Saturday 5 November 2016

அப்ஸரா-சுஜாதா

My only certainty in life is that one day i shall die இது ராஜா,  மணியிடம்  சொன்னது.

                         யாராவது  கொஞ்சம்  அநாகரீகமாகவோ  எல்லைமீறியோ  நடந்துகொண்டால்/நடக்க்முற்பட்டால்  உடனே  நாம்  சொல்வது  "படிச்சவன்தான  நீ?".இது  எதுக்கு  சொல்றாங்கன்னு  எனக்கு  இன்றுவரை  விளங்கியதில்லை.இங்கே  கல்வி  என்றபேரில்  என்ன  சொல்லித்தரப்படுகிறது?மனனம்  செய்து பரிட்சையில்  வாந்தி  எடுப்பதைத்தாண்டி?அப்படிப்பட்ட  குமாஸ்தா  கல்வியை  படிச்சவன் ,படிக்காதவனிடமிருந்து எதில்  வேறுபடுவான்?
              ஒருவனின்  நடத்தையை ,எண்ண ஓட்டங்களை ,செயல்களை  தீர்மானிப்பது பெரும்பாலும்  அவன்  வளரும் சூழல்,நண்பர்கள்,பணிச்சூழல் ஆகியவைதான்.
            வாத்தியாரின்  இந்தக்கதை சாதாரணமாக  ஒன்றாக  தெரியலாம்.மனம்  பிரழ்ன்ற ஒருவன்  செய்யும்  தொடர்கொலைகள்.ஆனால்  அதில் வரும்  சிறு சிறு கதாபாத்திரங்கள்கூட  தனித்தன்மையோடு ஆசை  கனவுகளோடு இருப்பதாக வரும்.அதான்  வாத்தியார்  ஸ்டைல்.குற்றம்  செய்பவனின் பார்வையில்  திரைப்படங்கள்  எடுப்பது தமிழில்  இப்போது  பிரளமானதாக  இருக்கலாம்!  ஆனால்  அதை  கதைகளில் முன்பே  காட்டியவர் அவரே!

             உதாரணமாக  சரஸ்வதி பாயின்(பாய்  என்ன பாய்?-ராஜா)  இரண்டு  மகள்கள்.பத்து  வயதிருக்கும்.ராகினி  தாரிணி.அவர்கள்  செய்தித்தாளில் வந்துள்ள  புரியாத   தமிழ் படக்கதை(அவர்கள்  படிப்பது  பெங்களூரு கான்வென்டில் என்பதால்  தமிழ்  வாசிக்க முடியாது!)யை  தாயிடம்காட்டி  விளக்கம்  கேட்பதாக  ஒரு  இடம்  வரும்.
மேலும் ரிஷி கபூரின்  வெறியையாக  வரும்  பிரேமா(Rishi is fab yaar-பிரேமா),பார்க்கில்  உள்ள மன்னனின்  சிலையை  பார்த்து  "Hello King" சொல்லும்  அருணா  என அந்தளவு  நுட்பமாக கதாபாத்திரங்களின்  மன ஓட்டங்களை  ரசனைகளை  எண்ணங்களை  பதிவு  செய்திருப்பார்!

