Friday 5 April 2019

அநீதிக்கதைகள்


                       படத்தில் மூன்று ட்ராக்கில்  மூன்று கதைகள்.படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே மூன்றிலும் எதிர்பாராத திருப்பம்.ஆகா செம விறுவிறுப்பா போக போவுதுன்னு நினைச்சா அதற்குப்பின் நடப்பது வேறு.இந்த மாதிரி தொடர்ச்சியா மூன்று எதிர்பாராத ட்விஸ்ட் வச்சிட்டமே!தொடர்ந்து இந்தமாதிரி ட்விஸ்ட் வச்சா அப்புறம் பல்வேறு குறும்படங்களின் தொகுப்பாகிடும்.அதனால கொஞ்சம் இழுப்போம் என்று இயக்குனர் நினைத்தாரோ என்னவோ!

              அதற்கு பின் ஒவ்வொரு காட்சியையும் தேவைக்கும்  அதிகமான நீளத்திற்கு sustain பண்ணுகிறார்.அது எதுக்குன்னு புரியல!
               படம் நல்லாருக்கா இல்லையா? என்று பைனரியில் பதிலளிக்க முடியாத படங்களுள் இதுவும் ஒன்று.நன்றாக வந்திருக்கவேண்டிய படம் என்பதுமட்டும் உறுதியா சொல்லலாம்!.
    ஷில்பாவுக்கும் மகனுக்குமான அந்த பாச பிணைப்பு.”நானும் அம்மாவும் உன்னை ஏதாவது சொன்னமா?” என்று கேட்கும் அந்த சிறுவன்(ஆரண்ய காண்டத்திலும் இதுபோல ஒரு கெட்டிக்கார சிறுவன் உண்டு) தருணம்;அந்த சப்வேல ஷில்பாவும் (தான் இறைதூதர் என்ற நினைப்பில் வாழும்)அற்புதமும் தற்செயலா சந்தித்து பேசும் காட்சி என்று சில நல்ல தருணங்கள் நிச்சயம் உண்டு.

     ஆனால் இப்படி பல நல்ல தருணங்கள் நிரம்பிய படமாக  வந்திருக்க வேண்டியது. காட்சிகள் பல இழுவையாக இழுக்கப்பட்டதால் அதன் உன்னதத்தை வீரியத்தை இழந்து வெறுமனே பார்வையாளனால் கடந்துபோகும் தருணமாகிவிட்டது.உதாரணமாக முகிலன்-வேம்பு தொடர்பான காட்சிகளில் அவர்களுக்குள் நிகழும் மோதல் பிறகு  ஏற்படும் புரிதல் நன்றாக வந்திருக்க வேண்டியது!ஆனால் வரவில்லை!அந்த காட்சிகளை செல்வராகவன் பட பாணில எடுப்போம் என்று இயக்குனர் நினைத்தாரா அல்லது திரைக்கதை எழுதியவர்களுள் ஒருவர் நினைத்தாரா என்று தெரியல!

மிஸ்கின், நலன் குமாரசாமி, நீலன்.கே.சேகர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.இதில் மிஸ்கின் எழுதிய காட்சிகள் இவைதான் என்று சொல்ல முடியும்.உதாரணமாக அந்த சப்வே காட்சி,ஹாஸ்பிடலில் மனைவி  விடம் கடவுள் குறித்து பேசும் காட்சி சுனாமியில் தப்பித்தது(அவன் கடல்ல விழ போனான்.கடல் அவனை பின்தொடர்ந்தது), அந்த சிலை உடைப்பின் முடிவில் வரும் திருப்பம்  போன்றவைகளை சொல்லலாம்(இவை நானாக ஊகித்து சொல்பவை)!

