Monday 17 October 2016

Notஆமை-நாட்டமை ரீமேக்

நாட்டாமை-விஜயகுமார் 
பசுபதி- தலைவர்  கவுன்டர் 
கணக்குப்பிள்ளை-மனோபாலா
பட்டாளத்தான்-வெண்ணிற  ஆடை  மூர்த்தி 
மற்றும்  பலர்...
*********************************************************************************
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ  நாட்டாம  பாதம்  பட்டா  அந்த  வெள்ளாம  வெளையுமடி ..நாட்டாம  கை  அசைச்சா  அந்த  போயிங்  விமானமே  நிக்குமடி...
ஆடி  கார்  வந்து  இறங்க  நாட்டாமை  இறங்குகிறார்..கூடவே  தம்பி   பசுபதி  ...ஆலமரத்தடிக்கு  வருகிறார்கள் 


கணக்குப்பிள்ளை: ம்  என்னைய்யா  பாத்துகிட்டு  நிக்குறீங்க?நாட்டாம  காலடி  மண்ண  எடுத்து எல்லாரும்    நெத்தியில  பூசிக்கிங்க
பசுபதி:  க்கும்..நாட்டாம  இப்பத்தான்  அவுட்சைட்  போயிட்டு  வந்திருக்காரு..அந்தக்காலடி  மண்ணை  எடுத்து  பூசுனா சிக்கன்குனியா  இல்ல  மட்டன்குனியாவே  வரும்டா!சொன்னா  கேக்க  மாட்டானுங்களே..
......எல்லாரும்  காலடி  மண்ணை  நெற்றியில்  பூசிக்கொள்ள  ஒருவர்மட்டும்  நைசா  காலடி  மண்ணை  பார்சல்  பண்ணுகிறார்.....
பசுபதி:  அடேய்  என்னடா  பண்ணுற?
ராசப்பன்:  அய்யா  இந்த  மண்ணை  செய்வினக்கி  வெக்குறதுக்காக  எடுத்துட்டு  போறேனுங்க
பசு:  ஆகா  நாம  நெனச்சத  எவனோ  செய்யுறானே..சரி  நல்லா  செய்..இந்த புடி  ஐநூறு..நீ  வெக்குற  வினையில  அடுத்த  பஞ்சாயத்துல  நான்தான்  நாட்டாமையா  இருக்கோணும்
ராசப்பன்:  சரிங்கைய்யா
பசு:  டேய்  ஸ்டாப்..இந்த  நாட்டாமக்கி  வெக்குறாப்ல அடுத்து  எனக்கும்  வெக்கலாம்னு  ப்ளான்  பண்ணாத.நா  தூங்கும்போது  கூட  கால்  பூட்ஸ  கழட்டமாட்டேன்.போடா..
.

நாட்டாமை:  அப்புறம்  பிராது  குடுத்தவன்  எல்லாம்  வந்துட்டானா?
பசுபதி:  பிராது  குடுக்குறவன்  பிஸ்கொத்து   குடுக்குறவன்  எல்லாம்  வந்துட்டான்  ஆரம்பிங்க.
ஒண்டிப்புலி :நாட்டாமகாரய்யா  நியாயம்  செத்துபோச்சு..அநியாயம்  அழிஞ்சு  போச்சு..

