Friday 8 November 2013

விஜயகாந்த் படக்காட்சிகளை சுட்ட கமல்& அஜித் படங்கள்

இந்த பதிவை  இந்தாண்டின் முதல் பாதியிலேயே  எழுதிவிட நினைத்தேன்...வழக்கம்போல சோம்பேறித்தனம் அமுக்க இப்போதாவது எழுத முடிந்ததே என்று சின்ன ஆறுதல்.
முதலில் ஒரு விஜயகாந்த் படக்காட்சியை விளக்குகிறேன்.அதைப்படிக்கும்போதே அது எந்த படத்தில் வந்தது என்று தெரிந்துவிடும் 
                            >>விஜயகாந்த் கமலக்கண்ணன் என்ற பேரில் ஒரு கோவிலில் யானைப்பாகனாக வாழ்ந்து வருகிறார்....அவருடன் மணிவண்ணன் இருக்கிறார்..அவ்வப்போது விஜயகாந்த் எங்கோ காணாமல் போய்விடுகிறார்.எங்கே என்று தெரியவில்லை.சரி இது என்ன ரகசியம் என்று கண்டுபிடிக்க மணிவண்ணன் ஒரு நாள் விஜயகாந்தை ரகசியமாக பின் தொடர்கிறார்.அங்கே ஒரு இடத்தில் சென்று மணிவண்ணன் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்..காரணம் விஜயகாந்த் அங்கே ஒரு இஸ்லாமியர் போல தொழுகை செய்து கொண்டிருக்கிறார்.உடனே மணிவண்ணன் அங்கே சென்று "நீ யாருடா? உண்மையை சொல்லு" என்றவுடன் "நான் கமலகண்ணன் இல்லை கமாலுதீன்" என்றவுடன் அதிர்கிறார் மணிவண்ணன்..நீள்கிறது பிளேஷ்பேக்.

                            >> தான் ஒரு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளதால் அதை நியாயப்படுத்த தன கணவன்(கமல்) விஸ்வநாத்துக்கும் அதே மாதிரி கள்ள உறவு ஏதேனும் இருந்தால் தன செய்கையை நியாயபடுத்தி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை வைத்து கமலை கண்காணிக்க சொல்ல அவர் எங்கோ ஒரு மறைவுடன் சென்று இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்த ...சில காட்சிகளுக்கு பிறகு "நான்  விஸ்வநாத் இல்லை விஸாம் அஹமத் காஷ்மீரி" என்கிறார் ...பிறகு ப்ளேஷ்பேக்...ஒற்றுமை ஏதேனும் தெரிகிறதா?
முதல் படம் கள்ளழகர்(1999) இரண்டாம் படம் உங்களுக்கே தெரியும் விஸ்வரூபம்.
******************************************************************************
படம் துவங்கியவுடன் ஹீரோ வெடிகுண்டு வைத்து கொலை செய்தல்  அயன் பாக்சை வைத்து மிரட்டுதல் போன்ற விஷயங்களை செய்கிறார்..படம் பார்ப்பவர்கள் "இவர் வில்லனோ?" என்று நினைக்க  அவரை போலீஸ் கொண்டுபோய் சித்ரவதை செய்கிறது...அதெல்லாம் ஹீரோவை ஒன்றுமே   செய்யாத நிலையில் ப்ளேஷ்பேக்..... பிறகு பார்த்தால் ஹீரோவே ஒரு காவல்துறை அதிகாரி  சொல்லப்படுகிறது...இந்த காட்சி ஆரம்பம் பட காட்சி...நரசிம்மா (2001) என்ற படத்தையும்  பாருங்கள்..ஒற்றுமை தெரிகிறதா?

No comments:

Post a Comment