            இதுல பிரச்சனை மிஸ்கின் படங்களுக்கே உரிய மனதை நெகிழ வைக்கும் அந்த உன்னத தருணங்கள் பல அவர் படங்களில் அற்புதமாக வெளிவந்திருக்கும்.இதுல என்ன நடந்துச்சோ அவர் எழுதியதை காட்சிப்படுத்தும்போது எங்கோ திசை மாறிட்டுதோ என்னவோ..அவை உன்னத தருணங்களாக மாறவில்லை(முன்பு குறிப்பிட்ட சப்வே காட்சி தவிர).
   இதுல முனியாண்டி இப்படத்தை 2006 ல இன்னாரித்து இயக்கத்தில் வந்த  Babel படத்தோடு ஒப்பிட்டிருந்தார்.அப்படமும் இதுபோல மூன்று வெவ்வேறு கதை மாந்தர்கள் விளக்கவியலா ஒரு மெல்லிய இணைப்பு சங்கிலியால் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும்.ஆனால் அப்படம் கன கச்சிதமான காட்சியமைப்பை  கொண்டிருந்தது. இப்படத்தில் அது மிஸ்ஸிங்.

    ஏற்கெனவே தசாவதாரம் படத்தில் இந்த பட்டர்ஃபளை எபெக்டை மையமா வச்சு கதை பண்ணுறேன்னு ஏதோ குழப்பியடித்திருப்பார் கமல்.இப்படத்தில் அவ்வளவு குழப்பங்கள் இல்லை.கடவுளின் இருப்பு தொடர்பான வசனங்கள் உண்டு.ஆனால் விவாதங்கள் இல்லை(தசா அசின் நியாபகம் உள்ளதா?).
   படத்தின் பிற்பகுதியில் வரும் இன்னும் இரு திருப்பங்கள்.ஒன்றை ஊகிக்க முடிந்தாலும் இன்னொன்று நிச்சயம் ஆச்சரியம்தான்(சேட்டு வீட்டில்).ஆனால் அந்த ஆச்சரிய தருணத்தை தாண்டி என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கமான கோடம்பாக்க பார்முலாபடி மொட்டைமாடிக்கு போய்ட்டார்.
     கடைசி சில காட்சிகளில் சுஜாதா எழுதிய கடவுள் புத்தகத்தை அப்படியே இரத்தின சுருக்கமா கேப்ஸ்யூல் வடிவில் கொடுக்கலாம்னு யாரோ ஐடியா கொடுத்திருக்காங்க போல!

          மாணிக்கம்  திருமணம் செய்து மனைவிக்கு  பிள்ளை உண்டானதும் தனது உடலில்  பெண் தன்மை அதிகரித்துக்கொண்டே செல்ல தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்ததாக சொல்லப்படுது(சுனாமி-அற்புதம்-சிலை).இதுல ஷில்பாவின் மனைவியும் மகனுமே அவளை முழுமையாக ஏற்றுகொள்கின்றனர்.அந்த எஸ்ஐ பெர்லின்  (வாய்ப்பு கிடைக்குமானால் ஆண் பெண் திருநங்கை என யாரையும் விட்டுவைக்காத) அணுகும் விதமும், அந்த பள்ளி ஹெட் மாஸ்டர் அணுகும் விதமும் அதிகாரத்தின் அணுகுமுறை.அந்த பள்ளியில் பணியாற்றுவோர் மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் “ அச்சில் வார்த்தெடுக்கப்படும்”  மாணவர்களுமே ஷில்பாவை கேலி கிண்டல் செய்கின்றனர்.இழிவாக பேசுகின்றனர்.”வித்தியாசமான நபர்களை உலகம் கண்டு பயப்படும்” என்று ஷில்பா சொல்வதாக வருகிறது.

     இதுல குறிப்பிடவேண்டிய இன்னொரு கேரக்டர் முகிலன்.ஹீரோவாக ஆவதற்கு முன் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுப்பவன்.அதோடு மட்டுமல்லாமல் திடீர் திடீரென்று சமூக கருத்துக்களை பேசுபவன்(தேசம்னா பக்தி-மொழின்னா பற்று.சாதின்னா மட்டும் வெறியா?).அதற்கும் அவன் காரணம் சொல்கிறான்.பெரிய ஸ்டார் ஆனதும் பேருக்கு முன்னாடி புரட்சி டேஷ்(தலைவலி?) முகிலன்னு போட்டுக்கிட்டு மேற்கூறியபடி  ஆவேச கருத்துக்களை பேசி அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பது(யப்பா!மூச்சு வாங்குது).இப்ப பிரபலமா இருக்கு பல ஹீரோக்களை  இந்த கேரக்டரோடு பொருத்தி பார்க்கமுடியும்.தமிழக அரசியல் வெற்றிடத்தில் பெரிய பாதிப்பை உண்டாக்கிவிட முடியும் என்று பல ஹீரோக்களின் கண்களில் ஆசை மின்னல் மின்னுகிறது.

