மேட் தான் தெரிந்தது.அவ்வளவு போலி!இரட்டையர்கள் அன்பறிவ் இது மாதிரியான ரோப்& கிரீன் மேட் சண்டைக்காட்சிகள் அமைப்பதை குறைத்துக்கொண்டால் நலம்!

         படத்தின் பலகீனம் இரண்டாம் பாதி.திடீரென்று எதோ இந்திரா சௌந்தரராஜன் எழுதிய கதையை படிக்கும் உணர்வு!

     மேலும் “நீதான் லியோன்னு ஒத்துக்கோ” என்று தொடர்ந்து சஞ்சு பாபா தொடங்கி கடைமட்ட அடியாட்கள் வரை மிரட்டுவது எதற்கு என்றே புரியவில்லை! லியோவை கொல்லவா?அப்படி என்றால் லியோ குடும்பத்தை தாக்க வந்த ஒருவனை கடை வாசலில் சஞ்சு தூக்கில் தொங்கி விடுவது ஏன்?

     ஒருவேளை எதோ ஒரு விலைமதிப்புள்ள பொக்கிஷம் ஒரு ரகசிய இடத்தில் உள்ளது.அது லியோவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதாக இருந்தால் கூட இவர்கள் லியோவை தேடுவதிலும் லியோ என்று ஒத்துக்கொள் என்று மிரட்டுவதில் ஒரு நம்பகத்தன்மை இருந்திருக்க கூடும்.

மேலும் ஆங்கில படத்தில் ஜோயி அண்ணன் கோஷ்டிக்கு பெரும் சேதாரத்தை உண்டாக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறான்.ஆனால் தங்கையை பறிகொடுத்த லியோ அதற்கு பழி வாங்காமல் அமைதி காத்தது ஏன் என்ற குழப்பமும் இருக்கு!

    அசல் ஆங்கில படத்தில் அண்ணன் ரிச்சி தம்பி ஜோயிய போட்டு தள்ளத்தான் அழைக்கிறான் என்பது பார்த்த மாத்திரத்தில் புரிய வைத்து விடுகிறார்கள்.ஆனால் இதில் எதற்கு லியோவை தேடுகிறார்கள்? என்றே புரியவில்லை.சஞ்சு லியோ குடும்பத்தை பார்த்து கண் கலங்கிய காட்சி மேலும் குழப்பத்தை தான் உண்டாக்குகிறது.

     விஜய் கெட்டப் பற்றி சொல்ல வேண்டும்.மெய் சிலிர்த்த சேவல் போல ஒரு ஹேர்ஸ்டைல் .பெயிண்ட் அடிக்கும் பிரஷ் போல தாடி.இந்த கெட்டப்பை பிளாஷ் பேக் லியோவுக்கு வைத்து அந்த திருத்தமான லுக்கை கொஞ்சம் வெள்ளை அடித்து பார்த்திபனுக்கு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.குடும்பஸ்தன் லுக் இது அல்ல!வியாதியஸ்தன் மாதிரி இருக்கு! 

      விஜய்க்கு மகள் என்றதும் நமக்கு அடிவயிறு கலங்கியது.தெறி என்ற படத்தை பார்க்காவிட்டாலும் அதில் உள்ள ஓவர் மகள் சென்டிமென்ட் பற்றி தெரியும் என்பதால் இந்த பீதி!ஆனால் இதில் சென்டிமென்ட் அளவாக பயன்படுத்திய விதத்தில் லோகேஷ் பாராட்டை பெறுகிறார் .மகனை பார்த்து “நீ நல்லா ஆப்படிச்சு…சாரி…நல்லா படிச்சு பெரிய டாக்குடர் ஆகோனும் “ என்பது மாதிரியான காட்சிகள் இல்லாதது பெரும் ஆறுதல்.கிங்ஸ் லெவன் சம்மந்தமாக மகன் சத்தியம் வாங்கும் காட்சி நன்றாக இருந்தது. : D (அதான!நல்ல விஷயம் எதுவும் புடிக்காது.ஆனா இது மட்டும்….- கும்மாங்கோ)

        ஆங்கில படத்தில் ஜோயி தான் டாம் என்பது குடும்பத்திற்கு தெரியும்.ஆனால் இதில் மகனுக்கு மட்டும் தெரியும் என்பதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.மேலும் இங்கே ஆக்ஷன் படத்தின் மூலப்படமும் அப்படியே இருக்கும் என்று நினைத்தது தவறு.அது ஒரு slow burner படம்.ஆக்ஷன் காட்சிகள் அவ்வளவு கிடையாது.மேலும் அது ஒரு லோ பட்ஜெட் படமும் கூட.

    மேலும் விஜய் சமூக அக்கறை வசனங்கள்,கம்யூனிசம்,ஜி எஸ் டி அது இதுவென்று அறுக்காமல் இருந்ததே பெரிய ஆறுதல்!மேலும் விஜய் தன்னை தரை லோக்கலாக காட்டிக்கொள்ளும் காட்சிகள் இதில் இல்லை.சிறுவர்& பதின்ம வயது ரசிகர்களை உற்சாகப்படுத்த அங்க சேஷ்டைகள் எதுவும் செய்யவில்லை.யப்பாடா!

 

லோகேஷ் இதேபோல எந்த புதை மணலிலும் சிக்காமல் காட்சிகள் வசனங்கள் இருப்பதை பார்த்துக்கொள்ளுதல் நன்று.

     மேலும் லோகேஷ் எல்லா படத்திலும் போதைப்பொருட்களை மையமாக வைத்து கதையை நகர்த்துகிறார் என்பதொரு குற்றசாட்டு.எடுக்கும் எல்லா படத்திலும் நசுக்கிட்டான் என்று கதையை நகர்த்தும் இயக்குனர்களை  விமர்சிக்க தவறியவர்கள் இதை மட்டும் விமர்சிப்பது ஏன்?