....ஒண்டிப்புலி  தலைமுடியை  பிடித்து  ஆட்டுகிறார்  பசுபதி..
ஏண்டா  உனக்கு  குடுத்ததே  இந்த  ஒருவரி  வசனம்தான.அதையும் போட்டு சொதப்புனா எப்படிடா?
டைரக்டர்:  அட  என்னைய்யா  கிளவுட்ஸ்  வருது  .சட்டுபுட்டுன்னு  சீன  எடுத்து  முடிப்போம்.எல்லாம்  டப்பிங்ல  பாத்துக்கலாம்
பசு:க்கும்..எல்லா  படத்துலயும்  இதத்தான  பண்ணுறீங்க?
டைரக்டர்:ஓகே  ரீடேக்
ஒண்டிப்புலி: நாட்டாமகாரய்யா  நியாயம்  செத்துபோச்சு..அநியாயம்  அழிஞ்சு  போச்சு..
நாட்டாம:  என்னடா  சொல்லிப்போட்ட  நீயி?
பட்டாளத்தான்  ஒண்டிப்புலி  காதருகே  வந்து  ,ஏண்டா  போட்டா  என்கிட்டே  சொல்லோணும்னு  சொல்லியிருக்கேனில்ல?அப்புறம்  ஏண்டா  சொல்லல?
ஒண்டிப்புலி:  அய்யா இவுரு  அத  கேக்கலீங்
நாட்:  என்றா  என்றா  அங்க  குசு  குசுன்னு?
பட்டாளத்தான்:  குசுவும்  இல்ல  .கு....(காக்காய்  வந்து  தலையில்  கொத்திட்டு  போகிறது)
பசு:  க்கும்  நீ  தூங்குனாலே  டபுள்  மீனிங்ல  தான  தூங்குவ?
நாட்:  என்றா  என்றா  ப்ராது?
ஒண்டிப்புலி:  அய்யா  நேத்து  செத்துப்போன  குப்புசாமி  பொணத்த  பதினெட்டு  பட்டியில   எந்த  தெரு  வழியாவும்  எடுத்துட்டு  போக  கூடாதுங்க.நீங்கதான்  நல்ல  தீர்ப்பா சொல்லோனும்
பசு:  ஏண்டா 18  பட்டி  வழியாவும்  எடுத்துட்டு  போக  கூடாதுன்னா?பின்ன  எப்படிடா  குப்புசாமிய  அடக்கம்  பண்ணுறது?ஹெலிகாப்டர்ல  எடுத்துட்டு  போக  சொல்றியா?
நாட்:  என்றா  பசுபதி  என்றா  அங்க  முணுமுணுப்பு?
பசு: ஒன்னும்  இல்லீங்
நாட்:  என்றா  ஒண்டிப்புலி  நீ  சொன்னா  மாதிரியே  இந்த  19  பட்டி
பசு:  அய்யா  பக்கத்து  பட்டிய  எக்ஸ்ட்ராவா  சேத்துகிட்டீங்க..
நாட்:  எல்லாம்  எனக்கும்  தெரியும்டா.இந்த  18  பட்டி  வழியாவும்  குப்புசாமி  பொணத்த  எடுத்துட்டு போக  அனுமதிக்க  முடியாது.இதாண்டா  இந்த  நாட்டாமையோட  தீர்ப்பு.
பசு: அய்யா  அப்படி  செஞ்சா  போலீசு  கேசாகி  போகுமுங்,
நாட்:  என்றா  பெரிய  போலீசு?இப்படித்தான்  நம்ம  பதினேழாவது  பட்டியில  ஒரு  கொலைய  விசாரிக்குறேன்னு  ஒரு  இன்ஸ்பெக்டர்  வந்தான்.அவன்  கால  வெட்டி  கெணத்துல  போட்டோமுல்ல
பசு:  க்கும்  பல  வருசமா  துவைக்காத  அந்த  சாக்ஸ்  காலோட  வெட்டி  கெணத்துல  போட்டு  இன்னிக்கும்  அது  குடிக்க  வக்கில்லாம  ஆகிப்போச்சு..இதுல  என்னடா  பெரும?
நாட்:  என்றா  பசுபதி  என்றா  அங்க  முணுமுணுப்பு?
பசு:  அண்ணா  இதே  வசனத்த  திரும்பத்திரும்ப  பேசுனா  க்ளீஷேன்னு  பொறந்த  கொழந்த  கூட  வெளிய  தம்மடிக்க  போயிடுதுங்க.மாத்தி  பேசுங்க.
நாட்:  அதெல்லாம்  முடியாதுடா..இதெல்லாம்  எங்க  பாட்டன்  முப்பாட்டன்  காலத்துலேர்ந்து  செஞ்சிகிட்டு   வாறது.
பட்டாளத்தான்:  அய்யா  அந்தக்காலத்துல  பல  வீடுங்க  வச்சுக்க  அனுமதி  இருந்துச்சிங்க.அந்தமாதிரி  இப்பவும்  அனுமதி  குடுத்தீங்கன்னா...
பசு:  கரக்டா  அவன்  பாயிண்டுக்கு  வந்துட்டான்
பட்டா:  பாயிண்டுக்கு  நா  வரல..அதுதான் ஏ....
பசு:  போதும்டா  டபுள்  மீனிங்கு!
.
டிங்கு :  அய்யா  நம்மூருல  கக்கூசு  கட்டனும்னுட்டு   அதிகாரிங்க  தொல்ல  குடுக்குறாங்கைய்யா..நீங்கதான்  அத  தடுக்கோணும்
நாட்:  என்றா  என்ற  பாட்டன்  முப்பாட்டன்  காலத்துலேர்ந்து ஓப்பனாத்தான் போயி  பழக்கம்.இப்ப  என்றா  வெள்ளக்காரன்  கக்கூசெல்லாம்?
பசு:  அய்யா  நீங்க  வச்சிருக்குற  ஆடி  கார்கூட  வெள்ளக்காரன்  கண்டுபிடிப்புதானுங்க..
நாட்:  அமுத்துடா  பசுபதி .அதுக்காக  எல்லா  விசயத்துலையும்  வெள்ளக்காரன  நாம  பாலோ  பன்னோனுமா?
பட்டாளத்தான்:  அய்யா   வெள்ளக்காரன்  போட்ட  புக்கு  ஒண்ணு  படிச்சேன்  ...
பசு:  நீ  எங்கடா  படிச்ச?படம்  பாத்தன்னு  சொல்லு
பட்டா:  ஆமா  படம்  பாத்தேனுங்க.அதுல  என்னன்ன  மாதிரிலாம்..
பசு:  யோவ்  நிறுத்து.நீ  பஞ்சாயத்த  பிட்டு பட  தேட்டரா  மாத்திடுவ  பேசாம இரு..
நாட்:  கக்கூசு  கட்டணும்னு  சொல்றவன்  நாக்க  வெட்டுலே..கட்ட முயற்சி  பண்றவன்  கைய  எடுலே!
பசு: கருமாந்தரம்  புடிச்சவனுங்களா...