    ஒருகாலத்தில்  பிட்டு படத்துல நடித்த நடிகை தாயானால் உண்டாகும் பிரச்சனை- சாதாரண நடிகை சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் புரிந்து  தாயானாலும் எதிர்கொள்ள நேரிடும்!பாலியல் உறவுகள் குறித்த அரைகுறை புரிதல்கள் நிரம்பிய சமூகத்தில் இந்தமாதிரியான குழப்பங்கள்(சன்னி லியோனுக்கு பிள்ளை பிறந்தால் அது என்ன மனநிலையில் இருக்கும்?) நேரிடுவது இயல்பே!இதை crisp ஆ சொல்லாம ஜவ்வா இழுத்து முடித்திருக்கிறார்கள். 

   சமூகத்தில் நிகழும் ஆனால் பலரும் விவாதிக்க விரும்பாத சம்பவங்களை படத்தில் காட்டியுள்ளார்கள்."இவையெல்லாம் இங்க நிகழவே இல்லை" என்று ஒருவர் சொன்னால் அவர் நிஜ உலகம் அறியாதவர் என்பதை தவிர சொல்றதுக்கு  வேறேதும் இல்லை!
 தேவையற்ற காட்சிகள் லாஜிக் ஓட்டைகளும் உண்டு. வீட்ல அறிமுகமில்லாத சிலர் உக்காந்திருக்கும் போதே பாடியை டிஸ்போஸ் செய்ய முயலும் காட்சி ஒரு உதாரணம்.
                         ஆரண்ய காண்டம் படத்தில் வந்த அந்த ஒலி வடிவமைப்பை இப்படத்திலும் கேட்க முடிந்தது.ஒரு அறையில் இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தெருவில் வெங்காயம் விற்பவனின் குரல்,ஏதேனும் ஸ்பீக்கரில் பாடல் ஓடிக்கொண்டிருந்தால் அடைத்த தொனியில் கேட்கும் பாடல்,வாகனம் செல்லும் சத்தம் etc..etc.. என்று அவ்வகையே இப்படத்திலும் துல்லியமாக  கேட்க முடியுது.

அப்புறம் இப்படம் குறித்த விமர்சனங்கள்.படம் சார்ந்தவை அல்ல.”இப்படிலாம் வசனம் காட்சிகள் வச்சு படமெடுத்தா சம்முவம் கெட்டுடாதா?” என்ற கலாச்சார காவலர்கள் கூச்சல்.இதுக்குமேலையுமா சம்முவத்தை கெடுக்க முடியும்?சிறுவர் சிறுமிகளின் மிக அபிமான ஸ்டார்கள் சிலர் தமிழில் உள்ளனர்.அவர்கள் படத்திற்கு குடும்பத்தோடு அவர்கள் செல்வர்.அப்படங்களில் வராத வக்கிரமா?ஆபாசமா?ஐட்டம் சாங்கா?இரட்டை அர்த்த வசனமா இதுல இருக்கு?இது வெளிப்படையா “ஆமா நாங்க இதைப்பத்தி பேசுறோம்” என்றுதான் எடுத்திருக்கிறார்கள்.

              வரிவிலக்கிற்காக பல படங்கள் யு சான்றிதழ் எப்படி பெற்றது என்பது நமக்கு தெரியும்!அப்படங்களில் உள்ள காட்சிகளில் இல்லாத வக்கிரமா?தவிர வக்கிரம் என்பது மறைமுகமா சக்கரை பூச்சோடு ஒன்றை சொல்லும்போதே கனத்து ஒலிக்கும்!நேரடியாக சொல்லும்போது அதன் போலி ஈர்ப்புகள் கவர்ச்சிகள் காணாமல் போகும்!
             விஜய் சேதுபதி வழக்கமான தேய்வழக்கு வசன உச்சரிப்பிலிருந்து முதன்முறையாக விலகி பேசியிருக்கிறார்.ஆனாலும் அப்பப்போ "என்னாச்சு?" ங்கிற நடுவுல கொஞ்சம்...பட perplexed முழிப்பை இதிலும் காண முடியுது!ஃபகத் ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் வேறு பரிமாணத்தை தொடுகிறார்!


