Friday 15 January 2021

கோலிவுட் ரவுண்டப் 5.0

 Pituitary warning: சிகரெட் பிடித்தல் உயிரை கொல்லும்.புடிக்காம இருந்தாலும் வேற எதாச்சும் காற்றில் பரவி கொல்லும்!

.
டுமீல்.....டிஷ்.......டமால்.....dispararle a la muerte...

 டப்.....டுப்....

...............

.Shoot...Shoot.....
.
அமேசான் அடர்ந்த காட்டின் நடுவே...
மம்பு  ஓடிக்கொண்டிருக்க பின்னால் அமேசான் வன பாதுகாப்புப்படை....
.
ஐயோ!இந்த குகீந்திரன் பேச்சை கேட்டது தப்பா போச்சே...
.
டுமீல்...
..பின்னாலிருந்து வந்த புல்லட் ஒன்று மம்புவின் முன் மண்டையின் கற்றை முடியை கழட்டிக்கொண்டு போகிறது....
.
போச்சா!இனி "அவரு" மாதிரி பேட்ச் விக் வச்சித்தான் நடிச்சாகணும்!ஏற்கெனவே அக்ரமை போட்டு  காஜராட்டைன்னு வச்சு செஞ்சதை பாத்தப்பவே நா உசார் ஆகியிருக்கணும்!இப்ப பாரு முன்னாடி க்ளார் அடிக்கும்படி ஆகிப்போச்சே.....
.
லோக்கல்ல அழகா என்னோட வீட்டு பாத்ரூம்ல  டீசருக்கான சீனை எடுக்கலாம்னு சொன்னதை வேணாம்னுட்டு அமேசான் காட்டில் அனகோண்டாவை உசுரோட கையில புடிக்குறமாதிரி காட்டுனாத்தான் த்ரில்லுன்னு சொன்ன அந்த டைரக்டர் எங்கடா....என்றபடி புதருக்குள் மறைந்து ஓடுகிறார்....
.
நாம் அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆனோம்.
.
******************************************************************************
அடுத்து அடுத்து சென்றது பல்பேட்டா ஷூட்டிங் ஸ்பாட்.... கொருக்குபேட்டை ஜிம்...

.
பஞ்சித்: ம்...அப்டிதான் மாம்ஸ்....உன்னும் வெறும் ஆயிரம் ஸ்குவாட்தான் மிச்சம்.....
.
 கார்யா: .....நுரை தள்ளியபடி......  "அய்யய்யோ.......ஜாலியா நொந்தானத்தோட காலேஜ் வாசல்ல கிரவுண்ட்நட்  போட்டுக்கிட்டு இருந்தவனை  இப்படி பெண்டு நிமித்துறியே மச்சி...இது நாயமா?


.
பஞ்சித்: இன்னா தல மெர்சல் ஆவாத பண்ணு.நெக்ஷ்ட்  இயர் கீட் எக்ஜாம்ல "நீ எத்தினி வாட்டி தண்டால் எட்த்த" ....அத்தான் கொஷின் ஆ வரப்போவுது...
.
கார்யா: ஆமா ஒரு சிங்கிள் க்வெஸ்டின்....அதுக்காக மொத்தமா ஆல்  பாடி பார்ட்ஸும் டேமேஜ் ஆகிடும் போலயே!....அய்யய்யோ என்று அலறியபடி மீண்டும் ஸ்க்வாட்ஸ்!
.


***********************************************************************************************************
அடுத்து நாம் சென்ற இடத்தில் தேய்ந்து போன ரெகார்டாக ஒரு வருடமாக  ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..

 