.

வேலு:நாட்டாம  அய்யா  தீர்ப்ப  தப்பா  சொல்லிப்போட்டீங்களே!
நாட்:  என்றா  சொல்லிப்போட்ட  நீயி?
.....பசுபதி  வேலுவின்  சட்டையை  பிடித்து....
டேய்  எதுக்குடா  இப்படி  சொன்ன?
வேலு:  இல்ல  தப்பா  தீர்ப்பு  சொல்லிட்டோம்னு  தெரிஞ்சா  நாட்டாம  நெஞ்சடச்சி  செத்துடுவாருன்னு  சொன்னாங்க.அதான்  டெஸ்ட்  பண்ணலாம்னு
பசு:தப்பா  தீர்ப்பு  சொன்னதுக்காக  நாட்டாமைங்க  எல்லாம்  நெஞ்சடச்சி   சாகணும்னா நாட்டுக்குள்ள  ஒரு  நாட்டாமகூட  இந்நேரம்  உசுரோட  இருக்க மாட்டான்டா!ஏதோ  சினிமா  பாத்துட்டு  வந்து  நாயி  கரடி  உடுது..ஓட்றா..
நாட்:  இந்தமாதிரில்லாம்  இவனுங்க  பண்ணுவாங்கன்னு  தெரிஞ்சிதான்  தினம்  பஞ்சாயத்துக்கு  வாறதுக்கு  முன்னாடி  நாலு ஆஸ்பிரின்  மாத்திரைய  போட்டுட்டுதான்  வரேன்!
பசு:  செம  உசாரா  இருக்கீங்ணா
.
வேலுச்சாமி:  அய்யா  வூட்டுக்கு  தண்ணி  வுடுறதுக்கு  கொழா  போட்டிருக்கானுங்க.ஆனா  அது  மாடசாமி  தெருவழியா  வருதுங்க..அத  ஏத்துக்க  முடியாதுங்க.
நாட்:  என்றா  அந்த  கொழாஎல்லாம்  புடுங்கி  எறிங்கடா
பசு:  ஆமா  புடுங்கி  போட்டுட்டு  தலைல  கொடத்த  வச்சிக்கிட்டு  ஐநூறு  மைல்   போங்க..
நாட்:  என்றா  பசுபதி  நமக்கு  பாரம்பரியம்தான்  முக்கியம்.
பசு:  அய்யா  எனக்கு  ஒரு  விண்ணப்பமுங்க
நாட்:  கேள்றா
பசு:  நம்மூருக்கு  கரண்டு  சப்ளை  பண்ற  கம்பிங்க  கூட  அதே  மாடசாமி  தெருவழியாத்தான்  போகுதுங்க..
நாட்:  இத  ஏத்துக்கவே  முடியாதுடா..எலே  அந்த  ஒயரையும்  புடுங்கி  போடுங்கல
பசு:இன்னிக்கி  பாதி   ஊரு  டெட்  பாடிதாண்டி!
.
ராசப்பன்:  அய்யா  நம்மூரு  சுப்பு  பஞ்சாயத்து  கட்டுப்பாட்ட  மீறி  நடந்துட்டானுங்க.
நாட்:  டேய் இந்த சுப்புவ ஊர விட்டு தள்ளி வக்குறேன்டா.அவன்கூடா ஆரும் பேசக்கூடாது..அவன் செல்லுக்கு ஆரும் ரீசார்ஜ் பண்ணகூடாது..அவன்..
....சொல்லிமுடிப்பதற்கு முன்னமே  சுப்பு  ட்ரேவல்  பேக்  சகிதம்  ஆஜராகிறான்...