              அதேபோல  சகோதரிகளான  சகுந்தலா  அருணா.சகுந்தலா  கருப்பாக  ஒல்லியாக  அழகற்று இருக்கிறாள்.அருணாவோ அனைவரையும்  திரும்பி பார்க்கவைக்கும்  அழகு.சகுந்தலாவை  பெண்  பார்க்க  வந்த  பலர்  அருணாவை கேட்பதால் அவளை  லைப்ரரிக்கு  அனுப்புகிறாள்  அவர்களது  தாய்.அப்போதுதான்  பார்க்கில்  அவள்  கொல்லப்படுகிறாள்.
               இறந்துகொண்டிருக்கும் அருணாவின்  கடைசி  நிமிடங்கள் விவரிக்கப்படும்  இடம் மறக்க முடியாத  ஒன்று.
                அதற்குள்  தன்னை எது  எந்த  திசையில்  இருந்து  தாக்கியது  என  அருணாவுக்கு  தெரியவில்லை.அந்த  கூர்மையான  ஆயுதம் வலப்பக்கத் தோள் எழும்பருகில்  நுழைந்து  பற்பல  ரத்த  குழாய்களையும்  நரம்புகளையும்  துண்டித்து அங்குலக்கனக்கில்  உள்ளே  இறங்க  குபுக்  என்று  ரத்தம் போங்க அருணா  வாய்  திறந்து  காற்று  காற்று  என  திணறினாள்......அப்படியே  வாய்  திறந்துகொண்டு  விழுந்தாள்.அவள்  கைகள்  அவன்  சட்டையை  பற்றின,துவண்டன.அவன்  மேல்  சரிந்து  கீழே விழுந்தாள்.அவன்  பூட்ஸ்  தெரிந்தது.செகண்டுகள் ஜென்ம  ஜென்மங்களாக  விரிவடைந்தன-அருணாவுக்கு.ஏதோ  சொல்ல  வாயெடுக்க  ரத்தம்தான் வாயிலிருந்து   வந்தது.மெதுவாக  அந்த  சிவப்பு  ஓடை மண்ணில்  வழிவதையும்  வழிந்த  சுருக்கில் அது  உறிஞ்சப்படுவதையும் ஆர்வத்துடன்  பார்த்தாள்.தன் புடவை  மேல்  ரத்தத்தை  பார்த்தாள்..
.
.
பார்பராவின்  புத்தகத்திலிருந்து அந்த  செபாஸ்டியன்  என்ற  இளைஞன் ,'பார்த்துவா  லூசிந்தா!பார்த்துவா" என்று  அவளை  அணைத்து(வெட்கமாக இருந்தது) என் பெயர்  லூசிந்தா  இல்லை ,அருணா....அழைத்து  செல்ல  வந்தவன் அவளை  ஆக்கிரமித்துக்கொள்ள,இத்தனை  நாழிக்கு அவா  எல்லாரும்  பஜ்ஜி  சாப்பிட்டிடுண்டு  இருப்பா .பஜ்ஜிக்கு  உப்பு  போட்டேனா?நியாபகம் இல்லையே.புடவையில்  எவ்வளவு ரத்தம்?நாளைக்கு  ஸர்ஃபிலே போட்டு  ரெண்டு  மணி  நேரம்  ஊற வெச்சா  ரத்தக்கறை  எல்லாம்  போய்விடும் !எல்லாம்...எல்ல்ல்ல்ல்ல்...லாம். 
              தனக்கு  ஒழுக்கத்தை  போதித்த  தந்தை(கூன் போடாதே!பளார்) வீட்டு திண்ணையில்  மூணு  சீட்டு  விளையாடியதும்;  தாய்  வேறு  ஆண்களோடு  உறவு கொண்டு  அந்தக்காசில்  இவனை  படிக்கவைத்ததும்  ராஜாவின்  ஆழ்மனதில்  தனியா  வெறுப்பை ,சமூகத்தோடு  ஒன்ற மறுக்கும்  ஒரு  மனநிலையை கொடுத்துவிடுகிறது.அந்த  வெறியிலேயே  அவன்  படித்து  பெரிய  ப்ரோக்ராமர்  ஆகிறான்.

         இப்படி  சிறுவயது மனப்பிறழ்வை ஒருபுறம்   நல்வழிக்கு  பயன்படுத்தினாலும்  இன்னொருபுறம் அதே  அறிவை கொல்வதற்கும்   பயன்படுத்துகிறான்(நீட்ஷேவின் Thus Spake Zarathushtra புத்தகம் ராஜாவின்  ஆபீஸ்  ட்ராவில்  இருப்பதாக கதையில்  வருகிறது)
              மனப்பிறழ்வு  கொண்டவர்கள் கொலை  செய்யும்போது  முழு   பிரக்ஞையோடு கொல்திவதில்லை. 'கொல்வது   தாந்தான்'  என்ற  எண்ணமே  அவர்களுக்கு  இருப்பதில்லை.மேலும்  யாரை  கொல்லவேண்டும்  என்று அவர்களாக  தீர்மானிப்பதில்லை.They  leave it to chance!இதிலும்  அப்ஸரா  என்ற  கம்பெனி  நியான் பார்த்துத்தான்  அவனுக்கொரு  ஐடியா.அதன்படி  ப்ரோக்ராம்  எழுதுகிறான்.
                          அதாவது  கொலை  செய்வதும்  தானில்லை.யாரை  கொலை  செய்வது  என  தீர்மானிப்பதும் தானில்லை  என்ற  உணர்வே  அவர்களிடம் மிதமிஞ்சி  இருப்பதால் கொலை  செய்யும்போது   எவ்வித  பதட்டமும்  இருப்பதில்லை.கொன்றுவிட்டு  நிதானமாக  பார்க்கைவிட்டு  வெளியேற  முடிகிறது."இருட்டில் பந்துவிளையாட  வைக்காதீங்க  குழந்தையை"என்று  ஒரு  தாய்க்கு  அட்வைஸ்  பண்ணமுடிகிறது!அதே போல  கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வும்  அவர்களுக்கு  இருப்பதில்லை!"ஏன்  விபத்தில் பலர்  இறக்கிறார்களே?அதுபோலத்தானே  இதுவும்?"-இது  அவர்கள்  வாதம்!
           முதலில்  சொன்னதுபோல கதை  என்பது  வழக்கமான  ஒன்றுதான்.ஆனால்  அதை  சொல்லும்விதம்,அதில்தான்  இக்கதை மிளிர்கிறது.
            

2 comments:

Unknown said...

sujatha was a bafflig genius
i have heard from people that he had predicted the use of SMARTPHONES during EIGHTIES....sujatha abdul kalam could have lived for another twenty years atleast...

Vadakkupatti Raamsami said...

I Agree

Post a Comment