யுவனின் பின்னணி பல இடங்களில் அற்புதமாக உள்ளது.வழக்கமா தற்போதைய "வடசென்னை மீட்பு" டிரென்ட்படி ஒரு கானா வச்சு கொல்லாமல் இருந்ததற்காகவே இயக்குனருக்கும் இசை அமைப்பாளருக்கும் நன்றி!



              அப்புறம் “ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டனும்”னு வசனம் பேசி படம் முழுக்க எப்படி ஃபிராடு வேலை செய்வதுன்னு டெமோ காட்டிட்டு கடைசில கிராமத்துல விவசாயம் பண்ண போறேன்னு நமக்கே அதிர்ச்சி கொடுத்த சதுரங்க வேட்டை  பட நடராஜ் படத்துக்கு எதிரா  ஓவரா கூவியிருக்கார்.”கில்மா கதை புத்தகத்துல எல்லாத்தையும் விளக்கிட்டு கடைசில இதையெல்லாம் செய்ய கூடாது தப்புன்னு சொல்ற அயோக்கியத்தனம்” என்று  படத்துலயே அவருக்கு பதிலிருக்கு!
       அப்புறம் ஷில்பா ஒரு திருநங்கை இல்லையாம் Transvestite(மாற்று பாலினத்தவரின் உடைகளை விரும்பி அணிபவர்) னு இன்னொரு ஒலக விமர்சகன் கூவுறான்.அஞ்சு ரூவாக்கி ஒரு ஜிபி டேட்டா குடுத்ததுல இந்தமேரி அரைவேக்காட்டுகள் அதிகம் உருவானதுதான் மிச்சம்.இதுக்குமேல இதுபத்தி எதுவும் சொல்ல விரும்பல!
.
             ஒரு மனிதனின் செயல் இன்னொரு மனிதனின் செயலில் வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும் என்கிறார்கள்.இப்படம் ஒரு மகத்தான படமா வந்திருக்க வேண்டியது.திரைக்கதைல ஏதோ ஒரு சிறு சறுக்கல் நிகழ அது இன்னொரு சறுக்கலை உண்டாக்கி அதனால் மற்றொரு சறுக்கல் என்று  மாபெரும்  பட்டர்ஃபளை எபெக்டை படத்திலும் காணமுடியுது!
.
டிஸ்கி 1: பொதுவா தியேட்டர்ல படம் ஆரம்பிச்சு அரை மணிநேரம் வரை எவனாவது வந்துகினே இருப்பான்.இந்த படம் சர்பிகேட் என்பதாலோ என்னவோ ஒரு மணி நேரம் வரை இருட்டில் ரகசியமா பலர் வந்து அமர்ந்தனர்.அவர்கள் வேறு ஏதோ எதிர்பார்ப்பில் வந்துவிட்டது மட்டும் உறுதி.
டிஸ்கி 2: இருக்குற ட்விஸ்ட்ல எல்லாம் பெரும் ட்விஸ்ட் கடைசில தியேட்டர்ல ஓடும்  பிட்டு படத்துல ஓணாண்டி புலவர் டாக்டர் கேரக்டர்ல வந்ததுதான்!செம ட்விஸ்ட் மாமு!
டிஸ்கி 3:  விஜய் சேதுபதிக்கு ரசிகைகள் நிறைய உண்டு போல!!ஆண் துணையோடோ தனியாகவோ வந்திருந்தனர்.அவர்களில் சிலர்  படம் முக்கால்வாசி நடந்துகொண்டிருக்கும் போதே வெளியேறியதை காண முடிந்தது.(நிச்சயம் இப்படம்  வணிக சினிமாவை எதிர்பார்த்து வந்தோருக்கு ஒருவித அசவுகரியத்தை தரும்!)
டிஸ்கி 4: படத்திற்கு இப்பதிவின் தலைப்பே முதலில் வைக்கப்பட்டிருந்தது.அதுவே சாலப்பொருத்தம் என்பது என் கருத்து.
     

No comments:

Post a Comment