சுப்பு :அய்யா,ரொம்ப  நன்றிங்கைய்யா.நா  பட்டணத்துக்கு  போகனும்.உங்க  ஆடி  கார்ல  ஸ்டேஷன் வரைக்கும்  கொண்டுவிட்டீங்கன்னா  நல்லா  இருக்கும்!
பசு:  எகத்தாளத்த  பாரு..ஓட்றா...
.

சிங்காரம்:  அய்யா  அய்யா  தப்பு  நடந்து  போச்சு..ஐயோ  ஐயோ!
பசு:  என்னடா  இது  மொத்த  18  பட்டிக்குமே  ரத்தகொதிப்பு  இருக்குது  போல.பத்து  லாரி  பிரஷர்  மாத்திரைய  ஊரு  கெணத்துல  கலக்கி  உட்டாத்தான்  சரியாகும்  போல!
நாட்:  என்றா  பசுபதி  இது  ரத்த  கொதிப்பில்லடா..ஆதங்கம்..எங்க  பாட்டன்..முப்...
பசு:  அண்ணா  போதுமுங்ணா  ரீல்  அந்து  போச்சு..
சிங்காரம்:  அய்யா  டிரம்மும்  கலரியும்  உங்களுக்கு  போட்டியா  தேர்தல்ல  நிக்க  போராவளாம்.
பசு:  ஹிலாரியும்  டிரம்புமா?அட்ரா  அட்ரா!
நாட்:  யாருடா  அந்த கலரி?யாருலே  அந்த  டிரம்மு?இழுத்துட்டு  வாங்கலே!
பசு:  அண்ணா  அவுங்கெல்லாம்  அமெரிக்காவுல  இருக்குறாங்க.
நாட்:  எந்த  அக்காவுல  இருந்தா  என்னடா?ஊரு  கட்டுப்பாட்டுக்கு   கட்டுப்படாம  எப்படிடா  இருக்க  முடியிம்?
பசு: அண்ணா  நீங்க  அனுமதிச்சா..
நாட்:  என்றா  இழுக்குற?
பசு: நீங்க  அனுமதிச்சா  நா  வேணும்னா  அமேரிக்கா  போயி  அந்த  ரெண்டு  பேரையும்  இழுத்துட்டு  வரட்டுமாங்?
நாட்:  இப்பதாண்டா  நீ  என்ற  தம்பி!தாராளமா  போயிட்டு  வாடா .டேய்  கணக்கு பசுபதி  கேக்குற  காச  குடுத்து  உடு.
கணக்கு:க்கும்.இவன்  ஊரு  சுத்திபாக்க  ப்ளான்  பண்ணுறான்.இது  தெரியாம  நீயெல்லாம்  ஒரு  நாட்டாம..
நாட்:  என்றா  முணுமுணுப்பு?
கணக்கு:  ஒண்ணுமில்லீங்!
பசு: ஒரு  பத்து  எல்  எடுத்து  வய்யி.துணிமணிய  பேக்  பண்ணிட்டு  வரேன்..ஐ  ஆம்  எஸ்கேப்டா!ஜாலியா  அமேரிக்காவுல  ஜல்சா  பண்ண வேண்டியதுதான்.

No comments:

Post a Comment