..லை....ப்.....இ....கர்ர்...ர்ர்ர்ரர்.....ஸ்....வெ....கர்ர்ர்ர்.....ரி....ஷா....ர்ர்ர்...ட்....ந....கர்ர்ர்ர்....ண்பா..........
.
கவுண்டர்: எந்த நேரத்துல வாய வச்சாங்களோ!ஒலகத்துல பாதி பேர் மேல டிக்கட் வாங்கிட்டான்....சரி இங்கேர்ந்து மொதல்ல ஜூட் விடுவோம்...
.
********************************************************************அடுத்து அஜய் கேதுபதி வீடு...கணசிங்கம் என்ற கிங்கள பெயர் தலைப்பை மாற்றக்கோரி வீட்டின் முன்பு நூறு பேர் மல்லாக்க படுத்து மறியல் செய்துகொண்டிருக்க இடையில் இருந்த கேப்பில் கால் வைத்து ஜம்ப் பண்ணி நாம் உள்ளே சென்றோம்....
.
அஜய் கேதுபதி முகமூடி அணிந்து நம்மை வரவேற்கிறார்...
.
கவுண்டர்: ...ண்ணா ......ஒரு டவுட்டு...
.
அ.கே: சொல்லுங்கஜி..
.
கவுண்டர்: போன வருசம் பாஸ்டர் ஆடியோ ரிலீஸ் பங்க்சன்ல ஒண்ணு சொன்னீங்களே நியாபகம் இருக்கா?
.
அ.கே:ஜி....சாரிஜி.....நியாபகமில்ல...
.
கவுண்டர் :(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒரு வாரத்துக்கு பத்து படம்னு கால்ஷீட் குடுத்துட்டு இருந்தா எப்படி நியாபகம் இருக்கும்....ஆ...அது வந்துங்ணா...."நம்ம மனசு சுத்தமா இருந்தா எதுக்கும் நாம பயப்பட வேண்டியதில்லைன்னு சொன்னீங்க.ஆனா நீங்க ஏனுங்ணா முகமூடி போட்டிருக்கீங்க?உங்க மனசு சுத்தமில்லையா?
.
அ.கே:...து...அது...வந்துஜி......
.
கவுண்டர்:க்கும்...தமிழ்நாட்ல மைக்கும் மேடையும் கெடச்சிட கூடாது!சகட்டுமேனிக்கு அடிச்சி விடவேண்டியது...என்ன ஏதுன்னு விளக்கம் கேட்டா பம்ம வேண்டியது!அவனவனுக்கு தெரிஞ்சத செய்ங்க!உனக்கு என்ன தெரியும்?
.
அ.கே:து....வந்து......
.
கவுண்டர்: கேக்கக்கூடாத கேள்விய கேட்டுட்டேன் போல!சரிங்ணா நீங்க வழக்கம் போல மேடைல மைக்க புடிச்சு ஆட்டையாம்பட்டி அரசியல்லேர்ந்து ஆப்ரிக்க அரசியல் வரைக்கும் சகட்டுமேனிக்கு அடிச்சி உடுங்க!இப்ப என்ன ஆளை உடுங்க!
.

*******************************************************************************
அடுத்து கலிமை ஷூட்டிங் ஸ்பாட்....
.
எந்த வருசம் ஷூட்டிங் ஆரம்பித்தது என்பதையே மறந்துபோய் காலமற்ற ஒரு வெளியை உள்ளே செல்லும்போதே நாம் உணர்ந்தோம்.
.
நுழைவாயிலில் ஒருவர் தலையை பிய்த்துக்கொண்டு உக்காந்திருக்க...என்ன என்று கேட்டதில் தான் கன்டின்யுவிட்டி பாக்கும் ஆசாமி என்றுசொல்ல விவரம் புரிந்து உள்ளே சென்றோம்.
.
பத்து பைக்குகள் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக பாய்ந்துகொண்டிருக்க நமக்கு எந்த சேதாரமும் வந்துடக்கூடாது என்ற சுயநலத்தில் எஸ்கேப் ஆனோம்!
.

**********************************************************************************
அடுத்து ரெண்டாயிரத்தில் ஒருவன்  பட ஸ்பாட்.

வழிநெடுக கும்மிருட்டு.ஆங்காங்கே எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் தொங்க ரத்தவாடை....


யார்னா இருக்கீங்களா?


ஊ ஊ ஊ என்று ஊதக்காத்து......

 
யார்லாம் இருக்கீங்க?
கும்மிருட்டில் இரண்டு கண்கள் மட்டும்.....
நெல்லாடிய நிலமெங்கே .....
கவுண்டர்: அதெல்லாம் பிளாட்டு போட்டு வித்தாச்சுங்ணா
சொல்லாடிய அவையெங்கே?
கவுண்டர்: அதெல்லாம் ஷாப்பிங் மால் ஆகிடுச்சு!
வில்லாடிய களமெங்கே?
கவுண்டர்:கேட்டட் கம்யூனிட்டி!ஆ நெக்ஸ்ட்...
கல்லாடிய சிலையெங்கே
கவுண்டர்: இதுக்கு கவுன்டர் அடிச்சா வீண் வம்பு!கப்சிப்!
தாய் தின்ற மண்ணே.. தாய் தின்ற மண்ணே....
கவுண்டர்:(கனுசுவின் தலையை பிடித்து ஆட்டியபடி) ஏன்டா பெத்த தாய்க்கு சோறுபோடாம மண்ணை திங்க வச்சிட்டு பெருமையா பாட்டு வேறையா?
. தா தீம்த.. திகு தக..
தா.. திரனன தா.. ஜிகு தக தா..

.
கவுண்டர்: ஓ!தமிழ்ல பாடுனா கலாய்க்கிறோம்னுட்டு துளு மொழில அளக்குறான்.....அடங்கப்பா முடியலடா!எஸ்கேப்!
.

*********************************************************************************
அடுத்து கூர்யா எந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்...எது டிராப் ஆச்சு என்று எதுவுமே புரியாதநிலையில் அவர் வீட்டுக்கே சென்றோம்.வாசலில் பிவக்குமார் " செல்போனை எங்கிட்டே குடுத்துட்டு உள்ள போ ராஜா..ஆ ஆ " என்றுசொல்ல  கீழே விழுந்தால் பிக்ஸல் தெரிச்சிடும் என்ற முன்யோசனை பயத்தில் பவ்யமாக அவரிடம் மொபைலை குடுத்துவிட்டு உள்ளே செல்கிறோம்..நூறு காலர் வச்ச ரவிக்கையும் நூறு காட்டன் புடவையும் பண்டலாக வந்து இறங்க...ஓ!ககுந்தலா தேவி ரீமேக் என்று புரிந்து அதை கடந்து சென்றோம்

தகச்சிக்கு தகச்சின் ....தகச்சிக்கு தகச்சின்....தகச்சிக்கு தகச்சின்....ரட்டட்ட....தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...ரட்டட்டட்

.
என்னாதிது?போதிகாதான் சோலோ படத்துல மட்டும்தான நடிக்கிறாங்க?அப்புறம் எப்படி புஷி பாட்டு?என்று குழம்பியபடி உள்ளே சென்றால் அங்கே பட்டாபட்டியோடு கூர்யா சேறுபூசியபடி நிற்க ரெண்டு பக்கமும் ரெண்டு அல்லக்கைகள் பயர் எஞ்சின் ஹோஸ் வைத்து தண்ணீரை பீய்த்து அடித்துக்கொண்டிருந்தார்கள்...


.
கூர்யா:...ம்...அப்படித்தான்!நல்லா வேகமா அடிங்க!காடிவாசல் படத்துக்காக மெனக்கெட்டு ரெண்டு மாசமா சேத்துளையும் வெயில்லயும் நின்னு ரெடியானா படம் ட்ராப்புன்னுட்டாங்க!அடுத்து சிட்டி சப்ஜக்ட்!பழையபடி ஜூஸ் குடிச்சு தெளியவச்சிட்டுதான் நடிக்க போகணும்!ம்....அப்படித்தான் அப்படியே ரெண்டு இன்ச் வலது இடுப்புல ஃபோர்சா அடி....அப்பாடா...
.
கவுண்டர்: ஏனுங்கணா எதுக்கு அப்படி செய்ய சொல்றீங்க?
.
கூர்யா:காடிவாசல் கேரக்டரோட முகபாவம் எப்பவும் கல்லடைப்பு வந்தவன் மாதிரி இருக்கணும்னு டைரக்டர் சொன்னாரு!அதான் நெஜமாவே....
.
கவுண்டர்: ஆங்!புரியுதுங்!டேய் அல்லக்கை...போய் அண்ணனுக்கு பழம் வாங்கிட்டு வா!ஒண்ணு இங்க இருக்கு!இன்னொன்னு இதான்னு சொன்னான்னா நடக்குறதே வேற!ஓடு!
.
பிவக்குமார்: என்ன இங்க சத்தம்?
.
கவுண்டர்: பம்மியபடி...ஒண்ணுமில்லீங்!என்றபடி வெளியேற நாமும் அவரோடு எஸ்கேப்!
.




********************************************************************************
அடுத்து செக்கந்தராபாத்தில்  ஒரு ஷூட்டிங்  ஸ்பாட்.நுழைவாயிலில்  பெரிய பலகையில்...

ஷூட்டிங் நேற்று நடந்தது.....இன்னக்கி நடக்கல...நாளைக்கி....!!!!!

 

 

என்று எழுதியிருக்க...

.
கவுண்டர்: இஹாஹாஹா என்று நக்கலாக சிரித்தபடி கடந்துசெல்ல நாமும் பின்னால் பம்மினோம்.

**********************************************************************************

அடுத்து காசர் எழுந்தருளும் பாழ்வார்பேட்டை சென்றோம்.....

வழிநெடுக பேனர் கட்டவுட் தோரணங்கள் துண்டுசீட்டு..இத்யாதி...இத்யாதி....

.

அல்லக்கைகளை தாண்டி உள்ளே செல்லவே மூன்று மணி நேரமாகிவிட்டது!உள்ளேயும் பெருங்கூட்டம்.கூட்டத்தின் இடையே லேசாக கிடைத்த இடைவெளியில் எட்டி பார்த்ததில் காசர் டாஸ் போட்டுக்கொண்டிருந்தார்...

...கிண்டியன் 2 ஷூட்டிங் போகணுமா?இல்லாட்டி அக்ரம் ஷூட்டிங்கா?

.


 

டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......

 

நாணயம் காசரின் பேச்சு போல மையமாக நிற்க.....சிறிதுநேர அமைதிக்கு பிறகு...பிரச்சாரம்!ஆரம்பிக்கலாங்களா? என்று கூறியபடி அடிப்பொடிகள் சூழ வெளியேறுகிறார்.

No comments:

Post a Comment